Headlines

மஹிந்தவின் முன்னாள் செயலாளரின் கடவுச்சீட்டு விடுவிப்பு




மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அவருக்கு செயலாளராக கடமையாற்றிய லலித் வீரதுங்கவின் கடவுச்சீட்டை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்றம் 100 இலட்சம் ரூபா பிணை அடிப்படையில் கடவுச்சீட்டை விடுவிக்க இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் லலித் வீரதுங்கவிற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *