Headlines

மகிந்தவுடன் இணைந்தது சந்திரிக்காவின் கணவரது கட்சி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கணவரான பிரபல திரைப்பட நடிகர் விஜயகுமாரதுங்க ஆரம்பித்த இலங்கை மக்கள் கட்சி, கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ள அந்த கட்சி ஜன சட்டன பாத யாத்திரையிலும் இணைந்து கொண்டுள்ளது. மகிந்த அரசாங்கத்தில் சில குறைப்பாடுகள் இருந்தாலும் நாட்டுக்கான சிறந்த மாற்றாக இருக்கும் என்பதற்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இலங்கை மக்கள் கட்சியின் தற்போதைய தலைவரான வடமேல் மாகாண சபை உறுப்பினர் அசங்க…

Read More

மீள்குடியேற்ற செயலணியை நிராகரிக்கும் யோக்கியதை விக்கிக்குக் கிடையாது

-சுஐப் எம்.காசிம்  – வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் எந்தவிதமான அக்கறையும் காட்டாத வடமாகாண சபைக்கு, அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட விசேட செயலணியை நிராகரிக்கும் எந்த யோக்கியதையும் கிடையாது என்று யாழ் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பணிமனைத் தலைவரும், வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளருமான பி.ஏ.சுபியான் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை பதவியேற்ற பின்னர், வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு எத்தனையோ தடவைகள் நாம் அவரிடம் கோரியபோதும் எந்த முயற்சியும்…

Read More

முன்னாள் பொலிஸ் மா அதிபரிடம் வாக்மூலம் பதிவு

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் தொடர்பிலேயே குறித்த வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரசுடன் இணைந்து செயற்படும் தனியார் பாடசாலைகளின் இந்த ஆண்டுக்காக இரண்டாம் தவணைக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி மீண்டும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணைக் காலம் ஆரம்பமாகவுள்ளன. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 02ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் இடம்பெற உள்ளது. தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இடம்பெற இருப்பதால் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் தினம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Read More

இணையம் ஊடாக பிரிட்டன் விசா

இலங்­கை­யி­லுள்ள பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­ய­மா­னது , புதிய இணை­யத்­தள விண்­ணப்பப் படி­வத்தைப் பயன்­ப­டுத்தி பிரித்­தா­னி­யா­வுக்­கான விசாக்­க­ளுக்கு வாடிக்­கை­யா­ளர்கள் மிகவும் இல­கு­வாக விண்­ணப்­பிக்க முடியும் என அறி­வித்­தள்­ளது. ‘அக்சஸ் யு.கே.’ என்­ற­ழைக்­கப்­படும் இந்த இணை­யத்­தள விண்­ணப்பப் படிவம் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்ட தர்க்க ரீதி­யான கேள்­வி­க­ளு­ட­னான குறு­கிய படிவம், எடுத்துச் செல்­லக்­கூ­டிய நட்­பு­ற­வான முறைமை, அனு­ம­தி­யின்றி பய­ணத்தை மேற்­கொள்ளக் கூடிய ஐரோப்­பிய ஷெங்கன் பிராந்­திய நாடு­க­ளுக்­கான விசா படி­வங்­களின் பதி­வி­றக்கம் ஆகிய வச­திகள் உள்­ள­டங்­க­லாக ஒரு தொகை அனு­கூ­லங்­களை வழங்­கு­வ­தாக உள்­ளது. பிரித்­தா­னிய…

Read More

வாக்­காளர் பெயர்ப் பட்­­டி­யலை 7ஆம் திகதிக்குள் கையளிக்கவும்

பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட வாக்­காளர் பெயர் பட்­­டி­யலை எதிர்­வரும் 7 ஆம் திக­திக்கு முன்னர் கிரா­ம­சே­வ­க­ரிடம் கைய­ளிக்­கு­மாறு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரிவித் தார். இளை­ஞர்­களின் தேர்தல் அறிவு மற்றும் பங்­கேற்பை வலு­வூட்­டும்­வ­கை யில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள வேலைத்­திட்டம் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று தேர்­தல்கள் ஆணைக்­குழு செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. அதன்­போது கருத்­து­தெ­ரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது­தொ­டர்­பாக அவர் மேலும் கூறு­கையில், இந்த வரு­டத்­துக்­கான வாக்­காளர் பெயர் பட்­டியல் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் பட்­டி­ய­லி­டப்­ப­ட­வுள்­ளது….

Read More

கே.கே. பியசேன கைது!

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியசேன இன்று  (29)காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனத்தை திருப்பி கையளிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த அரச வாகனம் பொலிஸாரல் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் சாரதி கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

“உண்மையான பகுத்தறிவாளராக வேண்டுமெனில், முஸ்லிமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்

“உலகில் அதிகம் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டுத்தப்பட்ட கொள்கை ஒன்று உண்டெனில் அது அனேகமாக இஸ்லாம் மார்க்கமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சமூக சிந்தனையாளர்களில் பலர் இறுதியில் உணர்ந்து கொண்ட தீர்வாக அவர்கள் கண்டு கொண்டது இஸ்லாம். மற்ற கொள்கைகளைப்போல் இஸ்லாம் மேலோட்டமானத் தீர்வுகளைச் சொல்லவில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை மட்டுமின்றி இவ்விரு நிலைகளுக்கும் முந்தைய பிந்தைய தேடல்களுக்கும் இஸ்லாத்தில் தெளிவான விளக்கமுண்டு. ஆனந்த விகடனில் கார்டூனிஸ்டாக இருந்த மதன் எழுதிய, மானுடவியல் குறித்த ஒலிநூலைக் கேட்கும்…

Read More

கொழும்பில் நவீன சாதி முறைமை நிலவுகிறது – அமைச்சர் சம்பிக்க

கொழும்பில் நவீன சாதி முறைமை காணப்படுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த காலங்களில் சாதி முறைமை காணப்பட்ட போதிலும் பின்னர் அது வழக்கொழிந்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எனினும் தற்போது கொழும்பு போன்ற பகுதிகளில் நவீன சாதிய முறைமை அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். தாய் பாலியல் தொழிலாளி என்றால் மகளையும் பாலியல் தொழிலாளி என்ற பிரிவிற்குள்ளும், தந்தை முச்சக்கர வண்டி செலுத்தினால் மகளனும் அதே முசக்கர வண்டி ஓட்டுகின்றனர் பிரிவிற்குள் உள்ளடக்கப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

Read More

பாதயாத்திரையின் இரண்டாம் நாள் ஆரம்பமானது!

மகிந்த ஆதரவு அணியினரின் கொழும்பு நோக்கிய பேரணியின் இரண்டாம் நாள் இன்று காலை மாவனல்லை உத்துவான்கந்த பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகியது. இதேவேளை, குறித்த பாதயாத்திரை இன்றைய தினம் நெலும்தெனிய வரை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த பேரணி பேராதெனியவில் இருந்து மாவனல்லை கனேதென்ன பிரதேசம் வரையில் பேரணியாக சென்றது. “மக்கள் போராட்டம்” எனும் தொனிப் பொருளிலான இந்த பாதயாத்திரை ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது. இதேவேளை, வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக…

Read More

இலங்கையுடனான உறவு நிலைத்திருக்கும்: மோடி

இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா சார்பில் 50.61 கோடி ரூபாய் செலவில் புதிய ஆம்புலன்ஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன. இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதற்கு பிரதமர் நரேந்திரமோடி வீடியோ செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: இந்தியா உதவியுடன் இலங்கையின் பல பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும். இவ்வாறு மோடி…

Read More

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

கொழும்பில் மீண்டும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது இன்று ஆரம்பமாகவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று தொடக்கம் எதிர்வரும் முதலாம் திகதி வரை இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைபெறும் என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். மேலும் இராணுவம்,பொலிஸ் ஆகியோரி;ன் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், ஏற்கனவே இவர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினால் டெங்குவின் தாக்கம் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் குறித்த நான்கு நாட்களுக்கு 450 குழுக்கள் மூலம் குறித்த…

Read More