Headlines

பஸ் கட்டணங்கள் அதிகரிக்க தீர்மானம்




எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து பஸ் கட்டணங்கள் 3.2 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சற்றுமுன்னர் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சுடன் விசேட கலந்துரையாடலொன்று இன்று (20) இடம்பெற்றதாகவும் அதன் பின்னரே குறித்த கட்டண உயர்வு தீர்மானிக்கப்பட்டதாக கெமுணு விஜேரத்ன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *