Headlines

நேபாள முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மரணம்

நேபாளி காங்கிரஸ் கட்சி தலைவரும், நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் இன்று (9) காலமானார். அவருக்கு வயது 79. சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் பனாரஸ் நகரில் பிறந்த கொய்ராலா, நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக அரசியலில் ஈடுபட்டு சுமார் 16 ஆண்டுகாலம் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருந்தார். விமான கடத்தல் தொடர்பாக இந்தியாவில் உள்ள சிறைகளில் 3 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த இவர், கடந்த 10-2-2014 அன்று நேபாள நாட்டின் பிரதமராக பதவி ஏற்றார். நேபாளத்தில் கடந்த ஆண்டு அறிமுகம்…

Read More

அரசதுறை நிறுவனங்களில் வெற்றிடங்கள் பட்டதாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை

– ஆர்.கிறிஷ்­ணகாந் – பட்­ட­தா­ரி­க­ளுக்­காக அர­சாங்க நிறு­வ­னங்­களில் 17000 தொழில் வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­ற­தென்றும் இவ்­வெற்­றி­டங்­க­ளுக்கு பொருத்­த­மான தகு­தி­யு­டைய பட்­ட­தா­ரி­களை தேர்வு செய்­வ­தற்­காக குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இக் குழு தொடர்­பான அறிக்­கை­யொன்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார நட­வ­டிக்­கைகள்  இரா­ஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் மேற்­கொள்­ளப்­படும் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் குறித்து விசேட கலந்­து­ரை­யாடல் ஒன்று விரைவில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. வேலை­யில்லா பட்­ட­தா­ரி­களின் பிர­ச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் பொருட்டு…

Read More

கட்சி ஒழுக்க விதிகளை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!- ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தராதரம் பாராது ஒழுக்க விதிகளை மீறுவோர் தண்டிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்றிரவு (8) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களுடனான சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டுமென அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர். சில தரப்பினர் கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு…

Read More

ஊழல் தடுப்பு அட்டவணையில் இலங்கை முன்னேற்றம்

ஊழல் தடுப்பு தொடர்பான சர்வதேச அட்டவணையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமை குறித்து புதிய அட்டவணை மூலம் தெரிய வந்துள்ளது. ட்ரான்பேரன்சி இன்டர்நெசனல் எனப்படும் சர்வதேச அமைப்பு வருடாந்தம் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியல் ஒன்றை வெளியிட்டு வருகின்றது. இதன் பிரகாரம் பூச்சியம் புள்ளிகளைப் பெறும் நாடுகள் ஊழலற்ற நாடுகளாகவும், 100 புள்ளிகளைப் பெறும் நாடுகள் ஊழல் தலைவிரித்தாடும் நாடுகளாகவும் பட்டியலிடப்படுகின்றன. இந்த ஆண்டின் பட்டியலில்’ இலங்கை 37 புள்ளிகளைப் பெற்று 83வது .இடத்தில் உள்ளது….

Read More

பசில் ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் விசாரணை

ஊழல் மோசடிகள் குறித்து, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளக விமானப் பயணங்களுக்காக விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களை சில் ராஜபக்ச பயன்படுத்தியதாகவும், இதற்காக பல கோடி ரூபா கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பசில் ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரிடம் நேற்று (8) ஜனாதிபதி…

Read More

ஜனா­தி­பதி, பிர­தமரை இன்று சந்­திக்­கிறார் செயிட் அல் ஹுசைன்

இலங்­கைக்கு நான்கு நாள் உத்­தி­யோகபூர்வ விஜயம் மேற்­கொண்டு வரு­கை­தந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆகி­யோரை இன்­றைய தினம் (9) சந்­திக்­க­வுள்ளார். இவ்­வி­டயம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசை­னு­டைய இலங்­கை விஜ­யத்தின் இறுதி நாள் இன்­றாகும். இந்­நி­லையில் ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் இன்று காலை 8 மணிக்கு எதிர்க்­கட்­சி­யான தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை கொழும்­பி­லுள்ள உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் சந்­திக்­க­வுள்ளார்….

Read More

மியான்மரின் அடுத்த அதிபர் யார்?

