Headlines

தொடர்ந்து விளம்பர அறிவிப்பு செய்த பெண்: ஆத்திரத்தில் கொலை செய்த ஆசாமி

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நவீன ஆடையகத்தில் தொடர்ந்து விளம்பர அறிவிப்பு செய்த பெண்ணை நபர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்கோவில் நவீன ஆடையகம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார் 25 வயதான அன்னா நசோவா என்பவர். இவர் தனது ஆடையகத்தில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு தொடர்ச்சியாக ஒலிபெருக்கியில் விளம்பரம் செய்து வந்துள்ளார். இவரது கடை அமைந்துள்ள அதே கட்டிடத்தில் குடியிருந்து வருகிறார் 58 வயதான ஸெர்ஜி கிளாக்கோவ் என்பவர். ஆடையகத்தில் இருந்து தொடர்ச்சியான…

Read More

திலங்கவிடம் 1000 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரும் அர்ஜூன

பிரதிசபாநாயகரும் ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவருமான திலங்க சுமதிபாலவிடம் 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சட்டக்கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறியே இந்த நட்டஈடு கோரப்பட்டுள்ளது. இந்த மாத முதல்பகுதியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கான தேர்தலில் திலங்க சுமதிபால வெற்றி பெற்றார். இதனையடுத்து போட்டியில் தோல்வியடைந்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கிரிக்கட் வியாபார மாபியாவின் கைகளுக்கு சென்று விட்டதாக குறிப்பிட்டார். இதனையடுத்து திலங்க சுமதிபால தெரிவித்த…

Read More

சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள சம்பூர் பாலகனின் மரணம்

சம்பூர் பகுதியையே சோகத்துக்குள்ளாக்கியுள்ள ஆறு வயதுப் பாலகனான குகதாஸ் தருஷனின் மரணத்தின் மர்மத்தை மருத்துவ அறிக்கைகள் மூலமோ அல்லது விசாரணை அறிக்கைகள் மூலமோ முழுமைக் கண்டு பிடிக்கப்பட முடியாத நிலையில் பல்வேறு சந்தேகங்கள், ஊகங்கள் எழுந்துள்ளன. இதேவேளை சிறுவனின் மரணம் தொடர்பில் உடனடியான முடிவுக்கு வரமுடியவில்லை. அத்துடன் தேவையான ஆதாரங்களை திரட்டியதன் பேரிலும் பல்வேறு பரிசோதனைகளையும் ஆய்வுகளை மேற்கொண்டதன் பேரிலுமே மரணத்துக்கான காரணத்தைக் கூற முடியும் என திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரசாயனப் பகுப்பாய்வு மற்றும் மருத்துவ…

Read More

தெற்கு அதிவேக வீதியில் வாகனங்கள் மீது கல்வீச்சு

தெற்கு அதிவேக வீதியில் பயணித்த வாகனங்கள் மீது கற்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசர பொலிஸ் சேவை மற்றும் மோட்டார் சைக்கிள் பொலிஸாரின் எண்ணிக்கை வீதியில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மேலதிகமாக தெற்கு அதிவேக வீதிக்கு அண்மித்த பிரதேசங்களிலும் பொலிஸ் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் வீதிப் பாதுகாப்பு மற்றும் வாகனம் தொடர்பான பதில் பொலிஸ்மா அதிபர் அமரசிரி தெரிவித்துள்ளார். அதிவேக வீதியின் 21 ஆவது மைற்கல்லுக்கு அண்மையில் இருவர் வீதியில் பயணித்த வாகனங்கள் மீது கற்களை வீசியதாக முறைப்பாடு கிடைத்துள்ளதுடன் 6 வாகனங்கள்…

Read More

உதவி பொலிஸ் அத்தியட்சகரை கைது செய்ய உத்தரவு

எம்­பி­லிப்­பிட்­டிய பொலிஸ் பிரி­வுக்கு பொறுப்­பாக இருந்த உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சர் டீ.டப்­ளியூ.சி.தர்­ம­ரத்ன மற் றும் எம்­பி­லி­ப்பிட்­டிய பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த தலைமை பொலிஸ் பரி­சோ­தகர் எஸ்.ஆர்.ஜே.டயஸ் ஆகி­யோரை உட­ன­டி­யாகக் கைது­செய்­யு­மாறு நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது. குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு எம்­பி­லி­பி­டிய நீதவான் நீதி­மன்றின் மேல­திக நீதிவான் பிர­சன்ன பெர்­ணான்டோ இந்த உத்­த­ரவை பிறப்­பித்­துள்ளார். கடந்த 4 ஆம் திகதி இரவு எம்­பி­லி­பி­டிய பகு­தியில் இடம்­பெற்ற விருந்து நிகழ்­வொன்றின் போது, பொலி­ஸா­ருக்கும் மக்­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற மோதலில் படு…

Read More

மட்டக்களப்பில் 78 பேருக்கு டெங்கு

இந்த வரு­டத்தின் ஜன­வரி முதலாம் திகதி முதல் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 78 பேர் டெங்கு நோய்த் தாக்­கத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக மாவட்ட பிராந்­திய சுகா­தாரப் பணிப்­பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.ரஹ்மான் தெரி­வித்தார். இதே­வேளை, இந்த வரு­டத்தில் நுளம்­புப்­பெ­ருக்­கத்­துக்கு ஏது­வாக சூழலை வைத்­தி­ருந்த 30 பேருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­ய­வந்­துள்­ளது. இந்த மாவட்­டத்தில் டெங்கு நோய்த் தாக்­கத்தைக் குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில், நாளொன்­றுக்கு 100 வீட்டு வளா­கங்­களில் சோதனை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. வீட்­டுப்­பீ­லிகள், கிண­றுகள் உள்­ளிட்­ட­வற்றில்…

Read More

தேசிய வைத்தியசாலையில் வேலை நிறுத்த போராட்டம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூட அதிகாரிகள் இன்று (28) காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவ சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெறுவதாக அதன் தலைவர் அஜித். பீ. திலகரத்ன கூறினார். குறித்த கோரிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தாவிட்டால் மேலும் பரந்தளவிலான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Read More

ஆடம்பர வாழ்வை துறந்து இஸ்லாத்தை ஏற்ற பாடகி

“Love and Hip Hop” பாடகி, நியா லீ (Nyalee) தனது ஆடம்பர இசையுலக வாழ்வை துறந்து இஸ்லாத்தை ஏற்றார். “நான் உண்மைகளை அறிவதற்காக பதில்களை தேடினேன். அதை இஸ்லாத்தில் மிக அழகாக கண்டுகொண்டேன்.” Instagram பக்கத்தில் தனது மாற்றத்தை வெளியிட்டுள்ள இவர், இது இரண்டுவருட தேடலின் முடிவாகும் என்று கூறியுள்ளார். ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்பிய நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு, அல்லது அதன்படி வாழ்வதற்கு உரிமையுண்டு. இது எனது சொந்த முடிவாகும் என்றும் கூறியுள்ளார் நியா லீ. Love…

Read More

இலங்கையில் முதலிட தீர்மானித்துள்ளோம் – சவூதி இளவரசர்

”உதயமாகும் கிழக்கு – புதிய வாய்ப்புகள்” எனும் தொனிப்பொருளில் ”கிழக்கின் முதலீட்டு அரங்கம் 2016” நாளைய தினம் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. கிழக்கின் முதலீட்டு அரங்கம் 2016 இல் கலந்து கொள்வதற்காக சவுதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சவுத் இன்று (27) நாட்டிற்கு வருகை தந்தார். இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சவூதி தீர்மானித்துள்ளதாகவும் இந்நாட்டின் அபிவிருத்தியில் பங்குகொள்வதன் மூலம் தம் நாட்டினை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் சவுதி இளவரசர் தெரிவித்தார்.

Read More

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்தே, பலஸ்தீனர்கள் தாக்குகின்றனர் – பான் கி மூன்

“இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே பலஸ்தீனர்கள் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்” என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் அண்மையில் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்தானது தீவிர வாத இஸ்ரேலுக்கு பெரும் இடியாக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

ஞானசாரவின் கைது தொடர்பில், மஹிந்த வாய் திறந்தார்..! (வீடியோ)

நாட்டின் சட்டம் வெவ்வேறு முறைகளில் செயற்படுத்தப்படுவது தொடர்பாக மக்கள் திருப்தி அடையவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஞானசாரவின் கைது தொடர்பில்  தெரிவித்துள்ளார். நேற்று (27) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

Read More

அமைச்சர் றிஷாதின் நேற்றைய பாராளுமன்ற உரை

– ஊடகப்பிரிவு – நமது நாட்டின் கூட்டுறவுத்துறை சார்ந்தவர்கள் நேர்மையாக செயற்பட்டால் மாத்திரமே இந்தத்துறையில் நாம் முன்னேற்றம் காண முடியும் என்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் கூட்டுறவுத் துறையில் பணிபுரிவோர் நேர்மையைக் கடைப்பிடிப்பதனாலேயே, அந்த நாடு இன்று கூட்டுறவுத்துறையில் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்று (27)மாலை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கூட்டுறவுத் துறை தொடர்பான கேள்வியொன்றை எட்வேட் குணவர்த்தன எம்.பி பாராளுமன்றத்தில் எழுப்பிய போது அமைச்சர் றிஷாட் அதற்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு…

Read More