Headlines

பிரான்ஸ் தாக்குதல் : லொரியின் சாரதி அடையாளம் காணப்பட்டார்

பிரான்ஸின் நைஸ் நகரில் தீவிரவாதிகளால்  மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் லொரியின் சாரதியை பிரான்ஸ் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். குறித்த நபர் 31 வயதான  துனீஷியாவை பிறப்பிடமாகக்கொண்ட மொஹமத் லஹ்வீஸ் புஹ்லெல் எனப்படும் பிரான்ஸ் பிரஜையென தெரியவந்துள்ளது. இவர் சிறு குற்றங்களை புரிந்துவந்த, பொலிஸாருக்கு பரிட்சையமான ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பிரான்ஸின் தீவிரவாத எண்ணம் கொண்ட நபர்களின் பட்டியில் இவர் உள்ளடக்கப்பட்டிருக்கில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் தனியாக லொரியை செலுத்தினாரா? அல்லது இவருடன் வேறு யாரும் இருந்தார்களா?…

Read More

துருக்கியில் இராணுவப் புரட்சி : இலங்கையர்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் அறிவிப்பு

துருக்கியில் இராணுவப் புரட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கை பிரஜைகள் தொடர்பில் அறிந்துகொள்ள 00905340102105 என்ற தொலைபேசி இலக்கத்தை துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. துருக்கியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையிலேயே, துருக்கி தலைநகர் அங்காரா மற்றும் இஸ்தான்புலில் வாழும் இலங்கையர்களுக்கான அவசர உதவி தொலைபேசி இலக்கங்களை துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. துருக்கியில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. துருக்கியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் அங்காராவில்…

Read More

இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது – துருக்கி

துருக்கியில் அந்நாட்டு அரசைக் கவிழ்க்க இராணுவத்தின் ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட புரட்சி நடவடிக்கை தோல்வி கண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பல இடங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இருந்தும் ஆங்காங்கே மக்கள் எதிர்ப்புக் கோசங்களும் இடம்பெற்று வரும் நிலையில் புரட்சிக்கு முயன்றவர்கள் அதற்கான விளைவை அனுபவிப்பார்கள் என பிரதமர் ரெசெப் தையிப் எர்டோகன் எச்சரித்துள்ளார். எனினும், முக்கிய இராணுவ தளபதிகள் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாகவும், நாடு தமது கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் குறித்த இராணுவ குழுவினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

கண்டி, தும்பர மஸ்ஜித் சம்மேளணத்தின் தொழில் பயிற்சி கண்காட்சி

கண்டி, தும்பர மஸ்ஜித் சம்மேளனம் நடாத்தி வரும்  தும்பர தொழில்பயிற்சி நிலையத்தில், தையல் பயிற்சி பெற்றுவரும்  யுவதிகளும், மின்னியல் துறையில் பயிற்சி பெற்றுவரும் இளைஞர்களும், தாருல் ரஹ்மான் அமைப்பைச் சேர்ந்த மாணவிகளும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை, கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் நேற்று (15/07/2016) அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். இந்நிகழ்வு திகன இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

Read More

நாமலுக்கு ‘பாய்’ இல்லை

மெகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, படுத்துறங்குவதற்கு பாய்க்கு பதிலாக மெட்ரஸ் வழக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைவாக வைத்தியரின் பரிந்துரையை கவனத்தில் கொண்டே மெட்ரஸ் வழங்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த அதிசொகுசு மெட்ரஸ், அவரின் வீட்டிலிருந்தே பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வதிகாரி தெரிவித்தார். அவர், சிறைச்சாலையினால் வழங்கப்பட்டுள்ள தலையணையை மட்டுமே தற்போதைக்கு பயன்படுத்துகின்றார் என்றும் அவ்வதிகாரி தெரிவித்தார். சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர், ஜே கூண்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அதற்கு அண்மையுள்ள கூண்டுக்குள்…

