Headlines

 யோஷிதவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு, அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒரு மாத கால அனுமதி வழங்கியுள்ளது.

Read More

யோசித்தவின் மனு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸ வெளிநாடு செல்வதற்காக தாக்கல் செய்திருந்த மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. சீ.எஸ்.என் தொலை காட்சி நிறுவனத்தில் இடம் பெற்ற மோசடி தொடர்பாக யோசித்தவின் வெளிநாட்டு பயணம் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே,மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதித்தருமாறு யோசித்த இந்த மனுவை அவரது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார். யோசித்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி…

Read More

யோஷிதவின் மற்றொரு சொத்தும் அரசுடமை!

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால், கால்டன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக உரிமை கோர முடியாத மேலும் 572.8 மில்லியன் ரூபா சொத்துக்கள் இருப்பதை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். ஒளிப்பரப்பு உபகரணங்களுடன் கூடிய 80 மில்லியன் ரூபா பெறுமதியான நடமாடும் ஒளிப்பரப்பு ட்ரக் வாகனம், லங்கா ஒரிக்ஸ் லீசிங் நிறுவத்தின் இலக்கம் 2200060234 என்ற கணக்கில் இருக்கும் 6 மில்லியன் ரூபா பணம், ஹம்பாந்தோட்டை சிறிபோபுர கிராமத்தில் இருக்கும் 4.8 மில்லியன் ரூபா…

Read More

கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் யோஷித்த!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச மோதல் சம்பவம் ஒன்று தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கொழும்பு 7 கறுவாத் தோட்ட பொலிஸாரே யோஷித்த ராஜபக்சவை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ரக்பி போட்டி ஒன்றின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தவே அவர் அழைக்கப்பட்டுள்ளார். யோஷித்த ராஜபக்ச அங்கம் வகிக்கும் விளையாட்டு கழகத்திற்கும் கண்டி விளையாட்டு கழகத்திற்கும் இடையில் ஸ்ரீலங்கா சூப்பர் செவன் ரக்பி போட்டியின் போது இந்த மோதல் சம்பவம் நடந்துள்ளது.

Read More

யோசிதவுக்கு பிணை!

கல்கிஸ்ஸை, மிஹிந்து மாவத்தையில் காணி ஒன்றின் உரிமை தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்க்ஷவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. தெஹிவளையில் கட்டப்பட்ட அதி சொகுசு மாளிகை குறித்த வழக்கு இன்று (16) கல்கிசை நீதவான் முன்னிலையில் எடுத்து கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, தலா ஒரு மில்லியன் பெறுமதியான 3 சரீரப்பிணைகளில் விடுதலை செய்யுமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

வெலிக்கடைக்கு சென்ற மஹிந்த: அனுரவை சந்தித்தார்

றகர் வீரரான வஸீம் தாஜுதீன்  கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மகனான ரோஹித்த ராஜபக்ஷவும் வெலிக்கட சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். இது குறித்து மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கையில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கொழும்பு நகரத்திற்கு பெரும் சேவைகளை செய்துள்ளார் அதனாலேயே அவரை சந்திக்க வந்துள்ளேன். கொஸ்கம சாலாவ…

Read More

யோஷிதவுக்கு எதிரான ஆதாரங்கள் அழிப்பு

சி.எஸ்.என். தொலைக்காட்சி மூலம் பொதுச்சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மகன் லெப்.யோஷித ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிரான இணைய ஆதாரங்கள் சில வெளிநாட்டில் இருந்து செயற்படும் அடையாளம் தெரியாத நபர்களினால் அழிக்கப்பட்டுள்ளன. கனடா, அவுஸ்திரேலியாவில் இருந்தே இவ்வாறு அந்த சான்றுகள் அழிக்கப்பட்டுள்ளமை கணினி அவசர நிலைமைகள் தொடர்பிலான ஆய்வகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நடவடிக்கைக்காக சி.எஸ்.என். நிறுவனத்தின் முன்னாள் தகவல் தொழில் நுட்ப முகாமையாளரின் மின்னஞ்சலே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதிக் குற்றப்…

Read More

யோஷிதவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கடுவளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீ.எஸ்.என் எனும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சி.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பான வழக்கு விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ உட்பட ஐந்து பேர் இன்று காலை கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோதே அவர்களை தொடர்ந்தும்  மார்ச் மாதம் 24ஆம் திகதி…

Read More

மின்­னஞ்­சல்கள் அழிக்­கப்பட்­டனவா.?

யோஷித ராஜ­ப­க் ஷ­வுக்கு எதி­ரான ஆதா­ரங்­க­ளாக கரு­தப்­படும் பல மின்­னஞ்­சல்கள் வெளிநாட்டில் இருந்து செயற்­படும் ஒரு­வரால் அல்­லது குழு­வொன்­றினால் அழிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. சி.எஸ்.என். நிறு­வ­னத்தின் ஆரம்ப மூல­த­ன­மான 234 மில்­லியன் ரூபா எவ்­வாறு பெறப்­பட்­டது என்­பது தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கா­ததை அடிப்­ப­டை­யா­கவும் போலி ஆவ­ணங்­களை தயா­ரித்­தமை, திட்­ட­மிட்டு நம்­பிக்கைத் துரோகம் செய்­தமை , திட்­ட­மிட்ட மோசடி, சுங்க சட்­டத்தை மீறி­யமை மற்றும் நிறு­வன சட்­டங்­களை மீறி­யமை, அர­சாங்க சொத்­துக்­களை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யமை தொடர்­பிலும் கைதா­கி­யுள்ள யோஷித உள்­ளிட்ட சந்­தேகநபர்­க­ளுக்கு…

Read More

யோஷிதவின் வழக்கு ஒத்திவைப்பு

யோசிதவின் வழக்கு எதிர்வரும் 8ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் ஒரே மேடையில் சந்திக்க மக்கள் விருப்பம் கொண்டிருப்பது தொடர்பில் எமது செய்தியாளர் வினவிய போது, அது குறித்து பதிலளித்த மஹிந்த, அனைவரிடமும் பல ஆசைகள் உள்ளன. அவற்றை பற்றி பின்பு யோசிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் மஹிந்த ராஜபக்ஸ சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

யோஷித இடைநீக்கம்

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் லெப்டினன் யோசித ராஜபக்ச, நேற்று ஞாயிற்றுக்கிழமை அமுலுக்கு வரும் வகையில், கடற்படை சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கப்பட்டள்ளார். சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே பாதுகாப்பு அமைச்சு, அவரை இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

உயர் நீதிமன்றில் பிரசன்னமானார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளார். யோஷித ராஜபக்சவின் பிணை மனுக் கோரிக்கை தொடர்பான மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.இந்த வழக்கு விசாரணைகளில் பங்கேற்கும் நோக்கிலே அவர் இவ்வாறு நீதிமன்றில்  பிரசன்னமாகியுள்ளார். ஊழல் மோசடிகள் மற்றும் நிதிச் சலவை குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் யோசித உள்ளிட்ட ஐந்து பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More