பேராதெனியவில் துப்பாக்கிச்சூடு:கடை உரிமையாளர் பலி
கண்டி, பேராதெனியவில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபரொருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி, பேராதெனியவில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபரொருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்வது தொடர்பிலான கேள்வி பத்திரம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை இறுதி தீர்மானம் எடுக்குமென மின்சக்தி மற்றும் சக்திவலு பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹ்தான் பெரியவன் என்ற வார்த்தையை முழங்கி கொண்டு துருக்கிய குடியரசு அதிபர் ரெசிப் தயிப் எர்டோகன் அவர்கள் இஸ்தான்புல்லில் உள்ள உலகின் மிக நீண்ட பாலத்தை இன்று -26- திறந்து வைத்தார்.
விசாரணைகளைத் திசை திருப்பும் நோக்கிலேயே பம்பலப்பிட்டி வர்த்தகரைக் கடத்திச்சென்று கப்பம் கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பம்பலப்பிட்டிய பகுதியில் வசிக்கும் வர்த்தகரான மொஹமட் சுலைமான் கடந்த 21ஆம் திகதி கடத்தப்பட்ட நிலையில் அண்மையில் மாவனெல்ல பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், குறித்த கொலை சம்பவம் தொடர்பில் ஐந்து பேருக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் நேற்று தடை விதித்ததுள்ளது. கொலை செய்யப்பட்டவரின் உறவினர்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை நேற்று நிறைவடைந்துள்ள நிலையில், சுலைமான் கடத்தப்பட்டு 4 மணித்தியாலங்களுக்குள்…
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. விலைமனுக் கோரல் மோசடிகள் தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுக்கு தண்டனை விதிக்கப்படக்கூடிய வகையில் பொது முயற்சியான்மை சட்டமூலமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விலை மனுக் கோரல் மோசடிகளுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மோசடிகளுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட…
-சுஐப் எம்.காசிம் – கடந்த ஆட்சிக்காலத்தில் சதோச நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பில், விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சதொச நிறுவனத்துக்கு பொறுப்பான தற்போதைய அமைச்சர் என்ற வகையில், சில விளக்கங்களை அவர்களின் அழைப்பின்பேரில் இன்று காலை அங்கு சென்று தான் வழங்கியதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று மாலை (26/08/2016) தெரிவித்தார். எதிர்வரும் 29 ஆம் திகதியே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு தன்னை அழைத்திருந்த போதும், அன்றைய தினம் தனக்கு பல வேலைப்பழுக்கள்…
தென்னமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் கடந்த 52 ஆண்டுகளாக அரசு படைகளுக்கும், இடதுசாரி ‘பார்க்’ கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வந்தது. இதன் காரணமாக 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். பல லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர். இந்நிலையில் அரசுக்கும், ‘பார்க்’ கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தையில் இந்த அரை நூற்றாண்டுகால சண்டையை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதுதொடர்பாக கொலம்பியா அரசு தரப்பினரும், ‘பார்க்’ என்றழைக்கப்படும் மார்க்சிஸ்ட் கொரில்லா போராளிகளும்…
சார்க் அங்கத்துவ நாடுகளின் நிதியமைச்சர்கள் கலந்து கொள்ளும் எட்டாவது வருடாந்த மாநாடு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று நடைபெறுகிறது. பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் இலங்கையின் சார்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்து கொள்வார். தெற்காசிய பிராந்திய வங்கித்துறை மற்றும் சுதந்திர வர்த்தகம் தொடர்பான விடயங்கள்; இந்த மாநாட்டில்கலந்துறையாடப்படவுள்ளன. இன்றைய கூட்டத்தில் சுங்க நடவடிக்கைகள் இரட்டை வரி தவிர்ப்பு,முதலீட்டு வாய்ப்புக்கள், வங்கித்துறை ஒத்துழைப்பு முதலான விடயங்கள் விடங்கள் விரிவாக கலந்துறையாடவுள்ளன. மாநாட்டை முன்னிட்டு…
கொழும்பு நடைமுறை மாநாட்டில் ஐந்து பிரதான விடயங்கள் தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எட்டப்பட்டதாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகொரல தெரிவித்துள்ளார். அவர் நேற்று (25) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயத்தை குறிப்பிட்டார். தொழிலாளர்களின் ஆற்றல்களை கண்டறிதல், சிறப்பான தொழில்வாய்ப்புகள், பயிற்சி வாய்ப்புகள், தொழில் சந்தை ஆய்வு, அந்நிய நாட்டு செலாவணியை முறையாக கவர்ந்திழுத்தல் ஆகிய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டதாக அமைச்சர் கூறினார். கொழும்பு நடைமுறையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் பங்கேற்கும் கூட்டமும்,…
நாட்டில் உள்ள பிரச்சினைகளை எதிர்கால சந்ததியினர் மீது சுமத்தாமல் தேசிய அரசாங்கத்தின் மூலம் தீர்வு காண்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்று உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் தகவல் தொழில்நுட்ப நிலையத்தையும் ஐந்த மாடிகளைக் கொண்ட மாணவர் விடுதி கட்டடத் தொகுதியையும் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார். கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் டி….
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் (26) பாராளுமன்றுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மன்னார் – விடத்தல் தீவ கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்களை கடற்படையினர் நேற்று (25) கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து கண்ணாடியிலை படகு, ஜி.பி.எஸ் கருவி மற்றும் தங்கூசி வலை ஆகியன கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.