வாக்காளர் பெயர்ப் பட்டியலை 7ஆம் திகதிக்குள் கையளிக்கவும்
பூரணப்படுத்தப்பட்ட வாக்காளர் பெயர் பட்டியலை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் கிராமசேவகரிடம் கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித் தார். இளைஞர்களின் தேர்தல் அறிவு மற்றும் பங்கேற்பை வலுவூட்டும்வகை யில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு நேற்று தேர்தல்கள் ஆணைக்குழு செயலகத்தில் இடம்பெற்றது. அதன்போது கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இந்த வருடத்துக்கான வாக்காளர் பெயர் பட்டியல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பட்டியலிடப்படவுள்ளது….
