Headlines

கல்கிசை காதி நீதிமன்றத்தை அவமதித்தவருக்கு பிடியாணை

-அஸ்ரப் ஏ சமத் – கல்கிசை மஜிஸ்ரேட் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் காதி நீதிமன்றத்தில் காதீநீதிமன்றத்தை அவமதித்தவருக்கு கல்கிசை நீதிமன்றத்தி்ல் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு காதீநிதாவான் தேசமான்ய எம்.வை பாவா (ஜே.பி) தெரிவித்தாா். இவ் வழக்கு சம்பந்தமாக காதீநீதாவான் தகவல் தருகையில் – திருமணம் முடித்து 2 மாதம் மனைவியையும் இருந்து விட்டு அவள் கர்ப்பவதியாகி தற்பொழுது 5 மாத குழந்தை ஒரு வருடமாக நடு வீதியில் விட்டு விட்டு, அக்குழந்தைக்கம் தாய்க்கும்…

Read More

நாவிதன்வெளி பிரதேசத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணி

– எம்.எம்.ஜபீர் – நாவிதன்வெளி பிரதேசத்தில் புனித ரமழான் மாதம் மற்றும் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு மின் விளக்குகள் பொருத்தும் பணி மற்றும் திருத்தும் நவடிக்கைகளை பிரதேச சபை உழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. நாவிதனவெளி பிரதேச சபை செயலாளர் எம்.ராமக்குட்டியின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த காலங்களில் அதிகமான பிரதேசங்களில் மின் விளக்குகள் பொருத்தப்படாமல் காணப்பட்ட பிரதேசங்கள் இனங்காணப்பட்டு புதிதாக மின் விளக்குகள் பொருத்தும் வேலைத்திட்டம் தற்போது நடைபெற்றுவருகின்றது. கடந்த காலங்களில் பிரதேச சபையிடம் சமூக தொண்டு அமைப்புக்கள் மற்றும் பிரதேச…

Read More

நாடு கடத்தப்பட்ட மஹிந்தவின் பேச்சாளர்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளரும், சீ.எஸ்.என் தொலைக்காட்சி சேவையின் தலைவருமான ரொஹான் வெலிவிட்ட சிங்கப்பூரில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் நடைபெறும் ப்ரோட்காஸ்ட் ஏசியா கண்காட்சியில் பங்கேற்பதற்காக அவர் கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூருக்கு சென்றிருந்தார். எனினும் விமான நிலையத்தில் 3 மணித்தியாலங்களாக விசாரணைக்கு உட்படுத்திய சிங்கப்பூரின் குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரை இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளனர்.

Read More

வரிச் சுமை: நிரந்தரம் அல்ல

-வி. நிரோஷினி – ‘நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்ட வரிச் சுமையானது தற்காலிகமானதே தவிர, நிரந்தரமானதில்லை. எனவே, தற்போதுள்ள வரி அதிகரிப்பு தொடர்பில், ஐரோப்பிய ஒன்றிய விசாரணைக்குழுவுடன் கலந்துரையாடி, GSP+ வரிச் சலுகையில் நல்லதொரு முடிவை எடுப்போம்’ எனப் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Read More

மேல்மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை விரைவில் நிரப்ப ஜனாதிபதி அறிவுரை!

மேல்மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை விரைவில் நிரப்புமாறு மேல்மாகாண சபையின் கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்சவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மேல்மாகாணத்தில் ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக 2014ம் ஆண்டு பரீட்சை ஒன்று நடைபெற்றதாகவும், ஆனால் குறித்த பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் இதுவரை ஆசிரியர்களாக நியமிக்கப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு முற்றாக நீக்கம்

மகிந்த ராஜபக்சவுக்கு, வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் முழுமையாக நீக்கப்படவுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல்வாதிகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்குவதில்லை என்று அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை ரீதியான முடிவை அடுத்து, மகிந்த ராஜபக்சவுக்கு அளிக்கப்பட்ட இராணுவ கொமாண்டோக்களின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படுகிறது. மகிந்த ராஜபக்சவுக்கு, 104 இராணுவக் கொமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்து வந்த நிலையில், முதற்கட்டமாக கடந்த மே 2ஆம் நாள், 52 இராணுவத்தினர் திருப்பி அழைக்கப்பட்டனர். மீதமுள்ள 52 இராணுவ கொமாண்டோக்களும் இன்று விலக்கிக் கொள்ளப்படவுள்ளனர். இதையடுத்து,…

