Headlines

கொழும்பில் முஸ்லிம்கள் பேரணி

உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு எதிர்­வரும் 31ஆம் திகதி இலங்கை வர­வுள்ள ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாயகம் பான் கி மூன் கொழும்பில் தங்­கி­யி­ருக்கும் போது இலங்கை முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை அவ­ரது கவ­னத்­திற்குக் கொண்­டு­வரும் வகை­யி­லான அமைதிப் பேர­ணி­யொன்று ஐ.நா.காரி­யா­ல­யத்தின் முன்பாக நடாத்­தப்­ப­ட­வுள்­ளது. வடக்கு விஜயம் மேற்­கொண்டு தமி­ழர்­களின் பிரச்­சி­னை­களைக் கேட்­ட­றி­வது போன்று கிழக்­கிற்கும் ஐ.நா. செய­லாளர் நாயகம் விஜயம் செய்து முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளையும் கேட்­ட­றிய வேண்டும் என அமை­திப்­பே­ர­ணியில் வலி­ய­றுத்­தப்­ப­ட­வுள்­ளது. ஐ.நா. செய­லாளர் நாய­கத்தை கிழக்­கிற்கும் அழைத்துச்…

Read More

மஸ்கெலியாவில் பிரதமர் ரணில்

மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ள்ளும் நிகழ்வு 28.08.2016 அன்று அட்டன் நகரில் இடம்பெற்றது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும்,பிரதம மந்திரியுமான ரணில் விக்கிரமசிங்க இதில் கலந்துகொண்டார். இந்த வைபவத்தை அம்பகமுவ பிரதேச சபை ஐ.தே.கவின் பிரதம அமைப்பாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே பியதாஸ ஏற்பாடு செய்திருந்தார்.  அட்டன் விஜிதா திரையரங்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம், இராஐhங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான…

Read More

மாலபே கல்லூரி விவகாரம் குறித்த போராட்டத்தில் எந்த அடிப்படையும் இல்லை – கெமுனு

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறு மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் எந்த அடிப்படையும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாலபே தனியார் பல்கலைக்கழக பெற்றோர் அமைப்பின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மாலபே தனியார் மருத்துவமனைக்கு எதிராக 6 மருத்துவ பீட மாணவர்கள் சத்தியாகிரக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் குறித்த மாணவர்களின் பெற்றோர்களும் சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Read More

இந்திய பெண்கள் இருவர் கைது

சட்டவிரோமான முறையில் இலங்கையிலிருந்து தங்கத்தை கடத்திச் செல்ல முற்பட்ட இந்திய பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாராநாயக்க விமான நிலையத்தில், விமானத்தின் உள்ளே இருந்த நிலையில் இந்த பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 28 மற்றும் 47 வயதுடைய பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வயிற்றில் வைத்து இந்த தங்கக் கட்டிகளை மறைத்துக் கொண்டுச் சென்றதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Read More

கட்டுநாயக்க அதிவேக வீதியில் விபத்து : இரு இளைஞர்கள் பலி.!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஜா-எல வெளியேறும் வாயில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மின் கம்பத்தில் மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில், ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதான இருவர் பலியாகியுள்ளனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, விபத்து தொடர்பான…

Read More

நாமல் எம்.பி. கோரிக்கை

இலங்கை வரும் ஐக்­கிய நாடுகளின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் ஆறு வரு­டங்­களில் வடக்கு கிழக்கு உட்­பட நாட­ள­ாவிய ரீதியில் மேற்­கொண்­டுள்ள அபி­வி­ருத்தி பணி­க­ளையும் கருத்தில் கொள்­ள ­வேண்டும் என்று அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக் ஷ கோரிக்கை விடுத்­துள்ளார். ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்­வரும் 31ஆம் திகதி உத்­தி­யோகபூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்­கைக்கு வருகை…

Read More

கூட்டமைப்புடனான பான் கீ மூனின் சந்திப்பு மிகவும் முக்கியமானது

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயம் அரசாங்கத்திற்கு சாதகமானது. ஜெனிவா நெருக்கடிகளில் இருந்து நாம் பூரணமாக விடுபட அவரது விஜயம் சாதகமாக அமையும் என அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளுடனான ஐ.நா செயலாளர் நாயகத்தின் சந்திப்பு அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் 31ஆம் திகதி ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் அவரது…

Read More

ஒன்றிணைந்த எதிரணியின் 12 பேருக்கு சட்டப் பிரச்சினை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலகுவதில், சட்டப் பிரச்சினை உள்ளதால், தான் உள்ளிட்ட 12 பேர், அக்கட்சியின் அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலக முடியாதுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். இப்பிரச்சினை தொடர்பில், சட்ட ஆலோசனைகளைப் பெற்று வருவதாகக் கூறிய மஹிந்தானந்த எம்.பி, எதிர்காலத்தில், ஒருமித்த முடிவொன்றை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், கட்சியின் அமைப்பாளர் பதவிகளிலிருந்து தங்களது விருப்பத்தின் பேரில் விலகுபவர்களது கட்சி உறுப்புரிமையும் நீக்கப்படும் தீர்மானமொன்றும் நடைமுறைக்கு வரும்…

Read More

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை தொடர்பில் 50 பேரிடம் விசாரணை

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை தொடர்பில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டியில் வைத்து கடந்த வாரம் கடத்தப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் மொஹம் சகீம் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்று வரையில் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் இவ்வாறு 50 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தை, கோட்டே, கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளின் சீ.சீ.ரீ.வி கமரா காட்சிகளும் சோதனையிடப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த…

Read More

எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணைகள் பூர்த்தி

தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாக விசாரணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அளவில் மீளாய்வு செய்யப்பட்ட தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் பற்றிய விபரங்ளை வர்த்தமானியில் அறிவிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட சில தொகுதிகள் தொடர்பிலான மேன்முறையீடுகளை விசாரணை செய்வதற்காக, உள்ளுராட்சி மன்ற மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அசோக பீரிஸ் தலைமையில் குழுவொன்றை நிறுவியிருந்தார். எல்லை நிர்ணயம் தொடர்பில்…

Read More

மஹிந்தவின் பின்னால் சென்று பயனில்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரிபாலவிடம்காணப்படும் போது மஹிந்தவின் பின்னால் செல்வதில் பயன் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கட்சியின் கொள்கைக்கு அமைய மஹிந்த கட்சியின் தலைமைத்துவத்தை மைத்திரியிடம் ஒப்படைத்துள்ளார். எனவே நாம் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபாலவிற்கு கட்சியின் தலைமைத்துவம் வழங்கப்பட்ட பின்னரும் அவருக்குஎதிராக சூழ்ச்சிகளை செய்வது, அவரது கால்களைப் பற்றி இழுப்பது என்பவற்றை செய்ய கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்….

Read More

பாவனைக்குதவாத குடிநீர் போத்தல்கள் கைப்பற்றல்

கொழும்பு கொம்பனித்தெரு-அக்பர் மாவத்தை பகுதியில் இருந்து மக்கள் பாவனைக்குதவாத ஒரு தொகை குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகநபர்கள் மூவரை கைது செய்திருப்பதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் இங்கு குடிநீர் போத்தல்கள் விற்கப்படுவதாக நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் போத்தல்களில் இலங்கை தரநிர்ணய முத்திரை இருக்கவில்லை என்றும், குறித்த குடிநீர் போத்தல்களில் கழிவுகள்…

Read More