Headlines

வீடுகளை அகற்றியமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்

பாலத்­துறை கஜுமா தோட்­டத்தில் சட்­ட­வி­ரோத குடி­யிருப்புக்கள் உடைக்­கப்­பட்­டுள்­ள­மை­யி­னை­ய­டுத்து அங்கு வசித்த மக்­க­ளுக்கு தமது வதி­விடம் தொடர்பில் மாற்று நட­வ­டிக்கை ஒன்றை முன்னெ­டுக்க சம்­பந்­தப்­பட்ட அமைச்சு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இதற்­கான அனைத்து ஒத்­து­ழைப்­பு­களை வழங்க தயா­ராக இருக்­கின்றோம் என்று கல்வி அமைச்­சரும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பிரதி செய­லா­ள­ரு­மா­கிய அக்­கி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்­துள்ளார். இவ்­வி­ட­யத்தை அடி­ப­டை­யாக கொண்டு ஒரு சிலர் அர­சியல் இலாபம் தேட முனை­வ­தா­கவும் அவர் சுட்­டி­காட்­டி­யுள்ளார். பாலத்­துறை கஜுமா தோட்­டத்தில் வீடுகள் அகற்­றப்­பட்­டமை தொடர்­பிலும் அதற்கு…

Read More

வடக்கிற்கு செல்லும் பரணகம ஆணைக்குழு

காணமல்போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரணை செய்யும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் முதலாம் திகதி வரையில் நான்கு நாள் அமர்வுகளை யாழ்ப்பாணத்தில்  நடத்தவுள்ளது. நான்கு தினங்களும் முற்பகல் 8.30முதல் மாலை 5.30 வரையில் அமர்வுகள் இடம்பெறவுள்ளன. 27ஆம்திகதி வலிகாமம் கிழக்கு(கோப்பாய்) வடமராட்சி வடக்கு(பருத்தித்துறை) வடமராட்சி தென்மேற்கு(கரவெட்டி) ஆகிய பிரதேச சபைளுக்காக வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலத்திலும் 28ஆம் திகதி தீவகம் தெற்கு(வேலணை), ஊர்காவற்துறை, காரைநகர், நெடுந்தீவு ஆகிய…

Read More

இலங்கையில் பறக்கும் படகு சேவை ஆரம்பம்

சுற்றுலா துறையில் முன்னேற்றம் காணும் முயற்சியில் முதல் தடவையாக இலங்கையில் பறக்கும் படகு சேவையை  17 ஆம் திகதி முதல் அறிமுகபடுத்தியுள்ளது. பரா மோட்டார் உதவியுடன் இயங்கும் இந்த பறக்கும் படகு சேவை வெலிகம கடற்கரை பகுதியில் ஆரம்பமாகியது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிபிடத்தக்கது.

Read More

கொழும்பில் 16 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

கலட்டுவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் கொழும்பில் சில பகுதிகளில் 16 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய ஹங்வெல்ல, மீபே, பாதுக்க, ஹோமாகம, கொட்டாவ, கலு அக்கல, ருக்மல்கம, பெலவத்த, கொடகம, பன்னிப்பிட்டிய, மத்தேகொட ஆகிய பகுதிகளிலேயே நாளை (20) பிற்பகல் 01 மணி முதல் மறுநாள் 21 ஆம் திகதி வரையிலான 16 மணித்தியாலங்கள் குறித்த நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது….

Read More

ஜனாதிபதி இன்று ஆஸ்த்திரியா நோக்கி பயணம்

ஜேர்மனிக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துகொண்ட ஜனாதிபதி இன்று ஆஸ்த்திரியா நோக்கி பயணமாகவுள்ளார். இவ்விஜயத்தின் போது ஆஸ்த்திரியா ஜனாதிபதி ஹெய்ன் பிஷ்கர் உட்பட முன்னணி அரச பிரதிநிதிகளையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்தவுள்ளார். சிறந்த சமூக, சந்தைப் பொருளாதார வளர்ச்சி கொண்ட ஆஸ்த்திரியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்திக்கொள்ளும் முக்கிய நோக்கத்துடன் ஜனாதிபதி இவ்விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

