Headlines

තිළින ගමගේ අද CID  යට 

– නිලුපුලී – අනවසරයෙන් අලි පැටවකු ළඟ තබාගැනීම හේතුවෙන් අධිකරණ නියෝගයක් මත හිටපු මහේස්ත්‍රාත් තිලිණ ගමගේ මහතා අද දින එනම් (ජූනි 7) CID  යට පැමිණ තිබේ .

Read More

வெளிநாட்டவர்களுக்கு இரத்தப் பரிசோதனை அவசியம்

இலங்கையில் தங்கியிருக்கும் நோக்கத்தில் விமானம் மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் ஹோட்டல்,  சுற்றுலா சம்பந்தப்பட்ட தொழில்களுடன் தொடர்புடையவர்கள் இரத்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என சுகாதார அமைசர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 25 இலட்சம் ரூபாய் செலவில் களுத்துறை, கட்டுகஹேன பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘சுவதிவி’ மருத்துவ மையத்தை திறந்துவைத்து உரையாற்றும் போது இதனைக் கூறினார். நாட்டுக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கு மலேரியா, எயிட்ஸ் போன்ற நோய்கள் இருக்கின்றதா என்று அறிந்துகொள்ளுவதற்காக இவ்வாறு இரத்தப் பரிசோதளை…

Read More

சி.ஐ.டியில் திலின கமகே ஆஜர்

அனுமதிப்பத்திரமின்றி யானைக்குட்டியை வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கொழும்பு நீதவான் நீதிமன்ற முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகே, குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் இன்று ஆஜராகியுள்ளார். திலின கமகே, இன்றைய தினம் (07) குற்றப்புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம்  விடுத்த உத்தரவின் பேரில் அவர் இன்று சி.ஐ.டியில் ஆஜரானார்.

Read More

மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய நூல்களை பாடசாலைகளுக்கு வழங்க நடவடிக்கை

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் வினாத் தாள்களின் மாதிரி வினாக்கள் அடங்கிய நூலொன்றை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த நூலினை வலயக் கல்வி பணிமனைகளினூடாகா எதிர்வரும் வாரத்திற்குள் பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ் பிரணவதாசன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் மாணவர்கள் தங்களின் பரீட்சைகளில் முகங்கொடுக்க மிகவும் இலகுவாக இருக்கும் எனவும் சிறந்த பயிற்சியாக இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read More

இரசாயன பகுப்பாய்வாளர்களை கொஸ்கமைக்கு அனுப்ப நடவடிக்கை!

இரசாயன பகுப்பாய்வாளர்களை கொஸ்கமைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இன்று தெரிவித்தார். குறித்த பகுதியில் இன்று ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், முதலில் தீ ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறினார். மேலும் இது தொடர்பாக பொலிஸார் மற்றும் முப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்தும் வருகின்றனர். குறித்த பகுதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் பணியானது இரவு 8 மணியளவில் நிறுத்தப்பட்டு, மீண்டும் இன்று…

Read More

நாமல் பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்.!

முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார். தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் காணப்படும் சொத்து ஒன்று  தொடர்பில் வாக்கு மூலம் அளிக்கவே பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அவர் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சொத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவிற்கு சொந்தமானது. இது குறித்து, ஏற்கனவே சிராந்தி ராஜபக்ஷ மற்றும் யோசித ராஜபக்ஷவிடம் விசாரணை…

Read More

 கொஸ்கம தீ: அபாய வலய எல்லை குறைப்பு

கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் ரவைகள் களஞ்சியசாலையில் ஏற்பட்டிருந்த தீ விபத்தையடுத்து முகாமைச்சுற்றி பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அபாய வலய எல்லை, ஆகக் குறைந்தது  500 மீற்றராக குறைக்கப்பட்டுள்ளது என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read More

1கிலோமீற்றருக்கு அப்பால் வீடு இருந்தால் திரும்பலாம்

கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் ரவைகள் களஞ்சியசாலையில் ஏற்பட்டிருந்த தீ விபத்தையடுத்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கென அறிவிப்பொன்றை இராணுவம் விடுத்துள்ளது. சலாவ இராணுவ முகாமிலிருந்து 1 கிலோமீற்றருக்கு அப்பால் வீடுகள் இருந்தால், அவ்வாறானவர்கள் மட்டும் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பலாம் என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

Read More

கீழே கிடப்பதை எடுக்காதீர்கள்

கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் ரவைகள் களஞ்சியசாலையில் ஏற்பட்டிருந்த தீ விபத்தையடுத்து அங்கிருந்து வெடித்து சிதறியவற்றை எடுக்கவே வேண்டாம் என்று  இராணுவம் அறிவித்துள்ளது. சலாவ இராணுவ முகாமிலிருந்து 1 கிலோமீற்றருக்கு அப்பால் வீடுகள் இருந்தால், அவ்வானவர்கள் மட்டும் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பலாம் என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வெடிக்காத வெடிபொருட்களும் கீழே கிடக்கலாம் என்பதனால், அவ்வாறானவற்றை எடுக்காது 0113818609 என்ற தொலைபேசி இலக்கத்து அறிவிக்குமாறும் இராணுவம் அறிவித்துள்ளது.

Read More

பாதுக்க – அவிசாவளைக்கு விசேட ரயில் சேவை

கொழும்பு – அவிசாவளை வீதி மூடப்பட்டுள்ளமையால் பாதுக்க மற்றும் அவிசாவளைக்கான விசேட ரயில் சேவை செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட வீதி மூடப்பட்டுள்ளது

Read More

கொஸ்கம தீ விபத்தில் காயமடைந்தோர் தொகை அதிகரிப்பு

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில், நேற்று இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில், 47 பேர் காயமடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 37 பேர், சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் பாலித்த மஹிபால கூறினார்.

Read More

முகநூல் (Facebook) தொடர்பில் 925 முறைப்பாடுகள்!

கடந்த ஐந்து மாதங்களில் முகநூல் தொடர்பில் 925 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இணையத்தை பிழையாக பயன்படுத்தியமை தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 925 முறைப்பாடுகளில் சுமார் 95 வீதமான முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கணனி குற்றச் செயல் விசாரணைப் பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

Read More