Headlines

மஹிந்தவின் முன்னாள் செயலாளரின் கடவுச்சீட்டு விடுவிப்பு

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அவருக்கு செயலாளராக கடமையாற்றிய லலித் வீரதுங்கவின் கடவுச்சீட்டை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் 100 இலட்சம் ரூபா பிணை அடிப்படையில் கடவுச்சீட்டை விடுவிக்க இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் லலித் வீரதுங்கவிற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

எனது ஓய்வூதியப் பணம் ரூபாய் 25,000!- சந்திரிக்கா

தான் முதல் பெற்ற ஓய்வூதியப் பணம் ரூபாய் 25,000- என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை அங்கீகாரத்தின் அதிகரிப்பு ஓய்வூதிய பணமான ரூபாய் 98,500 ற்கு முதல் தான் மாதாந்த ஓய்வூதிய தொகையாக 25,000 ரூபாயையே பெற்று வந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் சம்பளப் பணமாக ரூபாய் 25.000த்தை தான் முதன்முதலில் 1994ம் ஆண்டு பெற்றுக்கொண்டதாகவும், அத்தொகையில் எவ்வித அதிகரிப்பும் 2005 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சர்களின்…

Read More