Headlines

அற்ப காரணங்களுக்காக நீண்ட காலமாக சிறையில் வாடும் இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும்

அற்ப காரணங்களுக்காக நீண்ட காலமாக சிறையில் வாடும் இளைஞர்களை விடுதலை செய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கை வேண்டும். மீள்குடியேற்ற அமைச்சு குழு நிலை விவாதத்தில் ரிஷாட் வலியுறுத்து அமைச்சின் ஊடகப்பிரிவு ஆயுத போராட்ட காலத்தில் போராடியவர்களுக்கு சிற் சில உதவிகளை மேற்கொண்டவர்களை நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைத்திருக்காமல் அவர்களை விடுவிக்க பாராளுமன்ற அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றினைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் அமைச்சின் குழு நிலை விவாதத்தில்…

Read More

தமிழ் நாட்டின் இதயத்தாயின் மறைவு; தமிழ்  மக்களின் நீங்காத நினைவு

06.12.2016 மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறது. திரையுலகில் முன்னோடி நட்சத்திரமாக இருந்த புரட்சி நடிகர் MGR அவர்களின் பாதையில், தமிழ் நாட்டின் புரட்சித் தலைவியாக விளங்கி, தமிழ் நட்டு மக்களால் “அம்மா” என்று அழைக்கப்பட்ட, காலம் சென்ற முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழ் மக்களுக்கும், தமிழுக்கும், உலகளாவிய தமிழர்களுக்கும் குரல் கொடுத்த தலைவி என்பதில் ஐயமில்லை. “அம்மா…

Read More

“எத்தனை தடைகள் வந்தாலும் புத்தள அபிவிருத்தியை முன்நகர்த்தி செல்வோம்” – அமைச்சர் றிஷாத்

எத்தனை தடைகள் வந்தாலும் புத்தளத்தின் அபிவிருத்தியை முன்நகர்த்தி செல்வோம் என்றும் கடந்த காலங்களில் அரசியல் அதிகாரங்கள் பதவிகள் இருந்த போதும் இந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதில் முட்டுக்கட்டைகளும் தடைக்கற்களும் போடப்பட்டதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் நகர மண்டபத்தில் அகில இலங்கை மக்கள் கங்கிரஸின் ‘விழித்தெழு புத்தளமே’ என்ற நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார். புத்தளம் மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சை, 2015-2016 கல்வியாண்டில் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்கள், க. பொத. சாதரண தரத்தில் சிறந்த பெறுபேறு…

Read More

க.பொ.த. சா/த பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பிரதியமைச்சர் அமீர் அலி வாழ்த்து

க.பொ.த. சா/தரப் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, சித்தியடைந்து தாம் கல்வி கற்கும் பாடசாலைகளுக்கும் மற்றும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

Read More

க.பொ.த(சா/த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் றிஷாத் வாழ்த்து

க.பொ.த(சா/த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் றிஷாத் வாழ்த்து தெரிவித்தார். பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்று, சிறந்த கல்வியலாளர்களாகவும் சமூக சிந்தனையாளர்களாகவும் வர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Read More

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாடு

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாடு இம்மாதம் 11 ஆம், 12 ஆம், 13 ஆம் திகதிகளில் கொழும்பு-7 சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை மன்ற மண்டபத்தில் நடைபெறுகிறது. இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வின் தொடக்க விழா எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 04 மணி முதல் இரவு 08 மணிவரை அல்ஹாஜ் மசூர் மௌலானா அரங்கில் இடம்பெறவுள்ளது. இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர்…

Read More

நல்லாட்சியை கொண்டுவந்ததன் நோக்கம் நிறைவேறியுள்ளதா?

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் முழுப்பங்களிப்பினை நல்கிய போதும், ஆட்சி மாற்றத்தினை அவர்கள்  ஏற்படுத்தியதன் நோக்கம் நிறைவேறியுள்ளதா? என்ற வினாவுக்கான விடையை ஒவ்வொரு முஸ்லிம் மகனும் தேடிக் கொண்டிருப்பதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அனுராதபுரம் விவேகானந்தா கல்லூரியில் மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரகுமான் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர்…

Read More

“இனவாதத்தை நிறுத்தி நிம்மதியாக வாழவிடுங்கள்” – அமைச்சர் றிஷாத் உருக்கம்

இனவாதத்தை நிறுத்தி நிம்மதியாக வாழவிடுங்கள். கடந்த அரசாங்கத்திற்கு நடந்தது இந்த நாட்டில் அனைவருக்கும் ஒரு படிப்பினை என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சர்ஜான் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாம் அரசியல்வாதிகளாக விரும்பி வந்தவர்கள் அல்ல. அரசியல்வாதிகளாக வருவோம் என்று நினைத்தவர்களும் அல்ல. அரசியலைப்பற்றி சிந்திக்க முடியாத காலத்தில் எங்களுடைய மக்களின் கண்ணீரும் கம்பளையுமே எங்களை அரசியலுக்குள் தள்ளியது….

Read More

அல் அக்ஸா வீதியின் புனரமைப்பு பணிகளுக்கு; அமீர் அலி 30 இலட்சம் நிதி ஒதுக்கீடு

நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த ஒட்டமாவடி அல் அக்ஸா வீதியின் புனரமைப்பு பணிகள் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் ரூபாய் 30 லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ் வீதியின் வேலைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

Read More