Headlines

மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன்: ஜெயலலிதா

தமிழக சட்டமன்றத்தில் மதுவிலக்கு தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:- தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன். இதற்காக முதல்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. கடைகளின் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கை உண்மையாக அமல்படுத்துவதில் அ.தி.மு.க. தான் அதிக அக்கறை கொண்டுள்ளது. 1971-ல் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி மதுவிலக்கை தளர்த்தினார். 2007-ல் அவர் முதல்வராக இருந்தபோது, கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க முடியாது என்றார். இவ்வாறு அவர் பேசினார். முதல்வரின் பேச்சுக்கு பதில் தர…

Read More

பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நால்வரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதி எம்.கணேசராஜா இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

Read More

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

-ஊடகப் பிரிவு தவ்ஹீத் ஜமாத் (SLTJ) – தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பொது பல சேனா தாக்கல் செய்துள்ள மத நிந்தனை வழக்கு டிசம்பர் மாதத்திற்கு ஒத்தி வைப்பு. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு (SLTJ) எதிராக பொது பல சேனா தாக்கல் செய்த மத நிந்தனை குற்றச்சாட்டு வழக்கு எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பொது பல சேனா சார்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மத நிந்தனை…

Read More

இஸ்லாமிய பொருளாதார மாநாட்டின் இடைக்கால கூட்டத்தொடரை நாட்டில் நடத்த எதிர்பார்ப்பு

தெற்காசிய நாடுகளின் பங்களிப்புடன் இஸ்லாமிய பொருளாதார மாநாட்டின் இடைக்கால கூட்டத்தொடர் ஒன்றை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச இஸ்லாமிய பொருளாதார மாநாட்டு அமைப்பின் தலைவர் துன் முசா ஹிடம் (Tun Musa Hitam) தெரிவித்துள்ளார். இதன் மூலம் இலங்கையில் முதலீட்டுக்கான சந்தர்ப்பம் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச இஸ்லாமிய பொருளாதார மாநாட்டு அமைப்பின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரை சந்தித்த போதே இவ்விடயத்தினை தெரிவித்தார். இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் நடைபெறும் 12 ஆவது…

Read More

நபி ஸல் அவர்கள் மதினாவிற்கு வந்தவுடன் இஸ்லாத்தை ஏற்க வந்த முதல் யூதத் தலைவர் கேட்ட கேள்விகள்

நபி ஸல் அவர்கள் மதினாவிற்கு வந்தவுடன் இஸ்லாத்தை ஏற்க வந்த முதல் யூதத் தலைவர் கேட்ட கேள்விகள் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு அனஸ்(லரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி (யூத மதத்தில் இருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்களுக்கு எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து சில விஷயங்களைக் குறித்துக் கேட்டார். ”தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே…

Read More

அ.இ.ம.கா. வுக்கு எதிராக வை.எல்.எஸ் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

-சுஐப் எம் காசிம் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் சுபைர்தீன், கட்சியின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டமையை ஆட்சேபித்து அக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீத், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு இன்று (4) எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதி வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி வரை ஒத்திவைத்திருந்தார். கட்சியின் செயலாளராக சுபைர்தீன் நியமிக்கப்பட்டமையை ஆட்சேபித்து மனுதாரரான வை எல் எஸ் ஹமீத் கட்டாணை (ENJOINING) பிறப்பிக்குமாறு மாவட்ட…

Read More

பிரதமர்நா ட்டை வந்தடைந்தார்!

இந்தோனேஷியா சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்று (3) இரவு நாடு திரும்பியுள்ளார். 12ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மன்றத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தோனேஷியாவுக்கு பயணமாகியிருந்தார். உலக இஸ்லாமிய பொருளாதார மன்றத்துக்காக இலங்கை முதல் முறையாக அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையும் சீனாவும் கூட்டுக்குழுவை அமைக்க இணக்கம்

இலங்கை அரசாங்கமும் சீன அரசாங்கமும் கூட்டு குழு ஒன்றை அமைக்க இணங்கியுள்ளன. இந்த கூட்டு குழு தொடர்பான பிரதமரும், சீனத்தூதுவரும் அண்மையில் ஹம்பாந்தோட்டைக்கு சென்று திரும்பிய பின்னர் குறித்த இணக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது சீனத்தூதுவரும் இலங்கையின் பிரதமரும் விரிவான பேச்சுக்களை நடத்தியிருந்தனர். இதில் குறித்த பிரதேசத்தில் கைத்தொழில் துறைக்கான நிலத்தை ஒதுக்குவது தொடர்பான பேச்சுகளும் இடம்பெற்றதாக சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

