Headlines

வெற்றிலை ஏற்றுமதியாளர்களின் ‘தீர்வை’ பிரச்சினையை பாகிஸ்தான் அரசு தீர்க்கவேண்டும் பதில் தூதுவரிடம் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து

வெற்றிலையை இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, அந்த நாடு இறக்குமதி வரியை மேலும் அதிகரித்துள்ளமையால் வெற்றிலை உற்பத்தியாளர்களுக்கு  ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து, கைத்தொழில் வர்த்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை (31.07.2017) பாகிஸ்தான் தூதுவர் அஹமட்கான் சிப்றாவிடம் எடுத்துரைத்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர தன்னுடன் தொடர்பு கொண்டு, வெற்றிலை உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில்  எடுத்துரைத்ததாகவும், இந்த விடயத்தை பாகிஸ்தான் அரசாங்கம் சாதகமாக பரிசீலித்து, வெற்றிலை ஏற்றுமதியாளர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் நன்மை பயக்க வேண்டுமென அமைச்சர்…

Read More

தமிழ்க்கூட்டமைப்புடனான நெருக்கத்தை பயன்படுத்தி முல்லைத்தீவு காணிப்பிரச்சினையை தீர்க்கப்போவதாக கூறியவர்கள் எங்கே? முள்ளியவளையில் அமைச்சர் ரிஷாட் கேள்வி

தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தனக்குமிடையே இருக்கும் நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தி, முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றத்தடைகளை நீக்கப்போவதாக முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் பகிரங்கமாக உறுதியளித்திருந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவுப் ஹக்கீம் இற்றைவரை இது தொடர்பில் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளார்? என மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கேள்வி எழுப்பினார். முல்லைத்தீவில் நேற்று முன்தினம் (29.07.2017) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் கூறியதாவது, ‘வன்னி அமைச்சரின் பிழையான அணுகுமுறைகளாலும், அவரது…

Read More

வாழைச்சேனை கடதாசி ஆலை புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

வாழைச்சேனை கடதாசி ஆலை கொரிய நாட்டு நிதி உதவியுடன் புணரமைப்பு செய்யப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தலைமையில் நேற்று (புதன்கிழமை) இடம் பெற்ற கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்,வாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் நிறைவேற்று தவிசாளர் மங்கள செனரத், கொரிய நாட்டின் சார்பாக கிம்…

Read More

பெண்களின் விகிதாசாரம் 25 வீதமாக இருக்க வேண்டும் என்பதால் அரசியல்கட்சியினர் மகளீரை தேடிவரும் காலம் வரவுள்ளது எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

உள்ளுராட்சித் தேர்தலில் பெண்களின் விகிதாசாரம் 25 வீதமாக இருக்க வேண்டும் என்பதால் அரசியல்கட்சியினர் மகளீரை தேடிவரும் காலம் வரவுள்ளது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மகளிர் அமைப்பின் 13 ஆவது வருட நிறைவு நிகழ்வில் அவர் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையல், பிரதேசத்தில் பல முன்னேற்றகரமான செயல்களை செய்யும் பெண்களை கண்டுகொள்ளாத கட்சியினர் தற்போது…

Read More

அரசியல் தீர்வில் அதியுச்சத்தைக் கோருவோர், முஸ்லிம்களை மிதிக்க நினைப்பது ஏன்? முல்லைத்தீவில் அமைச்சர் றிஷாட்

வடக்கு முதலமைச்சர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகள் இந்தப்பிரதேச மக்களுக்கு மேற்கொண்ட சேவைகளைக் காட்டிலும், தானும் தனது அணியும் மிகவும் நேர்மையான முறையில் கனதியான, காத்திரமான அதிகளவு பணிகளை செய்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு, முள்ளியவளை நீராவிப்பிட்டியில் மீள்குடியேற்ற விசேட செயலணி ஊடாக வீடமைப்புக்கான நிதி உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மாகாண சபை உறுப்பினர் யாசீன் ஜவாகிர்,…

Read More

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழிற்றுறை திட்டங்கள்- அமைச்சர் றிஷாட்.

யுத்தத்தால் பாதிப்படைந்து நலிவுற்று வாழும் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப கைத்தொழில் வர்த்தக அமைச்சு மேற்கொண்டு வரும் தொழிற்றுறைத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுபீட்சம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவையினால் மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள நறுவிலிக்குளத்தில்  அமைக்கப்பட்டுள்ள பனம் பொருட்கள் உற்பத்திக் கிராமம் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்து கொண்டார்….

