Headlines

விண்­ணப்பம் கோரல் :சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சு

இலங்கை சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சில் நிறை­வுகாண் தொழில்­வல்­லுனர் சேவைகள் மற்றும் துணை­ம­ருத்­துவ சேவை­களின் பயிற்­சிக்­காக பயி­லு­னர்­களை ஆட்­சேர்க்க விண்­ணப்பம் கோரப்­பட்­டுள்­ளது. சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்­சு­விண்­ணப்­பங்­களை கடந்த 24ஆம் திகதி அரச வர்த்­த­மா­னியூடா­க கோரி­யுள்­ளது. பொதுச்­சு­கா­தார பரி­சோ­தகர் பயிற்­சி­யைத்­த­விர ஏனைய 12 தொழிற்­ப­யிற்­சி­களும் ஆங்­கி­ல­மொ­ழி­மூ­லத்தில் நடத்­தப்­படும். மருத்­துவ ஆய்­வு­கூட தொழி­ல்நுட்­ப­வி­ய­லாளர், மருந்­தாளர், பற்­சி­கிச்­சை­யாளர், இத­யத்­து­டிப்பு பதி­வாளர் உள்­ளிட்ட 12 ப­யிற்சி நெறிகள் 2 வரு­ட­காலம் இடம்­பெறும். பொது­வாக க.பொ.த. (சா.த)…

Read More

ஜனாதிபதி மாளிகையில் இப்தார் நிகழ்வு!

புனித ரமழானில் முஸ்லிம்களின் நோன்பு துறக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (28) மாலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. முஸ்லிம் மதத் தலைவர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் பெருந்தொகையானோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் நாட்டில் சமாதானம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக இதன் போது துஆ பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, சகல இனத்தவர்களும் சமாதானமாகவும் நம்பிக்கையுடனும் வாழும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

Read More

இலங்கையின் சனத்தொகையில் 23.4 வீதமானோருக்கு புகைப்பழக்கம்!

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 23.4 வீதமானோர் புகைப்பழக்கமுள்ளவராக இருப்பதாக, இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ கலாநிதி பாலித மகிபால தெரிவித்துள்ளார். 2020இல் புகையிலையில்லா இலங்கை என்ற தொனிப்பொருளில்  சுகாதார கல்விப் பிரிவினால் முன்னெடுக்கப்படும் திட்டம் தொடர்பாக விளக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். 20ஆம் நுற்றாண்டின் இறுதி வரை புகையிலையினால் உலகில் 100 மில்லியன் மக்கள் மரணமாகியுள்ளனர். வெண்சுருட்டில், 700 வகையான இரசாயனங்கள் உள்ளன. அவற்றில் 69 வகையான இரசாயனங்கள் புற்றுநோயை…

Read More

கம்மன்பில விவகாரம் – சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் முறைகேடு தொடர்பில் இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள விசாரணையாளர்கள் நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளனர். அவுஸ்திரேலியர் ஒருவரின் வங்கிப்பங்கு பத்திரங்களை போலியான முறையில் கைமாற்றி விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் உதய கம்மன்பில கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். உதய கம்மன்பில மேற்கொண்ட இந்த நடவடிக்கையின்போது சாட்சிகளாக கையொப்பமிட்ட இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகளின் வாக்குமூலங்களை பெறுவதற்காகவே சர்வதேச காவல்துறையினரின் உதவி கோரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்பு

அமெரிக்க அதிபர் பதவிக்கு வரும் நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை 51 சதவீதம் பேரும், டொனால்ட் டிரம்ப்பை 39 சதவீதம் பேரும் ஆதரிக்கக் கூடும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Read More

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை தடை தாண்டல் பரீட்சை

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புக்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கான தடைத்தாண்டல் பரீட்சை யூலை மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தில் நடைபெற உள்ளது. அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் அரச நிர்வாக சுற்றறிக்கை இல 16/2016 மற்றும் ஒன்றிணைந்த சேவை சுற்றறிக்கை இல. 04/2016 அடிப்படையில், ஆன்லைன் (ONLINE) முறையின் மூலம் இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும். மேற்கூறப்பட்டுள்ள சுற்றறிக்கையானது அரச நிர்வாக…

Read More

பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க கோரிக்கை

மேல் மாகாணத்தில் ஆசிரியர்களுக்கான பரீட்சையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை ஆசிரியர் சேவையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த பரீட்சைகள் இடம்பெற்று இரண்டு வருடங்களாகின்ற போதும், அவர்களுக்கு நியமனம் வழங்க, நிதி அமைச்சின் முகாமைத்துவ திணைக்களம் அனுமதியளிக்கவில்லை என, குறித்த சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த நியமனங்களை வழங்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, நிதி அமைச்சுக்கு வலியுறுத்தி, மேல் மாகாண…

Read More

சீனிக்கான வரியை அதிகரிக்க யோசனை

சீனி உற்பத்தி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள வரி வீதத்தை அதிகரிக்க அமைச்சரவையில் யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். தொற்றா நோய்கள் மக்களுக்கு ஏற்படுவதை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சீனிக்கான வரி அதிகரிக்கப்பட வேண்டும் என தான் முன்னதாக தெரிவித்திருந்த போதும், அது குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். எனினும், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து போன்ற நாடுகளில் சீனிக்காக வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மென்பாணங்களில்…

Read More

அரச காணிகள் பற்றிய தகவல்களை திரட்ட பணிப்புரை

வடகொழும்பு, மத்திய கொழும்பு தொகுதிகள் உள்வரும் கொழும்பு பிரதேச பகுதியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி சபை, தேசிய வீடமைப்பு அதிகாரசபை, துறைமுக அதிகாரசபை, கொழும்பு மாநகரசபை மற்றும் மாவட்ட செயலகம் ஆகிய அரச அமைப்புகளுக்கு சொந்தமான மற்றும் பயன்படுத்தபடாத தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை திரட்டும்படி கொழும்பு பிரதேச செயலக பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு மாநகரத்தில் வாடகை வீடுகளில் வசிக்கும் மத்திய தர…

Read More

ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் திட்டம்

-சுஐப் எம்.காசிம்  – தேசிய கூட்டுறவு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் முடிவுக்கிணங்க இன்று (27/06/2016) கொழும்பு, விகாரமகா தேவி பூங்காவில் அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்தன மரக்கன்று ஒன்றை நாட்டி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அண்மையில் பிரபல பாடகர் இராஜ் விக்கிரமரத்ன, அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு மரக்கன்றையாவது நாட்டிக் காட்டட்டும் என்று அவர் சவால் விடுத்தும் இருந்தார். இந்தப் பின்னணியில் சந்தன மரக்கன்று ஒன்றை…

Read More

நாட்டின் கடன்தொகை இரட்டிப்பாகியுள்ளது!- மஹிந்த

நாட்டின் கடன்தொகையானது இரட்டிப்பாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த கால அரசு பெற்ற கடன் தொடர்பில் பிரச்சாரங்கள் செய்வதற்குதற்போதைய அரசாங்கம் அதிக பணங்களை செலவு செய்வதாகவும், இதனை சேமித்தால்மக்களுக்காக உதவிகளையாவது செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று பண்டுவஸ்நுவர விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே மஹிந்தஇவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தமது 9 வருட அரசாங்கத்தில் பெற்ற கடனைவிட கடந்த ஒன்றரை வருடங்களிலநல்லாட்சி பெற்ற கடனானது இரட்டிப்பு என்றும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

Read More