Headlines

தேர்தல் சட்டத்தை திருத்த தீர்மானம்

2012ஆம் ஆண்டு 22ஆம் இலக்க உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டத்தை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சரவைக்கு பணிப்புரைகளை சமர்ப்பிப்பது தொடர்பில் அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த குழுவின் தலைவராக அமைச்சர் பைசர் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். ரவூப் ஹக்கீம், சுசில் பிரேமஜெயந்த, வஜிர அபேவர்த்தன, ரிஷாட் பதியூதின், மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக, விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் மனோ கணேஷன் ஆகியோர் இந்த…

Read More

முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் உயிர்த்தியாகி அலி உதுமான்

இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த அலி உதுமானின் உயிர்த்தியாகம் மறக்கப்பட முடியாதொன்றாகும். இவ்விடத்தில், “தியாகிகள் மரணிப்பதில்லை” என்ற மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்களின் கூற்றை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இஸ்லாத்தின் வரலாறு இரத்தங்களாலும் பல யுத்தங்களாலும் வரையப்பட்ட காவியமாகவே இருக்கின்றது. முஸ்லிம்களுக்கென்று அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கிய மர்ஹூம் அஷ்ரபோடு ஆரம்ப காலத்தில் 1980 களில் இருந்து ஒன்றாக பாடுபட்ட அலி உதுமான் அவர்கள் 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தீவிரவாதிகளின்…

Read More

மாடறுப்புக்கு எதிராக சிங்ஹ லே போராட்டம்

இலங்­கையில் மாடுகள் அறுப்­ப­தற்கு எதி­ரான போராட்­டத்தை மீண்டும் ஆரம்­பிக்­கப்­போ­வ­தாக சிங்ஹ லே அமைப்பு தெரி­வித்­துள்­ளது. கடந்த கால அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தில் இப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்து இலட்­சக்­க­ணக்­கா­னோரின் கையொப்­பத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிடம் மகஜர் ஒன்­றினைச் சமர்ப்­பித்தும் அதற்­கான நட­வ­டிக்­கை­களை அவர் மேற்­கொள்­ள­வில்லை என அவ்­வ­மைப்பு குற்றம்சாட்­டி­யுள்­ளது. மாடுகள் அறுப்­ப­தற்கு எதி­ரான சிங்ஹ லே அமைப்பின் கோரிக்­கை­களை மீண்டும் ஜனா­தி­ப­தி­யிடம் முன்­வைப்­ப­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னாவை விரைவில் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக சிங்கள ராவய அமைப்பின் முன்னாள்…

Read More

ஹிலாரி கிளிண்டன் ஒரு சாத்தான்: டிரம்ப் கடும் தாக்கு

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஹிலாரி கிளிண்டனை சாத்தான் என டிரம்ப் கடுமையாக தாக்கினார். வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். அதிகார பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரசாரம் சூடு பிடித்தது. ஹிலாரி கிளிண்டனும், டொனால்டு டிரம்பும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த…

Read More

டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரிப்பு

உயர்தரப்பரீட்சைகள் நடைபெறும் அநேக மத்திய நிலையங்களில் டெங்கு நுளம்புகள் அதிகம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த பாடசாலைகளின் அதிபர்களும், கல்வி அமைச்சும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார். மேலும் டெங்குவின் தாக்கம் அதிகம் உள்ள மத்தியநிலையங்களுக்கு பரீட்சைகள் ஆரம்பிப்பதற்கு முன்பு புகை விசிறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பாடசாலைகளுக்கு புகை விசிறும் நடவடிக்கையானது பாடசாலைகள் 3ஆம் தவணைக்காக ஆரம்பிப்பதற்கு முதல் மேற்கொள்ளப்படும் எனவும்…

Read More

காஷ்மீரில் நடக்கும் கொடுமைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் – அ.இ.ம.கா

