Headlines

இலவச சீருடை கூப்பன் நவம்பர்முதல் விநியோகம்

அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் சகல மாணவர்களுக்குமான இலவச சீருடை பெறுவதற்கான கூப்பன்கள் நவம்பர் மாதம் முதலாம் வாரத்திலிருந்து விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த வருடங்களில் பெற்றோர்கள் சந்தித்த பல இடர்கள் இம்முறை நீக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த வருடத்தைப் போன்று இம்முறை சீருடை கூப்பன்களைப் பெற்றுக் கொள்வதற்கு பெற்றோர்கள் வருகை தரத் தேவையி ல்லையெனவும், வகுப்பாசிரியர் குறித்த மாணவரின் கையொப்பத்துடன் அதனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி…

Read More

அம்பாறையில் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண சபையால் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் அம்பாறை மாவட்டப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அம்பாறை மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. அம்பாறை மகாவாபி விகாரையில் ஒன்றுகூடிய பட்டதாரிகள், அங்கிருந்து மணிக்கூட்டுக் கோபுரம்வரை பேரணியாகச் சென்றனர். பின்னர் அங்கு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு, ரீகல் சந்திவரை பேரணியாகச் சென்று மீண்டும் மணிக்கூட்டுக் கோபுரத்தை வந்தடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க வீதியை மறித்து பட்டதாரிகள் எதிர்ப்பை வெளிக்காட்டியதை அடுத்து, பொதுமக்களின்…

Read More

இலங்கையில் கால் பதிக்கும் பஜாஜ் நிறுவனம்

இந்தியாவின் இலத்திரனியல் சாதனங்களை அறிமுகப்படுத்தும் பிரபல நிறுவனமான பஜாஜ்  எலெக்ரிக்கல்ஸ் நிறுவனம் தரமான தனது இலத்திரனியல் சாதனங்களை இலங்கையில் அறிமுகப்படுத்துகின்றது. இந்தியாவின் பல கோடி மக்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் பாரிய சேவையாற்றும் பஜாஜ் நிறுவனம், இலங்கையில் இரு வர்த்தக நிறுவனங்ளை தனது ஏக விநியோகஸ்தர்களாக நியமித்துள்ளது. சுமாராக 300 வர்த்தகர்களை தமது அறிமுக உற்பத்திப் பொருட்களை நேரில் பார்வையிடும்படி குறித்த இந்த நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. பொருட்களின் தரம் மட்டுமல்ல, அனுபவஸ்தரான பாவனையாளரின் கையிலும் அது இருந்தால்தான்…

Read More

துமிந்தவிற்காக உயர்நீதிமன்றில் மேன்முறையீடு

பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில் மரண தண்டை தீர்ப்புக்குள்ளாகியுள்ள துமிந்த சில்வா உட்பட நான்கு பேர் குறித்து விதிக்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து உயர்நீதிமன்றில் மேன்முறையீடு ஒன்றினை எதிர்வரும் செவ்வாய்(20) அன்று பதியவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்..

Read More

பெண்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள அமெரிக்க மக்கள் தயக்கம்: ஒபாமா பளீர் பேட்டி

ஹிலாரி கிளிண்டன் போன்ற பெண்மணிகள் நாட்டின் அதிகாரம்மிக்க பதவிகளில் அமருவதை ஏற்றுக்கொள்ள அமெரிக்க மக்கள் தயக்கம்காட்டி வருவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து  குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் மோதுகிறார். தனது ஆட்சியின்கீழ் வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றிய ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின்…

Read More

இன்புலுவன்சா நோய் தொற்றுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல் நிலை

நாட்டில் தற்போது பரவிவரும் இன்புலுவன்சா ஏ.எச்.வன்.என்.வன். நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நோயாளர்களுக்கான வைத்திய உதவிகளை வழங்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான உபகரணங்கள் வைத்தியசாலைகளில் இல்லையென தாதியர் சங்கம் இதன்போது சுட்டிக்காட்டியள்ளது. இதுவரையில் குறித்த நோயினால் 4 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவர்களில் இருவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

பாடசாலையில் தீ!

ஹாலிஎல – ஊவா பாடசாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் கல்விசாரா ஊழியர் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருத்த வேலைகள் காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இதேவேளை தீ கட்டிடங்களுக்கு பரவாத வகையில் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

லேக்ஹவுஸ் ஊழியர்கள் கூரை மீதேறி ஆர்ப்பாட்டம்

லேக்ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சில ஊழியர்கள் சிலர் தமது சம்பள உயர்வை பெற்றுத்தர கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிலர் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

பாசிக்குடா கடலில் காணாமல்போன இரு சகோதர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

பாசிக்குடா கடலில் குளிக்க சென்று நீரில் மூழ்கி  காணாமல்போன இரு சகோதர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாசிக்குடா கடலில் நேற்று மாலை குளிக்க சென்ற ஐந்து இளைஞர்களில் ஒருவரைத் தவிர மற்றைய நான்கு பேரும் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் நீரில் அடித்து செல்வதை அவதானித்த கரையில் நின்ற நண்பன்  கூச்சலிட்டு ஊ ஏனையவர்களிடம் உதவி கேட்டுள்ளான். இதன்போது பிரதேசத்தின் மீனவர்களின் உதவியுடன் இரண்டு…

Read More

வீடில்லாப் பிரச்சினையை வித்தியாசமான கோணத்தில் அணுக வேண்டும்

மோசமாகப் பாதிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு மக்களின் வீடில்லாப் பிரச்சினையை வித்தியாசமான கோணத்தில் அணுக வேண்டும்; வன்னி எம்.பிக்களுடன் இணைந்து கொழும்பில் வலியுறுத்துவேன் – றிசாத் சுஐப் எம்.காசிம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்தத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் உறுதியளித்தார். இது தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, நாளை பாராளுமன்றத்தில் உரிய அமைச்சர்களைச் சந்தித்து காத்திரமான முடிவுகளை மேற்கொள்வோம் என்றும், பிரதமர் ரணில்…

Read More

இலங்கை வரும் அப்துல் பாஸித் மௌலவி

-ஏ.பி.எம்.அஸ்ஹர்- சர்வதேச  இஸ்லாமிய மார்க்க அழைப்பாளரும் தென் இந்திய  பிரபல அறிஞருமான மௌலவி அப்துல் பாஸித் புஹாரி இலங்கை வருகிறார். ராபிதது அஹ்லிஸ்ஸுன்னாவினால் எதிர் வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு  உரையாற்றவே இவர்  இலங்கை வருகிறார். இம்மாநாடு எதிர்  வரும் சனிக்கிழமை அஸர் தொழுகை முதல் இரவு 10.30 மணி வரை நடை பெறவுள்ளது. இதே வேளை எதிர்…

Read More

மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கவேலாயுதரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி கிராமத்தைச் சேர்ந்த 6  பிள்ளைகளின் தந்தையான மயில்வாகனம் தவபுத்திரன் (வயது 41)  என்பவரே உயிரிழந்துள்ளார். வயலில் வேலையை முடித்;துவிட்டு, குறித்த விவசாயி வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே மின்னல் தாக்கத்துக்கு உள்ளானார்.

Read More