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் நாட்டில் ஜனாதிபதியாக தெயின் சீன் பதவி வகித்து வருகிறார். இங்கு கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக உரிமை கோரி போராடி வந்தவரும், நோபல் பரிசு பெற்ற பெண்மணியுமான ஆங்சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மியான்மரில் 1962-ம் ஆண்டுக்கு பின்பு ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தல்…

Read More

வெள்ளை மாளிகையிலும் வை-பை என்றால் பிரச்சினை தான்

உலகின் நாட்டாமையாக வலம் வரும் அமெரிக்காவின் அதிகாரத்தை பறைசாற்றும் இடங்களில் ஒன்று வெள்ளை மாளிகை. ஆனால்  அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையிலும் வை-பை சரியாக இல்லை என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒபாமா அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் “வெள்ளை மாளிகையிலேயே பல இடங்களில் வை-பை இணைப்பு கிடைப்பது இல்லை. பழமையான கட்டிடமான வெள்ளை மாளிகையில் ஏராளமான பகுதிகளில் சுத்தமாக வை-பை வேலை செய்வதில்லை.”  என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இணையத்…

Read More

சிறையில் யோஷித்தவின் தொலைபேசி பயன்பாடு – அறிக்கை கோரும் அமைச்சர்

சிறைச்சாலைக்குள் யோஷித்த ராஜபக்ஷ மொபைல் போன் பயன்படுத்துவது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். பணச்சலவை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் யோஷித்த ராஜபக்ஷ, சில தினங்களுக்கு முன்னர் தனது உறவினர்களை சந்தித்து விட்டு சிறைக்கூண்டுக்கு திரும்பும் வேளையில் அவரது பாக்கெட்டிலிருந்து மொபைல் ஒன்று கீழே விழுந்துள்ளது. சிறை விதிகளின் பிரகாரம் எந்தவொரு கைதியும் மொபைல் போன் பயன்படுத்த முடியாது. எனினும் யோஷித்த நவீன வகை மொபைல் போன் ஒன்றை சிறைக்குள்…

Read More

முஸ்லிம்களின் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட வேண்டும் – சுஷ்மாவிடம் றிஷாத் வலியுறுத்து

பல தசாப்த கால­மாக இலங்­கையில் புரை­யோடிப் போயுள்ள இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வில் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு மிகவும் முக்­கி­ய­மாக காணப்­ப­டு­கி­றது. அதனால் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வில் முஸ்லிம் மக்­களின் அபி­லா­சை­களும் உள்­வாங்­கப்­பட வேண்டும். இதனை இந்­தியா உறுதி செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் கைத் தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­ச­ரு­மான றிஷாத் பதி­யுதீன் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜிடம் வேண்­டுகோள் விடுத்தார். அமைச்சர் றிஷாத் பதி­யுதீன் கடந்த சனிக்­கி­ழமை இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மாவை…

Read More

கூகுள் பலூன் செயல்திட்டம் வெகுவிரைவில் இலங்கையில்

அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்காக கூகுள் பலூன் செயல்திட்டம், இலங்கையில் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக,தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரும், பதுளை மாவட்ட எம்.பி.யுமான ஹரின் பெர்ணன்டோ குறிப்பிட்டார். அதிவேக இணைய சேவைகள் தொடர்பாக, அமைச்சரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேற்படி, இணையசேவைகள் குறித்து, கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றையும் செய்துள்ளோம். இத்திட்டத்தின் பிரகாரம், நாட்டின் பலபாகங்களிலும் பாரிய ஹிலியம் பலூன்கள் பறக்கவிடப்பட்டு,சோதனைகள் நடாத்தப்படவுள்ளன. இதன் முதலாவது சோதனை, இம்மாத இறுதியில் இரத்மலானையில் நடைபெறும் எனவும் அவர்…

Read More

முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்

கடந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்களுக்காக வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ வாகனங்கள் மற்றும் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் அனைத்தும், இன்னும் அரசாங்கத்திடம் ஒப்படைக்காத நிலையில், அவர்களுடைய பெயர் விவரங்களை எதிர்வரும் நாட்களில் ஊடகங்களுக்கு வெளியிடவுள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணியினர் தெரிவித்துள்ளனர். குறித்த முன்னணியின் தலைவரால் இந்த பெயர்ப்பட்டில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More