Headlines

கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் யோஷித்த!




முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச மோதல் சம்பவம் ஒன்று தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு 7 கறுவாத் தோட்ட பொலிஸாரே யோஷித்த ராஜபக்சவை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

ரக்பி போட்டி ஒன்றின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

யோஷித்த ராஜபக்ச அங்கம் வகிக்கும் விளையாட்டு கழகத்திற்கும் கண்டி விளையாட்டு கழகத்திற்கும் இடையில் ஸ்ரீலங்கா சூப்பர் செவன் ரக்பி போட்டியின் போது இந்த மோதல் சம்பவம் நடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *