Headlines

அடையாள அட்டையை பெற்றுக்கொள்பவர்களுக்கு ஓர் அறிவித்தல்

நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் தத்தமது அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொண்டு அடையாள அட்டையைப்பெற்று கொள்ள வேண்டியது அவசியமானதாகும். அதே போன்று ஒருவர் கற்கும் வயதினில் பெற்றுக்கொண்ட, தொழில் தகைமை மாணவன் என்று குறிப்பிட்ட அடையாள அட்டையை இறக்கும் வரை பாவனை செய்து கொண்டு வருபவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான வழிகளும், விதிமுறைகளையும் அத்தோடு பலருக்கு தெரியாத விடயங்களை பார்க்கலாம். முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள். இலங்கையில் சட்ட ரீதியாக வசிக்கும் இலங்கைப்…

Read More

ஆட்பதிவுத் திணைக்களமும் இடமாற்றம்

கொழும்பு, ஜாவத்தையில் அமைந்துள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம், எதிர்வரும் 27ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹுருபாயவுக்கு மாற்றப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, நாளை வெள்ளிக்கிழமை (13) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை, இத்திணைக்களத்தில் எந்தவொரு சேவையும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 27ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹுருபாய புதிய கட்டடத்தொகுதியில் வழமையான சேவைகள் இடம்பெறவுள்ளன.

Read More

டிஜிட்டல் அடையாள அட்டை ஜனவரியில்

புதிய டிஜிட்டல் அடையாள அட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறித்த அடையாள அட்டையில் பிரஜைகளின் சகல தகவல்களும் உள்ளடக்கப்படும். 17 வயதை பூர்த்திசெய்த அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும் குறித்த அடையாள அட்டைகளை பிரதேச செயலாளர் காரியாலயங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க கோரிக்கை

இந்த வருடம் டிசம்பர் மாதம் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள அதிகமான மாணவர்கள் இதுவரை தமது தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கவில்லை என்று ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. வருடமொன்றிட்கு 4 இலட்சம் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதாகவும், இதுவரை இந்த வருடத்திற்கு இரண்டு இலட்சம் மாணவர்களுக்கான அடையாள அட்டை விண்ணப்பங்களே கிடைத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் சரத் குமார தெரிவித்துள்ளார். மேலதிகமாக இரண்டு இலட்சம் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பாமல்இருப்பதாகவும்,எனவே துரிதமாக தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை ஆட்பதிவு திணைக்களத்துக்கு அனுப்புமாறும்…

Read More

2 மாதங்களில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை

சிறிலங்காவில் புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் திட்டம் இன்னும் இரண்டு மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எட்டு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்துக்கு, வரும், செவ்வாயன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெறப்படும் என்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர்  சரத் குமார தெரிவித்தார். புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள அடையாள அட்டையில், அனைத்து கைவிரல் அடையாளங்களையும்  உள்ளடக்கிய உயிரியல் தகவல்கள் மற்றும் ஒளிப்படம் அடங்கிய இலத்திரனியல் அட்டை ஒன்று இருக்கும். 65 வயது வரை, ஒவ்வொரு பத்து…

Read More

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச அடையாள அட்டை

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்து முகாம்களில் வாழ்பவர்களுக்கு இலவச அடையாள அட்டை மற்றும் பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு தங்களது அடையாள ஆவணங்களை இழந்தவர்களுக்கே இலவசமாக இந்த ஆவணங்கள் வழங்கப்பட உள்ளன. கொழும்பில் இன்று (26) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் அடையாள அட்டை மற்றும் பிறப்பு…

Read More

இலத்திரனியல் அடையாள அட்டைக்கு ரூ. 8 பில்லியன்

புதிய இலத்திரனியல் அடையான அட்டையை வழங்குவதற்காக 8 பில்லியன் ரூபாய் தேவைப்படுமென கணக்கிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நாவின்ன தெரிவித்துள்ளார்.

Read More

தேசிய அடையாள அட்டை 12 இலக்கங்களை கொண்டதாக மாற்றம்

1972ம் ஆண்டு முதல் தேசிய அடையாள அட்டையானது 9 இலக்கங்களும் ஆங்கில எழுத்துக்களான V மற்றும் X காணப்பட்டது. தேசிய அடையாள அட்டை தொடர்பாக தற்பொழுது அதிக அவதானம் செலுத்தப்படுவதால் அதனை புதுப்பித்து 12 இலக்கங்களை உள்ளடக்கியதாக காணப்படும் என்று ஆட்பதிவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More