Headlines

முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்கக் கூடாது – ஜனாதிபதி

முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் போது பாதுகாப்புத் தரப்பு பிரதானி ஒருவர் புர்காவை தடை செய்ய வேண்டுமென யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். எனினும் இந்த யோசனைக்கு ஜனாதிபதி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகள் உள்ளிட்ட தீவிரவாத செயற்பாடுகளினால் நிலவும் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு தடை விதிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது இந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் உண்டா என ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஐரோப்பாவின்…

Read More

கலவரங்களின் பின்னணியில் செயற்பட்ட அரசு

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற கலவரங்களின்போது அப்போது இருந்த அரசாங்கங்கள் அதனை தடுக்காமல் அதற்கு பின்னணியாக இருந்து செயற்பட்டுள்ளன என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். அத்துடன் இனப்பிரச்சினைக்கு தீர்வாக புதிய அரசியலமைப்பினூடாக அனைவருக்கும் சமஉரிமை வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். 2014ஆம் ஆண்டு அளுத்கமவில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாக புத்திஜீவிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

இலங்கை அணி மீது தாக்குதல் : 4 பேர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 4 தீவிரவாதிகள் இன்று அந்நாட்டு பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் ரஹ்மான், அப்துல் வகாப், அர்ஷாட் மற்றும் சுபைர் அலைஸ் நைக் முகமட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது இடம்பெற்ற தாக்குதலில் 9 பேர் காயமடைந்திருந்தனர். லாகூர் நகரில் உள்ள கடாபி விளையாட்டு மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்ற போட்டியின் போது இந்த தாக்குதல்…

Read More

விபத்தில் 12 பேர் காயம்

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் நாவலபிட்டியிலிருந்து வட்டவளை நோக்கி வந்த வானும் கினிகத்தேன- கடவள பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் பஸ்ஸில் பயணித்த 9 பேரும் வானில் பயணித்த 3 பேரும் காயமடைந்த நிலையில், கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் பஸ் தவறான…

Read More

புதிய அரசியலமைப்புக்கான பிரேரணை

பல்லின, பல சமய, பல கலாசாரத்தை அடையாளமாக கொண்டுள்ள இலங்கை மக்களின் தேவைகளை உணர்ந்து அரசியலமைப்பு உருவாக்கப்படாமையே கடந்த இரு குடியரசு அரசியலமைப்புகளும் தோல்வியடைந்தமைக்கு காரணமாக அமைந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் அதே தவறை மீண்டும் செய்யாது நாம் அனைவரும் ஒருமித்து வாழ்வதற்கான அடிப்படைகளை புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். மேலும் புதிய அரசியலமைப்புக்கான பிரேரணையை 2017 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட விவாதத்துக்கு நடைபெறுவதற்கு முன்னர் பாராளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அதற்கான…

Read More

சிங்கள மக்கள் இனவாதிகள் அல்ல: பிரதமர்

-க.கிஷாந்தன் – தமிழ், சிங்களம், முஸ்லீம் என மூவின மக்களும் இலங்கையில் ஒற்றுமையாக வாழும் ஒரே பிரதேசம் நுவரெலியா மாவட்டமாகும். இலங்கையில் உள்ள சிங்கள மக்களை இனவாதிகளாக வெளிநாட்டவர்கள் வர்ணித்து கேள்வி கேட்கின்றார்கள். ஆனால் இலங்கையில் ஒரு சில சிங்களவர்களே இனவாதிகளாவர். அனைத்து சிங்களவர்களும் அல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அட்டனில் தெரிவித்தார். மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மையான அங்கத்துவத்தினை பெற்றுக் கொள்ளும் முகமாக ஐ.தே.கட்சியின் தலைவரும், நாட்டின் பிரதமமந்திரியுமான ரணில்…

Read More

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் நியமனம்

இலங்கைக்கான  இந்திய உயர்ஸ்தானிகராக டரான்ஜித் சிங் சந்து நியமிக்கப்ப ட்டுள்ளார். வை.கே.சிங்ஹா பிரிட்டனுக்கான  தூதுவராக நியமிக்கப்படவுள்ள நிலையில், புதிய இந்திய உயர்ஸ்தானிகராக டரான்ஜித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளதாக நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் கொன்சூ லராக அவர் செயற்பட்டிருந்தார் 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தை காலத்திலும் டரான்ஜித் சிங்…

Read More

ஃபெபெட்ஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி

ஃபெபெட்ஸ் ஸ்ரீலங்கா மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் கண்காட்சி எதிர்வரும் வியாழக்கிழமை 26ஆவது தடவையாக ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கண்காட்சி நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.

Read More

ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை கொல்ல முயற்சி?

ஜெர்மனி பெண் அதிபர் ஏஞ்சலா மெர்கல். ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து செக்நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்தார். அதற்காக விமானம் மூலம் செக் குடியரசு நாட்டின் தலைநகர் பிராக் புறப்பட்டு சென்றார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் புறப்பட்டு வெளியே வந்தார். அவரது காருக்கு பின்னால் ஏராளமான போலீஸ் வாகனங்கள் பாதுகாப்பாக அணி…

Read More

அமெரிக்காவின் நியூயார்க்கில் வட்டமிட்ட பறக்கும் தட்டு

ஆலிவுட் நடிகை ரோவன் பிளான்சார்ட். இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கியுள்ளார். அங்கு அழகான சூரிய அஸ்தமனத்தை போட்டோ எடுத்தார். அப்போது அவரது காமிராவில் தற்செயலாக பறக்கும் தட்டு படம் சிக்கியது. இதனால் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்த அவர் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த படத்தின் பறக்கும் தட்டு ஒன்று நியூயார்க் நகரில் வட்டமிடுவது போன்று உள்ளது. இந்த போட்டோவை பார்த்த 90 சதவீதம் பேர் இது உண்மையான பறக்கும் தட்டு என கருத்து…

Read More

பான் கீ மூன் வருகை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது: வாசுதேவ

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அவசரமான இலங்கை விஜயம் சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன. எவ்வாறாயினும் செயலாளர் நாயகத்தை வரவேற்கின்றோம் . ஆனால் சர்வதேச விசாரணைகளுக்கு உள் நாட்டில் இடமில்லை என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவுடனான ஒப்பந்தத்தின் உண்மை நிலையை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் வருகையின் போது அறிந்துக் கொள்ள முடியும். நல்லாட்சி அரசாங்கத்தின் போலியான வேஷமும் பிரசாரமமும் கலையப்போகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து…

Read More