Headlines

வாக்­காளர் பெயர்ப் பட்­­டி­யலை 7ஆம் திகதிக்குள் கையளிக்கவும்

பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட வாக்­காளர் பெயர் பட்­­டி­யலை எதிர்­வரும் 7 ஆம் திக­திக்கு முன்னர் கிரா­ம­சே­வ­க­ரிடம் கைய­ளிக்­கு­மாறு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரிவித் தார். இளை­ஞர்­களின் தேர்தல் அறிவு மற்றும் பங்­கேற்பை வலு­வூட்­டும்­வ­கை யில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள வேலைத்­திட்டம் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று தேர்­தல்கள் ஆணைக்­குழு செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. அதன்­போது கருத்­து­தெ­ரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது­தொ­டர்­பாக அவர் மேலும் கூறு­கையில், இந்த வரு­டத்­துக்­கான வாக்­காளர் பெயர் பட்­டியல் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் பட்­டி­ய­லி­டப்­ப­ட­வுள்­ளது….

Read More

கே.கே. பியசேன கைது!

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியசேன இன்று  (29)காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனத்தை திருப்பி கையளிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த அரச வாகனம் பொலிஸாரல் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் சாரதி கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

“உண்மையான பகுத்தறிவாளராக வேண்டுமெனில், முஸ்லிமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்

“உலகில் அதிகம் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டுத்தப்பட்ட கொள்கை ஒன்று உண்டெனில் அது அனேகமாக இஸ்லாம் மார்க்கமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சமூக சிந்தனையாளர்களில் பலர் இறுதியில் உணர்ந்து கொண்ட தீர்வாக அவர்கள் கண்டு கொண்டது இஸ்லாம். மற்ற கொள்கைகளைப்போல் இஸ்லாம் மேலோட்டமானத் தீர்வுகளைச் சொல்லவில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை மட்டுமின்றி இவ்விரு நிலைகளுக்கும் முந்தைய பிந்தைய தேடல்களுக்கும் இஸ்லாத்தில் தெளிவான விளக்கமுண்டு. ஆனந்த விகடனில் கார்டூனிஸ்டாக இருந்த மதன் எழுதிய, மானுடவியல் குறித்த ஒலிநூலைக் கேட்கும்…

Read More

கொழும்பில் நவீன சாதி முறைமை நிலவுகிறது – அமைச்சர் சம்பிக்க

கொழும்பில் நவீன சாதி முறைமை காணப்படுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த காலங்களில் சாதி முறைமை காணப்பட்ட போதிலும் பின்னர் அது வழக்கொழிந்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எனினும் தற்போது கொழும்பு போன்ற பகுதிகளில் நவீன சாதிய முறைமை அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். தாய் பாலியல் தொழிலாளி என்றால் மகளையும் பாலியல் தொழிலாளி என்ற பிரிவிற்குள்ளும், தந்தை முச்சக்கர வண்டி செலுத்தினால் மகளனும் அதே முசக்கர வண்டி ஓட்டுகின்றனர் பிரிவிற்குள் உள்ளடக்கப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

Read More

பாதயாத்திரையின் இரண்டாம் நாள் ஆரம்பமானது!

மகிந்த ஆதரவு அணியினரின் கொழும்பு நோக்கிய பேரணியின் இரண்டாம் நாள் இன்று காலை மாவனல்லை உத்துவான்கந்த பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகியது. இதேவேளை, குறித்த பாதயாத்திரை இன்றைய தினம் நெலும்தெனிய வரை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த பேரணி பேராதெனியவில் இருந்து மாவனல்லை கனேதென்ன பிரதேசம் வரையில் பேரணியாக சென்றது. “மக்கள் போராட்டம்” எனும் தொனிப் பொருளிலான இந்த பாதயாத்திரை ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது. இதேவேளை, வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக…

Read More

இலங்கையுடனான உறவு நிலைத்திருக்கும்: மோடி

இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா சார்பில் 50.61 கோடி ரூபாய் செலவில் புதிய ஆம்புலன்ஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன. இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதற்கு பிரதமர் நரேந்திரமோடி வீடியோ செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: இந்தியா உதவியுடன் இலங்கையின் பல பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும். இவ்வாறு மோடி…

Read More

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

கொழும்பில் மீண்டும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது இன்று ஆரம்பமாகவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று தொடக்கம் எதிர்வரும் முதலாம் திகதி வரை இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைபெறும் என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். மேலும் இராணுவம்,பொலிஸ் ஆகியோரி;ன் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், ஏற்கனவே இவர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினால் டெங்குவின் தாக்கம் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் குறித்த நான்கு நாட்களுக்கு 450 குழுக்கள் மூலம் குறித்த…

Read More

கிராம சேவகர் போட்டிப் பரீட்சைக்கு இரண்டு லட்சம் பேர் விண்ணப்பம்

கிராம சேவகர் போட்டிப் பரீட்சைக்காக இம்முறை இரண்டு லட்சம் பேர் தோற்றவுள்ளனதாக அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… கிராம சேவகர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கில் நடைபெறவுள்ள போட்டிப் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து விண்ணப்பம் செய்துள்ளனர். சுமார் இரண்டாயிரம் கிராம உத்தியோகத்தர்களை நியமிப்பதற்காக இந்தப் போட்டி பரீட்சை நடத்தப்படுகின்றது. போட்டிப் பரீட்சையில் அதிகளவு…

Read More

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நாட்டை முன்னேற்றுவோம்

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நாட்டை முன்னேற்றுவதற்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். குருநாகல் நகரபிதாவின் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு பிரதான கட்சிகளின் கொள்கைக்கு அமைய நடுநிலைமையுடன் செயலாற்றுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

பள்ளி சென்ற மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில்!

காலியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மூவர் கஞ்சா பயன்படுத்திய நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் பாடசாலைக்கு வெளியே கஞ்சா பயன்படுத்திய நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த மாணவர்கள் மூவரும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து இந்த பாடசாலைக்கு வந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்களை இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

மு கா முக்கியஸ்தர்கள் றிஷாதின் கரங்களைப் பலப்படுத்த முடிவு!

-சுஐப் எம் காசிம் முஸ்லிம் காங்கிரசின் நீண்ட கால உறுப்பினரும் பொறியியலாளருமான சாய்ந்தமருதுவைச் சேர்ந்த ஹிபத்துல்  கரீம் தலைமையிலான அந்த பிரதேச முக்கியஸ்தர்கள் பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் நேற்று (28) இணைந்து கொண்டனர். மர்ஹூம் அஷ்ரப்புடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட ஹிபதுல் கரீம், அவரது ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட்டை இன்று கொழும்பில் சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்தினார். அவர் கருத்து தெரிவித்த…

Read More

கரும்பு உற்பத்தியாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

-சுஐப் எம் காசிம் அம்பாறை மாவட்ட கரும்பு உற்பத்தியாளர்கள் நீண்டகாலமாக தமது தொழிலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மீண்டும் இன்று நிதியமைச்சர் ரவி கருனாநாயக்கா தலைமையில் நிதியமைச்சுக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்ட போது, கரும்பு உற்பத்தியாளர்களின் நலன்களுக்குக் குந்தகமாக கல்லோயா பிளான்டேசன் கம்பனி செயற்படுவதற்கு தாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் மீண்டும் வலியுறுத்தி பேசினர். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் தயாகமகேயும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தார்….

Read More