Read More

நகரங்களின் அபிவிருத்திக்காக 55 மில்லியன் டொலர்கள்

இலங்கையிலுள்ள நகரங்களை அபிவிருத்தி செய்வதற்காக 55 மில்லியன் டொலர்களை உலக வங்கி வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற அபிவிருத்தி, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல திட்டங்களுக்காகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய யாழ்ப்பாணம், காலி, கண்டி ஆகிய நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு குறித்த நிதி பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகவங்கியால் வழங்கப்படவுள்ள குறித்த நிதியானது குறைந்த வட்டியுடன் 5 வருடஇடைவெளியில் 25 வருடங்களில் மீள் செலுத்துவதற்கு ஏதுவாக வழங்கப்படவுள்ளதாக உலக வங்கியின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்….

Read More

கொழும்பில் 2500 டொன் கழிவுகள் அகற்றப்பட்டன

வெள்ளத்திற்கு பின்னர் கொழும்பு மாவட்டத்தில் காணப்பட்ட 2500 டொன் கழிவுகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயற்பாட்டில் இராணுவம், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை ஆகியன இணைந்து கழிவகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதுவரை கொலொன்னாவை, மீதொட்டமுல்ல, கொட்டிகாவத்த முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கொதடுவ, கொஹிலவத்தை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் தொண்டு நிறுவனங்களும் இப்பணிகளில் இணைந்து கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சின் அனர்த்த முன்னாயத்த பிரிவு கூறியுள்ளது. அவ்வாறு…

Read More

முன்னாள் நீதவான் திலின கமகே பிணையில் விடுதலை

முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே கங்கோடவில நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சட்டவிரோதமான முறையில் யானை குட்டி ஒன்றை வைத்திருந்தார் என இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு சரணடைந்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுக்களின் காரணமாக திலின கமகே கட்டாய விடுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னிணைப்பு இன்று கங்கோடவில நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே பினனயில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Read More

ப்ரெடி கமமே மீதான தாக்குதலுக்கு அரசு கண்டனம்

இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், ஊடகவியலாளர் ப்ரெடி கமமே மீது, நீர்கொழும்பில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை அரசாங்கம் கண்டித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் தர்ஷனி குணதிலக்க விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ப்ரெடி கமகே, இன்று நீர்கொழும்பு நகர சபைக்கு அருகில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். சபையின் மாதாந்த ஒன்றுகூடல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற நிலையிலேயே இவர் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

புதிய பட்டியலுக்கு சுகாதார அமைச்சர் அனுமதி

புதிதாக வழங்கப்படும் வைத்தியர் பதவி நியமன பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு சுகாதார அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளதாக, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் அமல் ஹர்ஷடி சில்வா தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை அடுத்தே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய பட்டியலை நாளை health.gov.lk என்ற சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் பார்க்கலாம். இன்றையதினம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித்த மஹிபால தலைமையில் குறித்த நியமனப் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஆய்வாளர்களை திகைக்க வைத்த துட்டன்காமன் கத்தி: விண்கல்லால் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு

பண்டைய எகிப்தின் பதினெட்டாவது வம்ச மன்னன் துட்டன்காமன். 9-வது வயதில் பட்டத்திற்கு வந்த இவன் கி.மு. 1333 முதல் கி.மு. 1324 வரை புதிய இராஜ்ஜியம் என்ற பெயரில் அமைந்த எகிப்தை ஆண்டான். பதவியேற்று சுமார் 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான். இந்நிலையில், 1922-ம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி ஹவார்ட் கார்ட்டர் என்னும் தொல்லியலாளர், பொக்கிஷங்கள் அடங்கிய துட்டன்காமன் மம்மியுடன் கூடிய கல்லறையை கண்டுபிடித்தார். இது உலகம் முழுவதும் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது….

Read More