Headlines

மண்ணுக்குள் புதையுண்ட ரோலர் இயந்திரம்!

கினிகத்தேனை – பொல்பிட்டிய புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு நீர் உள்வாங்கும் சுரங்கப்பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோலர் இயந்திரம் மண் தாழிறக்கத்தால் முற்றாக மண்ணால் புதையுண்டிருப்பதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கும் பொலிஸார், சுரங்கப்பாதையில் மேற்புற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளில் சில வீடுகள் சரிந்து விழும் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தனர். ஏற்கனவே இவ்விடத்தில் 50 அடி ஆழத்தில் வீடு ஒன்று புதையுண்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது….

Read More

அமைதியைக் கட்டியெழுப்பும், நல்லிணக்க முயற்சிக்கு “நிதியம்”

சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான பல பில்லியன் டொலர் நிதியத்தை உருவாக்குவது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவுள்ளது. இன்று கொழும்பு வரும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன், ஐ.நாவின் அனுசரணையுடன், இந்த நிதியத்தை உருவாக்குவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின்  பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் அமைதியைக் கட்டியெழுப்பும், நல்லிணக்க முயற்சிகள் பலவற்றுக்கும் ஆதரவை வழங்கும் வகையிலேயே இந்த நிதியத்தை…

Read More

புனித ஹரமின் சேவகன் என்று அழைப்பதில் மகிழ்ச்சி!

சவுதி அரேபியாவை ஆளும் மன்னர்களை இரு புனித தலங்களின் சேவகர்கள் என்று தான் செய்தி நிறுவனங்கள் அறிமுகபடுத்தும். இது பற்றி மன்னர் சல்மான் குறிப்பிடும் போது, என்னை சவுதி மன்னர் என்று அழைப்பதை விட புனித ஹரமின் சேவகன் என்று அழைக்க படுவதில் நான் மகிழ்ட்சி அடைகிறேன். புனித தலங்களுக்கும் அதை நாடி வருபவர்களுக்கும் சேவை செய்வது எங்களது மிக முக்கிய பணி. அந்த பணியினால் தான் எங்களை இறைவன் சிறப்பான நிலையில வைத்திருக்கிறான். எங்களால் எந்த…

Read More

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை! குற்றவாளியை நெருக்கியுள்ள பொலிஸார்

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமான் சகீப் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர்களது புகைப்படங்கள் இரண்டு தற்போது குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Read More

ஐ.தே.க தனித்து போட்டியிடும் – கபீர் ஹாசிம்

ஐக்கிய தேசிய கட்சி அடுத்த உள்ளுராட்சி சபை தேர்தலில் தனித்து போட்டியிடவே தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான கட்சி மட்ட பேச்சுவார்த்தைகளே தற்போது மேற்கொள்ளப்படுவதாக அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். அடுத்த உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மற்றம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்பன இணைந்து செயற்படுவது தொடர்பில் எந்தவொரு தீர்மனங்களோ பேச்சுவார்த்தைகளோ கட்சிகள் மத்தியில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவை அனைத்தும் வெறும் கட்டுக்கதைகளே எனவும் தெரிவித்தார். உலக வர்த்தக…

Read More

எந்தவோர் மாற்றத்திலும் அநீதிஇழைக்க இடமளியோம்

-சுஐப் எம்.காசிம் – அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள எந்தவோர் அரசியல் மாற்றத்திலும் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும், அதனைப் பார்த்துக்கொண்டு வாளாவிருக்கப் போவதில்லை என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். கெகுனுகொல்ல, மடலஸ்ஸ, அல் இக்ரா பாலர் பாடசாலையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, அரசியலமைப்பிலே மாற்றங்களைக் கொண்டுவந்து அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளுமாறு தமிழ்க் கூட்டமைப்பு…

Read More

அரசியலமைப்பு தொடர்பான நோர்வே நிபுணரை ACMC குழுவினர் சந்திப்பு

தேர்தல் மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு தொடர்பான நோர்வே நிபுணரான ஆர்.எம்.வொலன்ட் அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் தலைமையிலான கட்சியின் முக்கியஸ்தர்கள், சட்டநிபுணர்கள் ஆகியோர் இன்று (30) பாராளுமன்றத்தில் சந்தித்து உத்தேச தேர்தல் முறை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் முஸ்லிம்களுக்குப் பொருத்தமான தேர்தல் முறை தொடர்பிலும், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பேணக்கூடிய விதிமுறைகள் குறித்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குழுவினர் வொலன்டிடம் எடுத்துரைத்தனர்.

Read More

500 கோடி ரூபாய் செலவில் பஸ் கொள்வனவு

இலங்கைப் போக்குவரத்து சபைக்காக இந்திய நிறுவனம் ஒன்றிலிருந்து 500 பஸ்கள் கொள்வனவு செய்வதற்கு போக்குவரத்து அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இரண்டின் ஊடாக குறித்த பஸ்களை சிறிது சிறிதாக கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் எனினும் அது இதுவரை சாத்தியப்படாததால் அமைச்சர் குறித்த பஸ்களை ஒரே சந்தர்ப்பத்தில் கொள்வனவு செய்ய முன்வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வரும் இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்களது ஈ.பீ.எப் மற்றும்…

Read More

கிரிக்கெட் விளையாட்டில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான விசேட திட்டம்

கிரிக்கெட் விளையாட்டில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்வரும் பாடசாலைகளுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பிரதமரின் ஆலோசனைக்கு அமைவாக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் கூறினார். இங்கிலாந்து சுற்று பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணியினருக்கு விருதுகளை வழங்கும் நிகழ்வில் அமைச்சர்; இந்த விடயங்களை குறிப்பிட்டார். இதுதொடர்பான நிகழ்வு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Read More

சம நிலையான அபிவிருத்தியை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

25 நிர்வாக மாவட்டங்களிலும் ஒரே விதமாக அபிவிருத்தியை முன்னெடுப்பது  அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் தேசிய அபிவிருத்தியின் முக்கியத:துவத்தை இனங்கண்டு சமநிலையான அபிவிருத்தி நாட்டில் ஏற்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டை வறுமையில் இருந்து விடுவிக்கும் வருடமாக அடுத்த வருடம் பிரகடனப்படுத்தப்படும்; என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டத்தில் ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டார். நாட்டில் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை…

Read More

முன்னாள் சுங்க அதிகாரிக்கு விளக்கமறியல்

2007ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதிவரையான சொத்து விவரத்தை சமர்பிக்கத் தவறிய, முன்னாள் சுங்க அதிகாரியான ரஞ்சன் கனகசபையை, செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று செவ்வாய்க்கிழமை(30) உத்தரவிட்டார்.

Read More

பிரதமர் ரணில் அதிருப்தி!

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிருப்தியை வெளியிட்டுள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் இந்த அதிருப்தியை பிரதமர் வெளியிட்டுள்ளார். வருடாந்த பொலிஸ் தினத்துக்கான ஏற்பாடுகள் குறித்து சாகல ரட்நாயக்க, பிரதமரிடம் கலந்துரையாடியபோது ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பில் பாரிய பிரச்சினைகளை உணர்வதாக குறிப்பிட்டுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. நாட்டில் கொலை கொள்ளை மற்றும் குற்றச்செயல்கள் தொடர்வதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பம்பலப்பிட்டி வர்த்தகர் சுலைமானின் கொலையையும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்….

Read More