Read More

ஹிலாரி வெற்றி பெறுவதற்­கான சாத்­தியம்; கருத்து கணிப்பு

அமெ­ரிக்க ஜனா­தி­­பதி தேர்­தலில் ஜன­நா­யகக் கட்சி வேட்­பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் உள்­ள­தாக கருத்துக் கணிப்­பொன்று தெரி­வித்­­துள்­ளது. எதிர்­வரும் நவம்­பரில் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி தேர்தல் நடத்­தப்­ப­ட­வி­ருக்­கின்­றது. இந்­த­நி­லையில் ஜன­நா­யக மற்றும் குடி­ய­ரசு கட்சி­களின் சார்பில் ஹிலாரி மற்றும் ட்ரம்ப்­பிற்­கி­டையே கடு­மை­யான போட்டித் தன்மை நிலவி வரு­­கின்­றது. தேர்தல் பிர­சா­ர­ங்கள் அனைத்து மாநி­லங்­க­ளிலும் இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் நடத்­தப்பட்ட கருத்துக் கணிப்பின் படி ஜன­நாயகக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறு­வ­தற்­கான வாய்ப்­புகள்…

Read More

ட்ரம்ப் ஜனா­தி­ப­தி­யா­வ­தற்கு தகு­தி­யற்­ற­வர் – ஒபாமா

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யா­வ­தற்கு டொனால்ட் ட்ரம்ப் தகு­தி­யற்­றவர் அவரை, அனை­வரும் நிரா­க­ரிக்க வேண்­டு­மென  ஜனா­தி­பதி ஒபாமா கோரி­யுள்ளார். அமெ­ரிக்க வெள்ளை மாளி­கையில் நேற்று முன்­தினம்  நடந்த செய்­தி­யா­ளர்கள் சந்­திப்பில் கலந்து கொண்டு பேசிய ஒபாமா, ஜன­நா­யகக் கட்சி வேட்­பா­ள­ரான ஹிலாரி குறித்து கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரும் ட்ரம்ப் ஜனா­தி­பதி பத­விக்கு தகு­தி­யற்­றவர். அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக யாரையும் ஆத­ரித்து இந்த கருத்தை நான் கூற­வில்லை. ட்ரம்ப் எனது கட்­சியைச் சேர்ந்­த­வ­ராக இருந்­தாலும் நான் இதே கருத்தை தான் கூறியிருப்பேன்….

Read More

முஸ்லிம் இன படுகொலை: விசேட நீதிமன்ற விசாரணை தேவை – தேசிய ஷுஹதாக்கள் நிறுவனம் கோரிக்கை

முஸ்லிம் சமூ­கத்­திற்­கெ­தி­ரான இன படு­கொ­லை­களை விசா­ரிக்க விஷேட நீதி­மன்­ற­மொன்­றினை அமைக்­கு­மாறு சர்­வ­தேச சமூ­கத்­தி­டமும் நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­டமும் தேசிய ஷுஹ­தாக்கள் நிறு­வனம் வேண்­டு­கோள்­வி­டுத்­துள்­ளது. 26 ஆவது தேசிய ஷுஹ­தாக்கள் தினத்­தை­யொட்டி நேற்று புதன்­கி­ழமை தேசிய ஷுஹ­தாக்கள் நிறு­வனம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 1990 ஆம் ஆண்டு இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றில் மிக முக்­கி­ய­மான ஆண்­டாகும். 1990 ஆம் ஆண்டு கிழக்கு மாகா­ணத்தில் இரத்த வெள்ளம் பாய்ந்­தோ­டி­யது. கிழக்கு மாகா­ணாத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­க­ளிலும் முஸ்லிம்…

Read More

நோர்வே பிரதமர் நாட்டை வந்தடைந்தார்

நோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு, இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்துள்ளனர். கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். நாட்டுக்கு வந்துள்ள நோர்வே பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளைச் சந்தித்து பேசவுள்ளார்.

Read More