Headlines

கல்பிட்டி பிரதேசஅல் அக்ஸா பாடசாலைக்கு உதவி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உபதலைவரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ எம்.எச்.எம். அல்ஹாஜ் நவவி அவர்களின் 2016ம் ஆண்டின் பண்முகப்படுத்த பட்ட நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் கல்பிட்டி பிரேதேசத்தில் அல் அக்ஸா பாடசாலைக்கு 100,000.00 ரூபா பெறுமதியான (Projectar) மற்றும் அல் ஹிரா ஆரம்ப பாடசாலைக்கு 50,000.00 பெறுமதியான காரியாலய தளபாட பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு 2016/11/30 A.R.M. முசம்மில் தலைமையில் நடைபெற்றது.

Read More

தொழுகைகளில் குனூத் ஓதவும்… ஜம்மியத்துல் உலமா கோரிக்கை

தொழுகைகளில் குனூத்  அன் நாஸிலா ஓதுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா முஸ்லிம்களை கேட்டுக் கொண்டுள்ளது. இன்று முற்பகல் அவர்களின் உத்தியோகபூர்வ ட்விட்டர் சேவையிலே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. அத்துடன் தொழுகைகளில் குனூத்  அன் நாஸிலா  ஓதுவதின் வழிமுறைகள் தொடர்பிலும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது உங்கள் பார்வைக்கும… குனூத் அல்-நாஸிலா பற்றிய சில தெளிவுகள்: அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்  செயலாளர், பத்வாக் குழு  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.   துஆ என்பது ஒரு வணக்கமாகும்….

Read More

இனக் கலவரத்தை உருவாக்கவே ஞானசார தேரர் உலமா சபையிடம் விளக்கங்களைக் கோரியுள்ளார் – அமைச்சர் றிஷாத்

இவற்றை உலமா சபை கவ­னத்­திற்­கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார். பொது­ப­ல­சேனா அமைப்பு குர்ஆன் அத்­தி­யா­யங்கள் சில­வற்றைக் குறிப்­பிட்டு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யிடம் அவற்­றுக்­கான விளக்­கங்­களைக் கோரி­யி­ருப்­பது தொடர்பில் கருத்து வின­விய போதே அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் விடி­வெள்­ளிக்கு இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துதெரி­விக்­கையில்; நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றது….

Read More

கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம். எஸ். எஸ். அமீரலியுடனான நேர்காணல்

நேர்காணல் எம். ஏ. எம். நிலாம் கேள்வி: முஸ்லிம் சமூகம் இன்றும் கூட நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு இவற்றை தீர்க்க முயற்சிப்பதில்லை. தமிழ் தலைவர்கள் ஓரணியில் இணைந்து செயற்படுபடுவது போன்று ஏன் முஸ்லிம் தலைவர்களால் ஒன்றுபட முடிவதில்லை. தெளிவான விளக்கம் தருவீர்களா? பதில்: முஸ்லிம் சமூகத்தில் இளைஞர்கள் தமிழ் இளைஞர்கள் போன்று ஒரு போதும் ஆயுதமேந்தியவர்களாகச் செயற்படவில்லை. அவர்கள் ஆயுதமேந்தியதன் காரணமாக தமிழ் அரசியல் தலைவர்கள் அடங்கிப்…

Read More

புத்தளம் கரைத்தீவில் அ.இ.ம.கா. கட்சிக்காரியாலயம் திறந்து வைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மக்கள் சேவையை விஸ்தரிக்கும் முகமாக கட்சிக்காரியாலயம் புத்தளம் கரைத்தீவில் அமைச்சர் றிஷாத் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி, அலி சப்ரி, எஹ்யா ஆப்தீன், Dr இல்யாஸ், இணைப்புச் செயலாளர் இர்ஷாத் றஹ்மதுல்லாஹ், கட்சி ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More

மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத்

மன்னார் கூலாங்குளம் அரசினர் கனிஷ்ட வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டபோது.

Read More

கொண்டச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மரகத விழா

கொண்டச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் மரகத விழாவும், பரிசளிப்புவிழாவும் கல்லாறு சஞ்சிகை வெளியீட்டு விழாவும் நேற்று (1) இடம்பெற்றது. இதன் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன், கோட்ட கல்விப்பணிப்பாளர், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பெற்றார், பாடசாலை அபிவிருத்திக்குழு உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Read More

சமூக அபிவிருத்தி நலனோன்பு அமைச்சின் 2017ஆம் ஆண்டு வரவுசெலவுக்கான குழு நிலை விவாதத்தின்போது

சமூக அபிவிருத்தி நலனோன்பு அமைச்சின் 2017ஆம் ஆண்டு வரவுசெலவுக்கான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் றிஷாத் உரையாற்றும்போது.

Read More

சுஐப் காசிமிற்கு “கல்லாறு” சஞ்சிகை வழங்கி வைப்பு

சிலாவத்துறை கொண்டச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் மரகத விழா நடை பெற்ற போது 1962 ஆம் ஆண்டு பாடசாலையின் அதிபராக பணியாற்றிய வி எம் காசிம் அவர்களின் ஏக புதல்வன் சுஐப் எம் காசிம் இற்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் பாடசாலையின் வெளியீடான “கல்லாறு” சஞ்சிகையை வழங்கி வைத்தார்.

Read More