Read More

மாந்தை மேற்கு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலில் இணைத்தலைவர்களான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இன்று (29) இடம்பெற்றது.  இதுவரை நடந்து முடிந்துள்ள அபிவிருத்திகள், நடந்து கொண்டிருக்கும் அபிவிருத்திகள் மற்றும் மேலதிக அபிவிருத்திகளுக்கு தேவைப்படும் நிதிகள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது

Read More

கொக்கேன்  சம்பவத்திற்கும் சதொசவிற்கும் தொடர்பு இல்லை அமைச்சர் ரிஷாட் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

கொக்கேன் சம்பவத்திற்கும் சதொச நிறுவனத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, பாராளுமன்றத்தில் இன்று (20.07.2017) எழுப்பிய வாய் மூல வினாவிற்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சதொசவை நான் பொறுப்பேற்ற பின்னர், இந்த நிறுவனம் எந்தவொரு பண்டங்களையும் இறக்குமதி செய்யவில்லையெனவும் தனியார் வழங்குனர் மூலமே இந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சீனிக் கொள்கலனில் கொக்கேன் இருந்ததை…

Read More

அரிசித் தட்டுப்பாட்டை நீக்க நெல் சந்தைப்படுத்தும் திணைக்களத்திடமிருந்து நெல் கொள்வனவு

நெல் சந்தைப்படுத்தும் திணைக்களத்திடம் இருந்து கூட்டுறவு மொத்த  விற்பனை நிலையம் 55000 மெற்றிக் தொன் நெல்லை உடனடியாகக் கொள்வனவு செய்து அதனைக் குற்றி லங்கா சதொச நிலையத்திற்கு வழங்குவதென்ற முடிவை வாழ்க்கைச் செலவுக் குழு மேற்கொண்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உப குழு பாராளுமன்றத்தில் கூடிய போது அரிசியைத் தட்டுப்பாடில்லாமல் நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பாக ஆராய்ந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், நெல் சந்தைப்படுத்தும் திணைக்களத்திலிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல் அடுத்த…

Read More

கைத்ததொழில் வளர்ச்சிக்கென யுனிடோ நவீன கட்டமைப்பொன்றை செயற்படுத்துகின்றது. அமைச்சர் றிஷாட் பதியுதீனுடனான சந்திப்பில் பிராந்தியப் பிரதிநிதி தெரிவிப்பு

இலங்கையின் கைத்தொழில் துறை வளர்ச்சிக்கென ஐக்கிய நாடுகள் 9.2 இலக்கினைக் கொண்ட  கட்டமைப்பொன்றை செயற்படுத்தவிருப்பதாகவும் இதன் மூலம் கைத்தொழில் மறுசீரமைப்பை மேம்படுத்த உதவுள்ளதாகவும் புதுடில்லியை தளமாகக் கொண்டு இயங்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தின் (யுனிடோ) பிராந்தியப் பிரதிநிதி ரெனே வான் பேக்கல் தெரிவித்தார். கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கொழும்பில் சந்தித்து பேச்சி நடத்திய போதே அவர் இத்தகவலை வெளியட்டாh. இச்சந்திபில் யுனிடோவின் இலங்கைக்கான பிரதிநிதி நவாஷ் ரஜாப்டின், அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் ஹிமாலி…

Read More

முசலி பிரதேச சபைக்குட்பட்ட அலைக்கட்டு மற்றும் பொற்கேணி கிராமத்திற்கான அபிவிருத்தி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் மீள்குடியேற்ற துரித செயலணியின் இணைத்தலைவரும்  அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முசலி பிரதேச சபை அலைக்கட்டு மற்றும் பொற்கேணி கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஸாஹிரா பாடசாலைக்கான புதிய கட்டடம் பொற்கேணி கிராமத்திற்கான மைதானம் மற்றும் பொற்கேணி பெரிய ஜும்மா பள்ளிவாசலுக்கான சுற்று மதில் போன்றவை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும்…

Read More

புல்மோட்டை, இறக்கண்டி , ஜமாலியா , மூதூர் பிரதேசங்களில் சிறு தையல் தொழில்சாலை பயிற்சி நிலையங்கள் அப்துல்லா மஹ்ரூம் திறந்துவைத்தபோது

புல்மோட் டை, இறக்கண்டி , ஜமாலியா , மூதூர் பிரதேசங்களில் சிறு தையல் தொழில்சாலை பயிற்சி நிலையங்கள் , பயிற்சிகள் ஆரம்பம். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாட் பதீயுதீன் அவர்களால் திருகோணமலை மாவட்ட யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கானதிட்டத்தின் கீழ் சுய தொழிலை உருவாக்கிகொடுக்கும் நோக்கில், சிறு தையல் தொழிட்சாலை பயிற்சி நிலையங்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களினால் புல்மோடடை , இறக்கண்டடி , ஜமாலியா ,…

Read More