Headlines

சிவில் விமான சேவையை சர்வதேச தரத்திற்கு அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

நாட்டின் சிவில் விமான சேவையை சர்வதேச தரத்திற்கு ஏற்ப அபிவிருத்தி செய்து பேணிவருவதற்கு அரசாங்கம் அர்ப்பணத்தோடு உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (01) கொழும்பில் நடைபெற்ற ஆசிய பசுபிக் வலய சிவில் விமான சேவை பணிப்பாளர் நாயகங்களின் 53 ஆவது மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு இம்மாதம் முதலாம் திகதி முதல் 05 ஆம் திகதி…

Read More

டெங்கு நுளம்பு பரவும் சூழலை வைத்திருந்த 267 பேருக்கு வழக்கு

டெங்கு பரவும் வகையில் சுற்­றுப்­புறச் சூழலை வைத்­தி­ருந்த 1113 பேருக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கவும் மேலும் 267 பேருக்­கெ­தி­ராக வழக்குத் தொடர்­வ­தற்கும் சுகா­தார போஷாக்கு மற்றும் சுதேச வைத்­தி­யத்­துறை அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. மேல் மாகா­ணத்­தி­லேயே டெங்கு நோயின் தாக்கம் அதி­க­ளவில் உண­ரப்­பட்­டுள்­ளது. எனவே அம்­மா­கா­ணத்தில் டெங்கு நோயினை ஒழிக்கும் வேலைத்­திட்­டத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு ஈடு­பட்­டுள்­ளது. குறித்த வேலைத்­திட்டம் கடந்த29 ஆம் திகதி ஆரம்­பிக்­க­ப்பட்டு நேற்­று­டன்­ நி­றை­வுக்கு வந்­தது. எனவே கடந்த 29 ஆம் திகதி மாத்­திரம்…

Read More

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடுபூராகவுமுள்ள 2204 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பரீட்சாத்திகள் பாடசாலை மூலமும் 74 ஆயிரத்து 614 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் தோற்றவுள்ளனர். அத்துடன் 190 விசேட தேவையுடைய பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளமையும் குறி்ப்பிடத்தக்கது. மேலும் பரீட்சார்த்திகள் ஸ்மாட் கைகடிகாரம் உபயோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே பரீட்சாத்திகளின் கைக்கடிகாரம்…

Read More

12ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாடு ஆரம்பம்

– ஆர்.ராம் – பொருளாதர வளர்ச்சியை பரவலாக்குதல் எதிர்கால வர்த்தகத்தை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளில் 12 ஆவது உலக  இஸ்லாமிய பொருளாதார மாநாடு சற்று முன்னர் இந்தோனேசிய  தலைநகர் ஜெகர்த்தா மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியது. இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விட்டுடு தலைமையில் ஆரம்பமாகியுள்ள இம்மாநாட்டின் அங்குரட்பண நிகழ்வில் பிதமர் ரணில் விக்கிரமசிங்க பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க மற்றம் அமைச்சர் கபீர் ஹசீம், இராஜங்க அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, சுஜீவ சேரசிங்க  ஆகியோர் பங்கேற்றுள்ளனர் அத்துடன் மலேசிய பிரதமர் நஜீப்…

Read More

தொழில் ரீதியான பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதிக்கு கோரிக்கை

நாட்டின் சிறந்த முன்னணி நிதி நிறுவனமாகத் திகழ்ந்த சமூர்த்தி நிதி நிறுவனம் குறித்து எவ்வித மதிப்பீடுகளையும் செய்யாத கடந்த கால எதேச்சாதிகார ஆட்சியும் நிர்வாகமும் அந்த நிகழ்ச்சித்திட்டங்களையும் ஊழியர்களையும் பாதாளத்தில் தள்ளும் வகையில் பில்லியன் கணக்கான நிதியினை கொள்ளையடிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அகில இலங்கை சமூர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். நாடெங்கிலும் உள்ள சமூர்த்தி முகாமையாளர்கள் முகம்கொடுத்துள்ள தொழில் ரீதியான பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு விளக்கமளிப்பதற்காக அகில இலங்கை சமூர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தினர் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில்…

Read More

பாதயாத்திரையில் பதினைந்து இலட்சம் பேர் பங்கேற்றனர்

பாதயாத்திரையில் பதினைந்து இலட்சம் பேர் பங்கேற்றதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையின் நிறைவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் கொழும்பை அடைந்த போது அதில் பதினைந்து இலட்சம் பேர் பங்கேற்றிருந்தனர். இந்த அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதனையே மக்கள் ஒருமித்த குரலில் இவ்வாறு வலியுறுத்துகின்றனர். ஜெனீவாவிற்கு சென்று வெளிவிவகார அமைச்சர் இந்த நாட்டை காட்டிக் கொடுத்துள்ளார்….