என்னை இலகுவில் விரட்ட முடியாது – மஹிந்த

‘ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலேயே நான் இன்னுமிருக்கின்றேன். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைவிட்டு விரட்டுவதற்கு முயற்சித்தாலும், என்னை இலகுவில் விரட்டிவிட முடியாது’ என்று, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாக அறையில் நிறுவப்பட்டுள்ள பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்களை விசாரணைக்கு உட்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர், நேற்று ஆஜரானார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவுக்காக சுயாதீன…

Read More

மூன்று வழக்குகளிலிருந்து ஷிராணி விடுதலை

3 வருடங்களாக, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தவில்லையெனக் குற்றஞ்சாட்டி, முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த 3 மனுக்களும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வைத்து, இன்று வெள்ளிக்கிழமை (19) வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டன. இதனையடுத்து அவர், அந்த 3 வழக்குகளியிருந்தும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டார்.

Read More

மேர்வின் மகன் மாலக சில்வா தரப்பில் விடுத்த கோரிக்கை மனு நிராகரிப்பு!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மனோஜ் மாலக சில்வா தாம் இரவு கேளிக்கை விடுதிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் விடுத்திருந்த தடையுத்தரவை நீக்குமாறு கோரியிருந்த மனு நீதிமன்றத்தினால் மீண்டும் நேற்று நிராகரிக்கப்பட்டுள்ளது. நேற்று 18ம் திகதி கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிபதி நிசாந்த பீரிஸ் மாவட்ட சில்வாவின் மனுவை மீண்டும் நிராகரித்துள்ளார். பம்பலப்பிட்டி இரவு கேளிக்கை விடுதியொன்றிலிருந்து பிரிட்டன் யுவதியொருவரை கடத்திய சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே…

Read More

கிரிக்கெட் வீரர்களுடன் போர் உபாயங்களை பகிர்ந்து கொண்ட சரத் பொன்சேகா!

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா  நேற்று ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு உத்தியோகபற்றற்ற விஜயத்தை மேற்கொண்டு  கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இதன்போது இலங்கை கிரிக்கெட் அணி சவால்களை வெற்றிக்கொள்வது தொடர்பில் அவர் கலந்துரையாடினார். ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவர் திலங்க சுமதிபாலவின் அழைப்பின் பேரிலேயே சரத் பொன்சேகா இந்த விஜயத்தை மேற்கொண்டார். இலங்கை இராணுவம் எதிரிகளை வெற்றிக்கொள்ள பயன்படுத்திய உபாயங்கள் குறித்து அவர் இதன்போது இலங்கை கிரிக்கட் அணி வீரர்களுக்கு தெளிவுப்படுத்தினார்.

Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் மஹிந்த ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்றும் (19) ஆஜராகவுள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பல மில்லியன் ரூபாய்கள் நிலுவை தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்படுகிறது. மஹிந்த ராஜபக்ச இந்த விசாரணைக்குழுவினால் நேற்றும் விசாரணை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையில் மேலும் சில கூகுள் பலூன்கள்

மற்றுமொரு கூகுள் பலூனை விண்ணில் செலுத்தவுள்ளதாக, இலங்கை தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரதிநிதிகள் நிறுவனத்தின் வேலைத்திட்ட முகாமையாளர் கவாஸ்கர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுபோன்று மேலும் சில கூகுள் பலூன்களை அந்த நிறுவனம் இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ´புரோஜெக்ட் லூன்´ எனப்படும் கூகுளின் அதிவேக இணைய சேவைக்கான பரிசோதனை கடந்த திங்கட்கிழமை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தமிழர்களும் முஸ்லிம்களும் பகைத்துக்கொண்டு ஒருபோதுமே வாழ முடியாது

– சுஐப் எம் காசிம் – தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்வதன் மூலமே இனி வரும் காலங்களிலும் நமது ஆயுள் எஞ்சியுள்ள காலங்களிலும் நிம்மதியாக வாழமுடியுமென்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார் \னில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையம் அங்குரார்பபண நிகழ்வில் அவர் சிறப்பதிதியாக பங்கேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறான கருத்தை அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அபோஸ்தலர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பிரதம விருந்தினராகவும் சிறப்பு அதிதிகளாக குழுக்களின்…

Read More