Headlines

ஆசிய பசுபிக் வீடமைப்பு அமைச்சர்களின் மாநாடு

இந்தியாவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் வீடமைப்பு அமைச்சர்களின் மாநாட்டில் இலங்கை சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான தூதுக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர் ஆசிய பசுபிக் வலய நாடுகளின் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்களின் நாட்டில் அமுல்படுத்தப்படவிருக்கும், வீடமைப்பு மற்றும் குடியிருப்பு செயற்பாடுகளுக்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும். மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. வீடமைப்பு, குடியிருப்பு அபிவிருத்தி, நகரமயமாதல், போன்ற…

Read More

தரமற்ற ஒருதொகை லஞ்சீட்கள் மீட்பு

உணவு பொதியிட பயன்படுத்தப்படும் தரமற்ற ஒருதொகை பொலித்தின்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளன. போகந்தர தெற்கு மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த, பொலித்தின் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் இருந்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக, அதிகார சபையின் தலைவர் ஷசித திலகரத்ன குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய போகந்தர தெற்கு பகுதியிலுள்ள நிறுவனத்தில் இருந்து தலா 10 சீட்கள் அடங்கிய 510 பக்கற்றுக்களும் இரத்மலானை நிறுவனத்தில் இருந்து, இதுபோன்ற 410 பக்கற்றுக்களும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை குறித்த பொருள்களை…

Read More

தேசிய வர்த்தக விருது விழா

தேசிய வர்த்தகதுறையில் விசேட திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கான  விருது வழங்கும் விழா நவம்பர் மாதம் 30ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. விருதுகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. விவசாயம், பெருந்தோட்டைத்துறை, வங்கி கட்டட நிர்மாணத்துறை, காப்புறுதி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகக்கு விருதுகள் வழங்கப்படவிருப்பதாக தேசிய வர்த்தக சபை தெரிவித்துள்ளது

Read More

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி: அ.இ.ம.கா.

முஸ்லிம் பெண்களின் மார்க்க ரீதியான‌ ஆடைகளான புர்காஃநிகாப் போன்ற உடைகளை  பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் சிலர் உள்நோக்கம் கொண்டு தடைசெய்ய மேற்கொண்ட‌ முயற்சியை தக்க சமயத்தில் தடுத்து நிறுத்திய துணிவுமிக்க கெளரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு நன்றி கூறுவதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெருமைகொள்கிறது. மதத்தைப் பின்பற்றும் உரிமையும்- மதக் கோட்பாடுகளை பிரச்சாரம் செய்யும் உரிமையும் எமது யாப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரசியல் சட்ட அடிப்படை உரிமையை பாதுகாத்து, ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்த…

Read More

சு.கவின் கலவான தொகுதி அமைப்பாளர் இராஜினாமா

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கலவானத் தொகுதி அமைப்பாளர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக வக்கும்புர இராஜினாமா செய்துள்ளார்.

Read More

2 அடி நீளமும் 34 கிலோ எடையுமுடைய உலகின் மிகப் பெரிய முத்து

2.2 அடி நீள­மான பாரிய முத்து ஒன்றை பிலிப்­பைன்ஸைச் சேர்ந்த மீனவர் ஒருவர் வைத்­தி­ருக்­கிறார். இது, உலகில் இது­வரை கண்­டு­பி­டிக்­கப்­பட்ட மிகப் பெரிய முத்து எனக் கரு­தப்­ப­டு­கி­றது. பிலிப்­பைன்ஸின் பலவான் தீவின் கடற்­க­ரை­யொன்றில் 10 வரு­டங்­க­ளுக்கு முன்னர் மேற்­படி மீனவர் இந்த முத்தை கண்­டெ­டுத்தார். இதன் பெறு­மதி சுமார் 10 கோடி அமெ­ரிக்க டொலர்கள் (சுமார் 1,546 ரூபா) எனக் கரு­தப்­ப­டு­கி­றது. எனினும், மேற்­படி மீனவர் இந்த முத்தின் பெறு­ம­தியை உண­ர­வில்லை. இம் ­முத்தை தனது அதிஷ்டப்…

Read More

வெலே சுதாவின் வழக்கு ஒத்திவைப்பு!

பிரபல சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர் என்று கூறப்படும் வெலே சுதா மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொராயஸினவின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 6.7 கிராம் ஹெரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வெலே சுதா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி மனிலால் வைத்தியதிலக நீதிமன்றத்துக்கு சமூகம் அளிக்காததன் காரணத்தினால் நீதிபதி…

Read More

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறில் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

Read More

நவீன வீடமைப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்

-சுஐப் எம்.காசிம் – மன்னாருக்கு மணிமகுடம் என விளங்கும் பிரசித்தி பெற்ற கிராமம் விடத்தல் தீவு. இறையளித்த இயற்கை வளங்களான கடல் வளமும், நில வளமும், நீர்வளமும் கொண்டது இக்கிராமம். மன்னார் நகரிலிருந்து வட திசையில் செல்லும் பூநகரிப்பாதையில் 15 ஆவது மைலில் இந்தக்கிராமம் அமைந்துள்ளது. தேவையான அளவு வாழ்க்கை வளம் காணப்படுவதால் மக்கள் நலமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர். சுமார் 1000 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் இங்கு வாழ்ந்தன. இந்தக்கிராமம் பல கிராமங்களின் மத்தியிலே கேந்திர…

Read More

காடுகளின் பரப்பளவை மேலும் அதிகரிக்க நடவடிக்கை

இலங்கையில் காடுகளின் பரப்பளவை மேலும் (29 – 32 சதவிதமாக) அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அனுராதா ஜயரத்ன கூறினார்.

Read More

பம்பலப்பிட்டி வர்த்தகரை விடுவிக்க 2 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளது

பம்பலபிட்டியவில் கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமானை கடத்திச் சென்றவர்கள் அவரை விடுவிப்பதற்காக 2 கோடி ரூபா கப்பம் கோரியுள்ளதாக பொலிசார்  தெரிவித்துள்ளனர். நிலையில் அவரின் கடத்தல் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்குச் 5 மில்லியன் வழங்கப்படவுள்ளதாக வர்த்தகரின் தந்தையார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்த்தகரின் தந்தை – 0770101971 முன்னைய செய்தி: கடத்தப்பட்ட வர்த்தகர் தொடர்பில் தகவலளித்தால் 5 மில்லியன்!

Read More

பேராதனைப் பல்கலை மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில்

பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இரு மாண­வக்­ குழுக்­க­ளி­டையே ஏற்­பட்ட மோதலில் காய­ம­டைந்த ஐவர் பேரா­தனை போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைபெற்று வரு­கின்றனர். நேற்று முன்தினம் (22) இரவு இடம்­பெற்ற இந்த மோதல் குறித்து மத்­திய மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.ஏ.டி.எஸ். குண­வர்­த­னவின் உத்­த­ர­வுக்கு அமைய பேரா­தனை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் கீழ் விஷேட விசா­ரணை ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளது. காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் உள்ள மாண­வர்­க­ளி­டமும் பேரா­தனை பல்­க­லையின் இணைந்த சுகா­தார விஞ்­ஞான பீடத்தின் முதலாம் தர மாண­வர்கள்…

Read More