Read More

அரசிடம் வாகனங்கள் கோரும் பாடசாலை அதிபர்கள்

வரி விலக்களிப்பு வாகன அனுமதிப்பத்திரத்தை பாடசாலை அதிபர்களுக்கும் பெற்றுதருமாறு கோரப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கை அடங்கிய கடிதமானது இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6-2006 சுற்று நிரூபத்திற்கு அமைய அதிபர் பதவியானது பதவிநிலை உத்தியோகத்தர்தரத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம்சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் குறித்த வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டமானது 1998ஆம்ஆண்டிலிருந்து அதிபர்களுக்கு மறுக்கப்பட்டு வருவதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. எனவே இந்த நல்லாட்சியிலாவது அதிபர்களுக்கு குறித்த வாய்ப்பு மீண்டும்பெற்றுத்தர வேண்டும் எனவும் ஆசிரியர்…

Read More

இரசாயனத் திரவப்பொருளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு

சூழல் மாசடைவதைக் குறைத்து, வாகனங்களின் எரிபொருள் பாவனையை சிக்கனப்படுத்தி, குளிர்ச்சியூட்டும் தன்மையை அதிகரிக்கும் பயோ கார் ‬ வீடா (Bio  Car- Vita) என்னும்‪‬  இரசாயனத் திரவப்பொருளை  அறிமுகப்படுத்தும் நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (01/08/2016) இடம்பெற்றது. அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கைத்தொழில்,வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் அதிதிகளாக  அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், லக்சல நிறுவனத்தின் தலைவர் இஸ்மாயில், கஹடகஹா கிரபைட் நிறுவனத்தின் தலைவர் மஜீத் உட்பட உயரதிகாரிகள்…

Read More

நீங்கள் உங்களை நேசிக்கின்ற ஜனாதிபதியை பெற்றுள்ளீர்கள்; பிரதியமைச்சர் அமீர் அலி

-நாச்சியாதீவு பர்வீன் – நீங்கள் அதிஸ்டசாலிகள் உங்களை நேசிக்கின்ற ஜனாதிபதியை பெற்றுள்ளீர்கள். இந்த நாட்டு மக்களையும், இந்த மாவட்டத்து மக்களையும் வெகுவாக நேசிக்கின்ற ஒரு விவசாய மகன் அவர், இந்தப்பிரதேசத்தில் விவசாயத்துறையை முன்னேற்றும் பல வேலைத்திட்டங்கள் எதிர் காலத்தில் கெளரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம் பெற உள்ளன. அந்த வகையில் கெளரவ ஜனாதிபதி மைத்திரபால சிரிசேனவிக்கு நன்றியுடைய மக்களாக நீங்கள் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற உயர்ந்த உள்ளம் அவரிடம் இருக்கிறது…

Read More

தலாவையில் நீர் சுத்திகரிப்பு இயந்திர நிலையம்

சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை, மேற்கொள்ளும் சமூகசேவை நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக தலாவை மகா வித்தியாலத்தில் நிறுவிய “ரிவேர்ஸ் ஒச்மொசிஸ்” நீர் சுத்திகரிப்பு இயந்திர நிலையம் அண்மையில் (29) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, ஒன்லைன் தொழிநுட்பம் மூலம் கலந்து கொண்டார். கடற்படை தளபதியின் ஒரு எண்ணக்கருவில், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் அதன் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப திறனைக் கொண்டு இந்நீர் சுத்திகரிப்பு…

Read More

மூதூர் நீதவான் நீதிமன்றம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

35 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மூதூர் நீதவான் நீதிமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் (29) திறந்து வைக்கப்பட்டது. மூதூரிற்கு வருகை தந்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மூதூர் தேர்தல் தொகுதி மக்கள் தமக்கு பெருமளவு ஆதரவு வழங்கியதாகவும் சட்டம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதூத்து அவற்றை பலப்படுத்துவதற்கு தேவையான வசதி வாய்ப்பக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்றும் மக்கள் தம்மை ஜனாதிபதியாக்க பல காரணங்கள் இருந்ததாகவும் அவற்றுள் சட்டம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாத்து பலப்படுத்துவது…

Read More