பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது!
– மட்டு.சோபா – ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதி மன்ற நீதிபதி எம்.கணேசராசா உத்தரவிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,…