Read More

முன்னாள் தூதுவர் உதயங்கவை கைதுசெய்ய நீதிமன்றில் கோரிக்கை

ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைதுசெய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு கொழும்பு கோட்டை நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். 2005-2006ம் ஆண்டு காலப்பகுதியில் மிக் ரக விமானக் கொள்வனவின் போது இடம்பெற்ற மோசடி குறித்து விசாரணை  மேற்கொள்வதற்கு கைதுசெய்ய வேண்டிய தேவையிருப்பதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை உதயங்க வீரதுங்க ரஷ்யாவிற்கான இலங்கைத்து தூதுவராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜாகிர் நாயக்கின் ஊடகவியலாளர் மாநாடு, 3 வது தடவையும் ரத்தானது ஏன்..?

ஜாகிர் நாயக்கின் ஊடகவியலாளர் மாநாடு மூன்றாவது தடவையும் ரத்தானது ஏன்..? Controversial Mumbai-based Islamic preacher Zakir Naik has cancelled his media interaction on Thursday for the third time. “It is very difficult to do a press conference. We will announce another conference soon. Naik himself is willing to come and share information with people,” official spokesperson of Naik’s…

Read More

தங்கச் சட்டை தொழிலதிபர் அடித்துக்கொலை

தங்கத்தால் செய்யப்பட்ட சட்டையை அணிந்து பரபரப்பை ஏற்படுத்திய இந்தியாவின் பூனே தொழிலதிபர் தத்தா புகே, மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். பூனே அருகே உள்ள பிம்ப்ரியைச் சேர்ந்தவர் தத்தா புகே. சிட்பண்ட் தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி சீமா, பூனே மாநகராட்சி கவுன்சிலராக கடமையாற்றிய வந்தார். 5 கிலோகிராம் நிறையில், கழுத்து, கை மற்றும் இடுப்பில் தங்க நகைகளை அணிந்து வந்துகொண்டிருந்தார் தத்தா புகே. கடந்த 2013ஆம் ஆண்டில், 3.25 கிலோகிராம் தங்கத்தில் சட்டையொன்றை உருவாக்கி…

Read More

வன்முறையை ஒருபோதும் தூண்டியது இல்லை: ஸ்கைப் மூலம் ஜாகீர் நாயக் விளக்கம்

வங்காளதேச தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் ஓட்டலில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் என்ற இந்திய மாணவி உள்பட 22 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவரான ரோகன் இம்தியாஸ், மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தார். ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு வங்காளதேச முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே ஜாகிர் நாயக்கின்…

Read More

தேசிய நுண்பாக நிதிச் சட்டம் விரைவில் அமுலுக்கு!

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி வர்த்தமானியில் 2016 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நுண்பாக Micro finance நிதிச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் விடுத்த பணிப்புரையின் பேரிலேயே இத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. ஏழை மக்களில் அதிமானோருக்கு, முக்கியமாக பெண்களுக்கு கடன் வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நுண்பாக நிதிக் கடன் திட்டமானது இந்த நாட்டில் ஒரு கட்டுப்பாட்டின்…

Read More

அமெரிக்காவின் உதவிச் செயலாளர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் திரு.டொம் மாலினோவ்ஸ்கிக்கும், பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முந்தினம் (13) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் ஹெட்டியாராச்சி மற்றும் திரு. மாலினோவ்ஸ்கி ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான உதவிச் செயலாளருக்கு பாதுகாப்புச் செயலாளரினால் நினைவுச்சின்னமொன்றும்…

Read More

பிரதமரின் சிங்கப்பூர் விஜயம் 17 இல்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நாளை மறுதினம்(17) சிங்கப்பூர் செல்லவுள்ளார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்விஜயத்தின் போது பிரதமர் சிங்கப்பூர் ஜனாதிபதி டோனி டென் கெங் யெம் (Tony Tan Keng Yam), மற்றும் பிரதமர் லீ சியென் லுல் (Lee Hsien Loong) ஆகியோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் சிங்கப்பூர் நகர மநாட்டு நிலையத்தில் நடைபெறும் மூன்றாவது தெற்காசிய புலம்பெயர்ந்தோர் மாநாட்டின்…

Read More