வில்பத்து வன பிரதேசங்களை முஸ்லிம்கள் அழிக்கவில்லை – திலக் காரியவசம்
வில்பத்துவில் வன பிரதேசங்களை முஸ்லிம்கள் அழிக்கவில்லை. முஸ்லிம்கள் தாங்கள் குடியிருந்த காணிகளையே துப்புரவு செய்து குடியேறியுள்ளனர். பொதுபலசேனா அமைப்பும், சில சூழலியலாளர்களுமே வில்பத்து தேசியவனம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தவறாகப் பிரசாரம் செய்கிறார்காள். இதன் பின்னணியில் பொதுபலசேனா அமைப்பே செயற்படுகிறது என தேசிய சூழலியலாளர் அமைப்பைச் சேர்ந்த சூழலியலாளர் திலக் காரியவசம் தெரிவித்தார். சிவில் அமைப்புகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்ட வில்பத்து விவகாரம் தொடர்பான கலந்துரையாடலொன்று கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு ரமடா ஹோட்டலில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில்…
