Headlines

விவசாய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்!

ஒரு விவசாய நாட்டைக் கட்டியெழுப்பி விவசாயப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தில் விவசாய சமூகத்திற்கு தமது உற்பத்திகளுக்கான சிறந்த சந்தை வாய்ப்பையும் நியாயமான விலையையும் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தமது உற்பத்திகள் நுகர்வோரின் கைகளுக்கு சென்றுசேரும் வரையில் பெருமளவான இடைத்தரகர்கள் உள்ள காரணத்தினால் விவசாய சமூகத்தினர் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நேற்று (03) முற்பகல் பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் நடைபெற்ற…

Read More

மொரிஷியஸ் கடலோர பாதுகாப்பு படை கப்பல் இலங்கைக்கு!

கல்கத்தாவிலிருந்து மொரிஷியஸுக்கு சென்று கொண்டிருந்த மொரிஷியஸ் கடலோர பாதுகாப்பு படையின் ‘சீஜிஎஸ் பர்ரகியுடா’ எனும் ஆழ் கடல் ரோந்து கப்பல் நேற்று முந்தினம் (2) ஹம்பாந்தோட்ட துறைமுகத்திற்கு வருகை தந்தது. வருகை தந்த இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் சம்பிரதாய முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டது. மேலும், இக்கப்பல் இன்றைய தினம் ஹம்பாந்தோட்ட துறைமுகத்தில் இருந்து மொரிஷியஸ் நோக்கி பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

முஸ்லிம் பாடசாலை நிர்மாணிக்க உள்ளூர் பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு

இலங்கையில் ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்திலுள்ள வெலிமடை பகுதியில் முஸ்லிம் ஆரம்ப பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உள்ளூர் பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த எதிர்ப்பு காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த புதிய பாடசாலைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. தற்போது வெலிமடை பிரதேச முஸ்லிம் மாணவர்கள் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை வெலிமட முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலையில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி மற்றும் பாடசாலை…

Read More

வைத்தியர்களின் பெயர்ப் பட்டியல் இணையத்தில்

உள்ளக பயிற்சிபெறும் வைத்தியர்களின் பெயர்ப் பட்டியலை இணைய மயப்படுத்தும் பணிகளை, சுகாதாராத அமைச்சின் கணினி பிரிவு மேற்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமைக்குள் இந்த பெயர்கள் இணைய பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும் என அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. உள்ளக பயிற்சிபெறும் வைத்தியர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கு இடையில் இதற்கு முன்னர் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

Read More

மதமாறி இஸ்லாமிய பெண்னை திருமனம் முடித்தமைக்கு ஹாஸிம் அம்லாவே காரணம்- வெய்ன் பார்னெல்

– அஹமட் இர்சாட் மொஹமட் புஹாரி – தென்னாபிக்க அணியில் 2010ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய வெய்ன் தில்லான் பார்னெல் Wayne Dillon Parnell 1989ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் திகதி தென்னாபிரிக்க நாட்டின் போர்ட் எலிசபத் நகரில் பிறந்துள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான பார்னெல் 2013ம் ஆண்டு தனது அறிமுக ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்தியாவிற்கு எதிராக விளையாடியுள்ளதோடு 20க்கு இருபது சர்வதேச போட்டியில் 2009ம்…

Read More

ரமழான் தலை பிறை மாநாடு 06 ஆம் திகதி

ஹிஜ்ரி 1437, ரமழான் மாதத்தின் தலைப்­பிறை பற்றி தீர்­மா­னிக்கும் நாள் எதிர்­வரும் 6 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை மாலை செவ்வாய் இர­வாகும். எனவே அன்­றைய தினம் மாலை மஃரிப் தொழுகை நேர­மான 6.24 மணி­முதல் ரமழான் மாதத்தின் தலைப்­பி­றையைப் பார்க்­கு­மாறு கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் அனைத்து முஸ்­லிம்­க­ளையும் வேண்­டி­யுள்­ளது. பிறை கண்­ட­வர்கள் தகுந்த ஆதா­ரத்­துடன் நேரில் அல்­லது இங்கு குறிப்­பி­டப்­பட்­டுள்ள தொலை­பேசி இலக்­கங்கள்: 011 5234044, 011 2432110, 077 7316415 ஒன்­றிற்கு அறியத் தரு­மாறும் தெரி­வித்­துள்­ளது….

Read More

ஜனாதிபதிக்கு மீண்டும் சீனாவிற்கு அழைப்பு

இரு­நாட்டு உறவுகளையும் மேலும் வலுப்­ப­டுத்தும் வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு சீன ஜனா­தி­பதி ஜின் பிங் விசேட அழைப்பு விடுத்­துள்­ள­தாக அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்­க­ளத்­தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பி­ன் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்திருந்தார்.

Read More

முகம்மது அலிக்கு இரங்கல் தெரிவித்துள்ள மஹிந்த

உலகின் தலைசிறந்த குத்துச்சண்டை வீரரும், முன்னாள் உலக சாம்பியனுமான மொஹமட் அலி தனது 74வது வயதில் காலமானதை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச இரங்கல் தெரிவித்துள்ளார். குறித்த இரங்கலை அவர் தனது உத்தியோகபூர்வமான டுவிட்டர் தளத்தினூடாகவே வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில் அந்த இரங்கல் செய்தியில், “முகம்மது நபியை அனைவரும் ஒரு மிகப்பெரிய மற்றும் தலை சிறந்த விளையாட்டு வீரர் என்பதற்காக மாத்திரம் நினைவில் கொள்வதில்லை. மாறாக அவர் ஒரு உத்வேகத்தை தூண்டும் மனிதநேயம் மிக்கவர். அதனால் தான்…

Read More

 குத்துச்சண்டை ஜாம்பவானான முஹம்மட் அலி காலமானார்

குத்துச்சண்டை ஜாம்பவானான முஹம்மட் அலி, தனது 74ஆவது வயதில் காலமானதாக அவரின் குடும்பப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உலகின் முன்னாள் அதிபாரக் குத்துச்சண்டை சம்பியனும், உலகின் நன்கு அறியப்பட்டுள்ள விளையாட்டு வீரரான அலி, ஐக்கிய அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்திலுள்ள ஃபோனிக்ஸ் நகரத்திலுள்ள வைத்தியசாலையில், இவ்வார ஆரம்பத்தில், அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.

Read More

மூன்று மாதங்களுக்கு மூடப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் பழுதுபார்க்கும் பணிகளுக்காக அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு மூடப்படவுள்ளது என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்பிரகாரம் 2017 ஜனவரி 6ஆம் திகதி முதல் 2017 ஏப்ரல் 6ஆம் திகதி வரை பகல் வேளைகளில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரை மாத்திரம் விமான நிலையம் மூடப்படும். அந்தக் காலப் பகுதியில் சகல விமானங்களினதும் வருகைகளும் புறப்படல்களும் இரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையம் இவ்வாறு மூடப்படுவது…

Read More