Headlines

பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது!

– மட்டு.சோபா – ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் கொலை தொடர்பில் சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­டுள்ள தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்­சியின் தலை­வரும் கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­ச­ரு­மான சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் உட்­பட நான்கு  பேரின் விளக்­க­ம­றியல் நீடிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி எதிர்­வரும் மார்ச்  9 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­ மன்ற நீதி­பதி எம்.கணே­ச­ராசா உத்­த­ர­விட்­டுள்ளார். கிழக்கு மாகா­ணத்தின் முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்சித் தலை­வ­ரு­மான சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன்,…

Read More

மஹிந்தவின் விளம்பரங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்பு!

சுயாதீன தொலைக்காட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு, சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக எந்தவொரு அடிப்படையிலும் அரச தலைவர்களின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் இலவசமாக ஒளிபரப்புச் செய்யப்படவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவராக கடமையாற்றிய…

Read More

வாக்குறுதிகளை அமுல்படுத்துங்கள் – மன்னிப்புச் சபை

இலங்கை அளித்த வாக்குறுதிகளை அமுல்படுத்த வேண்டுமென அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. பொறுப்பு கூறுதல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் செயற்படுத்தப்பட வேண்டியத அவசியமானது என தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்த அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கியுள்ளது. எனினும், பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப இதுவரையில் சொற்பளவிலான நடவடிக்கைகளே இலங்கையில் எடுக்கப்பட்டுள்ளன….

Read More

மேலும் இரு சுங்க அதிகாரிகள் கைது

இலங்கையில் பதிவான மிகப் பெரிய இலஞ்ச தொகையாக கருதப்படும்  12.5 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்ற சுங்க அதிகாரிகள் விவகாரத்துடன் தொடர்புபட்ட மேலும் இரு சுங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழு இவர்களை இன்று (25) கைது செய்தது. சுங்க அத்தியட்சர்களான வசந்த விமலவீர மற்றும் உபாலி செனரத் விக்ரமசிங்க ஆகியோரே இவ்வாறு கைதுச் செய்யப்பட்டதக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்…

Read More

“நிறைவேற்று அதிகாரங்களை பிரதமருக்கு வழங்க முடியாது”

புதிய அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் பிர­த­ம­ருக்கு நிறை­வேற்று அதி­காரம் செல் ­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதற்கு இச்­ச­பையில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலம் கிடைக்­கா­தென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்­று­வது குறித்த பிரே­ரணை மீதான விவா­தத்தில் நேற்று புதன்­கி­ழமை கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதா? தற்­போது காணப்­படும் அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை மேற்­கொள்­வதா? என்­பது தொடர்பில் வேறு­பட்ட கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன. ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஒன்­றி­ணைந்த…

Read More

மஹிந்த ராஜபக்ஷ யுக புருஷர்

மஹிந்த ராஜ­பக் ஷ இந்­நாட்டில் யுத்­தத்தை முடித்து வைத்த யுக புரு­ஷ­ராவார். அவரை சிறையில் அடைப்­ப­தற்கு எடுக்­கப்­படும் முயற்­சிகள் தவ­றான செயற்­பா­டாகும் என நேற்று சபையில் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன தெரி­வித்தார். புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் தொடர்பில் ஐ.ம.சு.மு. பங்­காளிக் கட்சித் தலை­வர்­க­ளான தினேஷ், விமல், வாசு­தேவ ஆகி­யோரின் ஆத­ரவு கிடைத்­துள்­ள­தா­கவும் அமைச்சர் குறிப்­பிட்டார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற அர­சி­ய­ல­மைப்பு சபை தீர்­மானம் தொடர்­பான விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன இவ்­வாறு தெரி­வித்தார். அமைச்சர்…

Read More

தனித்து செயற்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக   பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்  மாகாணசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களும் எக்காரணத்தை கொண்டும் தனித்துவமாகவோ அல்லது சுயாதீனமாகவோ செயற்பட முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். அதையும் மீறி தனித்துவமாக செயற்பட்டால்  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சியின் மத்தியகுழு தீர்மானம் எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (24) நடைபெற்ற…

Read More

தலதா மாளிகையின் முன்னால் மோதல்

கண்டி – தலதா மாளிகையின் முன்னால் உள்ள வீதியை திறக்குமாறு கோரி இரு தரப்பினருக்கு இடையில் மோதல் இடம் பெற்றுள்ளது. வீதியை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவிற்கும் மற்றும் வீதியை மூடி வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவுக்கும் இடையிலேயே குறித்த மோதல் இடம் பெற்றுள்ளது.

Read More

எம்பிலிபிட்டிய இளைஞனின் மரண அறிக்கை வெளியீடு

எம்பிலிபிட்டிய தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் மரண அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. இரத்தினபுரி வைத்தியசாலையின் மருத்துவ உத்தியோகத்தர் டி.பி.குணதிலகவால் தயாரிக்கப்பட்ட சட்ட மருத்துவ அறிக்கையை எம்பிலிபிட்டிய மேலதிக் நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டார். பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் வெட்டு காயத்திலிருந்து அதிகளவு இரத்தம் வெயியேறியதால் மரணம் ஏற்பட்டதென கூறப்பட்டுள்ளது.

Read More

நிஷாந்தவின் விண்ணப்பம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது

முன்னாள் சி.எஸ்.என். பணிப்பாளர் நிஷாந்த ரணதுங்க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திருத்திய பிணை விண்ணப்பத்தை மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என் ரணவக்க விசாரணைக்காக இன்று (19) எடுத்துக்கொண்டார். திருத்தப்பட்ட பிணை மனுவில் ரணதுங்கவின் வழக்கறிஞர் சளினிவட்டுவஹெட்டடி, சட்டமா அதிபரையும் நிதிக்குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் இருவரையும் பிரதிவாதிகளாக குறிப்பிட்டிருந்தார். பிரதிவாதிகளை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்துக்கு வருமாறு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

வீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து (படங்கள்)

– பா.திருஞானம் – பூண்டுலோயா துனுக்கேதெனிய பிரதேசத்தில் அரச பேரூந்து ஒன்று இன்று (19) காலை சேவையை ஆரபிக்கும் போது ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பாதையை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது மோதியதில் பேரூந்தும் வீடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஹட்டன் டிப்போவிற்கு சொந்தமான இந்த பேரூந்து இரவு வேளையில் இப்பிரதேசத்திலேயே நிறுத்தி வைக்கப்படும். காலையில் பூண்டுலோயா நகரத்திலிருந்து ஹட்டனுக்கு தனது சேவையை தொடர்ந்து வந்துள்ளது. இவ்வாறான நிலையிலேயே…

Read More

டொனால்ட் டிரம்ப் கிறிஸ்துவரே அல்ல: போப் பிரான்சிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் டொனால்ட் டிரம்ப் ஒரு கிறிஸ்துவரே அல்ல என உலகம் முழுவதும் வாழும் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை குருவான போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என கூறி சர்ச்சையில் சிக்கினார் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா-மெக்சிகோ இடையில் மதில் சுவர் கட்டவேண்டும் எனவும் யோசனை தெரிவித்தார். அந்த கருத்திற்காக அமெரிக்காவில் மட்டும் அல்ல உலக முழுவதும் அவருக்கு எதிர்ப்பு அதிகரித்துவரும் நிலையில்…

Read More