காஷ்மீர் மக்கள் மீது இந்திய இராணுவத்தால் நடத்தப்படும் கொடுமைகளையும் – உரிமை மீறல்களையும் அ.இ.ம.கா வன்மையாகக் கண்டிக்கிறது கடந்த சில நாட்களாக காஷ்மீர் மக்களுகெதிராக நடத்தப்படும் இந்திய இராணுவத்தின் அடாவடித்தனம் மற்றும் மனித படுகொலைகள் மனித நேயத்தையும் மனித தர்மத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இது, தமது நாட்டு மக்களை தமது இராணுவமே கொன்று குவிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. பலஸ்தீன், ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் நடக்கும் மனித படுகொலைகளுக்கு, காஷ்மீரில் நடக்கும் கொலைகள் இரண்டாம் தரத்தில் இல்லை. இந்தியாவில்,…

Read More

ஜனாதிபதி சட்டத்தரணிக்கு புதிய பதவி

ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் நேற்று (01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இவர் இத்தாலி, மோல்டா, சைப்ரஸ், எல்பேனியா ஆகிய நாடுகளுக்கான தூதுவராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை தழுவியது யார் தெரியுமா ?

இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை தழுவியது யார் தெரியுமா ? கிழியும்ஆயோக்கியர்களின் முகத்திரை…..!! ஏதோ இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது. முகலாயர்கள் வருகைக்கு பின்னர் தான் இஸ்லாம் இந்தியாவில் நுழைந்தது என்ற பொய்யை மீண்டும் மீண்டும் கூறிவரும் பொய்யர்களுக்கு இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்ற நபர் யார் என்று தெரியுமா… ? சேரவம்சத்தை சேர்ந்த சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா. இவரது ஆட்சி இன்றைய கேரளா மற்றும் தமிழகத்தின் தென் பகுதியில் இருந்தது. இவர் இஸ்லாத்தை ஏற்றது…

Read More

சிவில் விமான சேவையை சர்வதேச தரத்திற்கு அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

நாட்டின் சிவில் விமான சேவையை சர்வதேச தரத்திற்கு ஏற்ப அபிவிருத்தி செய்து பேணிவருவதற்கு அரசாங்கம் அர்ப்பணத்தோடு உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (01) கொழும்பில் நடைபெற்ற ஆசிய பசுபிக் வலய சிவில் விமான சேவை பணிப்பாளர் நாயகங்களின் 53 ஆவது மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு இம்மாதம் முதலாம் திகதி முதல் 05 ஆம் திகதி…

Read More

டெங்கு நுளம்பு பரவும் சூழலை வைத்திருந்த 267 பேருக்கு வழக்கு

டெங்கு பரவும் வகையில் சுற்­றுப்­புறச் சூழலை வைத்­தி­ருந்த 1113 பேருக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கவும் மேலும் 267 பேருக்­கெ­தி­ராக வழக்குத் தொடர்­வ­தற்கும் சுகா­தார போஷாக்கு மற்றும் சுதேச வைத்­தி­யத்­துறை அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. மேல் மாகா­ணத்­தி­லேயே டெங்கு நோயின் தாக்கம் அதி­க­ளவில் உண­ரப்­பட்­டுள்­ளது. எனவே அம்­மா­கா­ணத்தில் டெங்கு நோயினை ஒழிக்கும் வேலைத்­திட்­டத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு ஈடு­பட்­டுள்­ளது. குறித்த வேலைத்­திட்டம் கடந்த29 ஆம் திகதி ஆரம்­பிக்­க­ப்பட்டு நேற்­று­டன்­ நி­றை­வுக்கு வந்­தது. எனவே கடந்த 29 ஆம் திகதி மாத்­திரம்…

Read More

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடுபூராகவுமுள்ள 2204 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பரீட்சாத்திகள் பாடசாலை மூலமும் 74 ஆயிரத்து 614 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் தோற்றவுள்ளனர். அத்துடன் 190 விசேட தேவையுடைய பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளமையும் குறி்ப்பிடத்தக்கது. மேலும் பரீட்சார்த்திகள் ஸ்மாட் கைகடிகாரம் உபயோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே பரீட்சாத்திகளின் கைக்கடிகாரம்…

Read More