Headlines

பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின் பாராளுமன்ற உரை

22.11.2016 நேற்று பாராளுமன்றத்தில் கிராமியபொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள்  கல்வி தொடர்பாக உரையாற்றினார்.

Read More

ஓமான் நாட்டின் 40வது தேசிய தின விழாவில் பிரதி அமைச்சர் அமீர் அலி

கொழும்பு Galle Face ஹோட்டலில் இடம்பெற்ற ஓமான் நாட்டின் 40வது தேசிய தின விழாவில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டு  ஓமான் நாட்டின் தூதுவர் ஹம்தான் ஹஸன் அவர்களை சந்தித்தார்.

Read More

குழு நிலை விவாதத்தில் அமைச்சர் றிஷாத் ஆற்றிய உரையின் தொகுப்பு

Ø புத்தளம் மற்றும் பொத்துவில்லுக்கான தனியான கல்வி வலயங்கள் Ø புத்தளத்திற்கான வயம்ப அமைச்சின் அபிவிருத்திகள் Ø மௌலவி ஆசிரிய நியமனங்கள்…….உள்ளிட்ட கோரிக்கைகள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் முதலில் இந்த பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சினதும்,மற்றும் வயம்ப அபிவிருத்தி அமைச்சினதும் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்ற கிடைத்தமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். அதே போல் வயம்ப அபிவிருத்திக்கான அமைச்சராக அனுபவமும்,நேர்மையும் கொண்ட சிரேஷ்ட அரசியல்வாதியான கௌரவ எஸ்.பீ.நாவின்ன அவர்கள் நியமிக்கப்பட்டது மிகவும் பொருத்தமானது என்பதை இந்த உரையின்…

Read More

மன்னார் மீனவ சங்கங்களின் அனுமதி பெறாமல் தென்னிலங்கை மீனவர்கள் மன்னார்கடலில் தொழிலை மேற்கொள்ள முடியாது

மன்னார் மாவட்ட கடற்பிரதேசத்தில் அந்த மாவட்டத்தில் இயங்கி வரும் மீனவர் சங்கங்களின் அனுமதியை பெற்றுக்கொள்ளாமல் தென்னிலங்கையிலிருந்து வந்து பாடுகளை அமைத்து மீன் பிடிப்பதற்கு அந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு தடை விதித்துள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் கொண்டுவந்த தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுக் கொண்ட அபிவிருத்திக்குழு சிலாவத்துறை கடற்பிரதேசத்தில் பாடுகளை அமைத்து மீன் பிடிப்பதற்கு கடற்றொழிற் திணைக்களப்பணிப்பாளர் தென்னிலங்கை மீனவர்களுக்கு வழங்கிய அனுமதியை வாபஸ் பெறச் செய்வதெனவும் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் ஏகமனதாக முடிவு மேற்கொள்ளப்பட்டது….

Read More

மன்னாரில் மண் அகழ்வுக்கு தனியாருக்கு தடை: அபிவிருத்திக் குழு அங்கீகாரம்

இந்த வருடம் டிசம்பர் 31இற்கு பின்னர் மன்னார் மாவட்டத்தில் தனியாருக்கு மண் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரம் (பெர்மிட்) வழங்குவதில்லையெனவும் மண் வளம் அதிகமுள்ள கிராம சேவகர் பிரிவுகள் இனங்காணப்பட்டு அந்தப் பிரிவிலுள்ள பொதுமக்கள் சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி அமைக்கப்படும் ஒன்றியத்தின் வழியாக அவசியத் தேவையானவர்களுக்கு மாத்திரமே பெர்மிட்களை வழங்குவதெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானும் கூட்டாக விடுத்த அறிவிப்பை மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் மண் அகழ்வினால் அந்தப்பிரதேசம் பாதிக்கப்படாத…

Read More

அமைச்சர் றிஷாத்தைப் பற்றிய விசமத்தனமான பிரச்சாரத்திற்கு எதிராக C.I.D யில் முறைப்பாடு

அமைச்சர் றிஷாத்தைப் பற்றிய விசமத்தனமான பிரச்சாரத்திற்கு எதிராக நேற்று (21.11.216) இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் அவர்களினால் C.I.D யில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட இணைப்பாளர் எம்.இம்ளாரும் (ராஜா) இணைந்திருந்தார்.  C.I.D யில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரதியொன்று பொலிஸ் மா அதிபரிடம் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் அவர்களினால் நேற்று இரவே கையளிக்கப்பட்டது.

Read More

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் தேசப்பிரிய தலைமையுடன்,இணைத்தலைவர்களான முதலமைச்சர் CV விக்னேஸ்வரன், அமைச்சர் றிஷாத் பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுத்தீன், பா.டெனீஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற போது.

Read More

இனக்கலவரத்தைத் தூண்ட – இனவாதிகளின்  தூபமிடும் சதி; அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது வீண்பழி!

21.11.2016 இலங்கை முஸ்லீம்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடிக் குரல் கொடுத்து வரும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது கற்பனைக்கே எட்டாத வீண் பழிகளைச் சுமத்தி, பேரினவாதிகளால் தீவிரவாதி எனப் பெயரிடப்பட்டு நாட்டில் இனக்கலவரம் ஒன்றைத் தூண்டுவதற்கு சதிகாரர்களின் வெளிப்பாடாக வெளிவந்துள்ள கையடக்கத் தொலைபேசியில் வட்ஸ்அப் இல் பதிவேற்றப்பட்டுள்ள பதிவையும் அதன் தமிழாக்கத்தையும் கீழே தருகின்றேம். இதேபோன்று சில நாட்களுக்கு முன்பு இணையத்தளத்தில் வெளிவந்த அபாண்டமான செய்தியில் கண்டியில் 19 ஆம் திகதி நடைபெறும் பொதுபல சேனாவின் ஊர்வலத்தில்…

Read More

புத்தளத்தில் இயங்கும் இணைந்த பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசின் கீழ் – அமைச்சர் றிஷாத்

புத்தளத்தில் இயங்கும் இணைந்த பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசின் கீழ் வடமாகாண சபையின் சுமையைக் குறைக்கவே இந்த நடவடிக்கையென அமைச்சர் றிசாட் தெரிவிப்பு மன்னார் மாவட்ட கல்வித்திணைக்களத்தின் பரிபாலனத்தின் கீழ் புத்தளத்தில் இயங்கி; வரும் இணைந்த பாடசாலைகளின் கல்வி வசதிகளையும் அங்கே பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளையும் குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்றுள்ளதாகவும் வட மாகாணசபையின் நிதிச்சுமையைக் குறைப்பதற்காகவே தாம, அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பத்திரம் அங்கீகரிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் றிசாட்…

Read More

புத்தளம் கரம்பை கிராமத்தின் தேவைகள் விரையில் பூர்த்தி – றிப்கான் பதியுதீன்

புத்தளம் கரம்பை கிராமத்தின் தேவைகள் அனைத்தையும் மிக விரைவில் நிறைவேற்றுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார். பாலர் பாடசாலை ஆசிரியர்களால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மன்னாரிலிருந்து உள்நாட்டு யுத்தம் காரணமாக வெளியேறிய முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் கிராமமான புத்தளம் கரம்பை கிராமம் உள்ளது. கடந்த காலங்களில் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் இப்பகுதியில் உள்ள முக்கிய தேவைகள் நிறைவேற்றப்படவுள்ளன.என்னையும் எனது கட்சியையும்…

Read More