Headlines

மீண்டும் பெய்யும் அடைமழையினால் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் சீற்றத்தினால் பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நீலகந்த பிரதேசத்தில் களுகங்கையின் வெள்ள நீர் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 105 பேர் நான்கு அனர்த்த முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே ஜிங் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் பத்தேகம, தொடங்கொட, உனன்விட்டிய ஆகிய பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய…

Read More

குமார வெல்கம நிதிக் குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவில்

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம பொலிஸ் நிதிக் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவில் இன்று (30) ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அமைச்சராக பதவி வகித்த கடந்த ஆட்சியின்போது பஸ் வண்டிகளை கொள்வனவு செய்யும்போது இடம்பெற்றதாகக் கருதப்படும் மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இன்று ஆஜராகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

11 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலைமை.!

கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 8 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படவுள்ளதாக சப்ரகமுவ மாவட்டத்தைச் சேர்ந்த கல்வி அமைச்சர் ஹானு மனுப்பிரிய தெரிவித்துள்ளார். இதனால் 11 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த வாரம் வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களின் காரணமாக நாடு பூராகவுமுள்ள பல பாடசாலைகள் மூடப்பட்டது. அவ்வாறான பல பாடசாலைகள் இன்று கல்வி நடவடிக்கைளுக்காக திறக்கப்படவுள்ளது. எனினும், கேகாலை மாவட்டத்தில் தொடர்ந்தும் மண்சரிவு ஏற்படும் அபாயங்கள் காணப்படுகின்றது. எவ்வாறாயினும் மூடப்பட்ட பாடசாலைகளில்…

Read More

தடைப்பட்ட ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக தடைப்பட்டிருந்த அனைத்து ரயில் சேவைகளும் தற்போது சீரான நிலைமைக்கு திரும்பியுள்ளதாக, ரயில்வே போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார். தபுத்கேம பிரதேசத்தைச்சேர்ந்த அனுராதபுர ரயில் மார்க்கமானது நேற்று பெய்த மழையினால் நீரில் மூழ்கியது இதனால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டது. இதேவேளை, மலையக ரயில் மார்க்கத்தில் சில இடங்கள் கீழ் இறங்கி காணப்பட்ட போதிலும் அதனை சீராக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அவர் தெரிவித்தார்.

Read More

கொரிய வேலைவாய்ப்பு : பரீட்சை இனிமேல் நடைபெறாது!

கொரிய வேலைவாய்ப்புக்காக நடத்தப்படும் திறன்விருத்தி எழுத்துப்பரீட்சை இனிமேல் நடைபெறாது என இலங்கை வெ ளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தென்கொரியாவில் வேலை வாய்ப்புக்காக தொழிலாளர்களை இணைத்துக்கொள்ளும்பொருட்டு நடத்தப்படும் கொரிய மொழி விருத்தி எழுத்துப்பரீட்சை இந்த வருடம் முதல் இடம்பெறாது. அத்துடன் இணையத்தளம் முறைமையில் நடத்தப்படும் என கொரிய மனிதவள அபிவிருத்தி திணைக்களத்தின் இலங்கையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொரிய வேலைவாய்ப்புக்காக நடத்தப்படும் திறன்விருத்தி எழுத்துப்பரீட்சை 2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது…

Read More

அமரர் சிவாவின் மறைவு தமிழ் பேசும் சமூகத்துக்கு பேரிழப்பு! – அமைச்சர் றிஷாத் அனுதாபம்

தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவா சுப்பிரமணியம் அவர்களின் மறைவு, தமிழ் பேசும் சமூகத்துக்கு பாரிய இழப்பாகும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். “சிவா” என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் அமரர் சிவா சுப்பிரமணியம், எழுத்துத் துறையிலே தடம் பதித்தவர். பத்திரிகை உலகிலே அவர் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். சிறந்த பத்தி எழுத்தாளராக இருந்து தனது கருத்துக்களை நாசூக்காக வாசகர் மத்தியில் பதியச் செய்வதில் வல்லவராக இருந்தார். எழுத்தாளன் ஒருவன் இப்படித்தான்…

Read More

சிறிய குண்டுவெடிப்பு இடம்பெற்ற நெலுந்தெனிய பள்ளிவாசலுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

-ஏ.எல்.எம். லதீப் – நெலுந்தெனிய பள்ளிவாசலில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னர் நேற்று மாலை (29/05/2016) அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்தக் கிராமத்துக்கு விஜயம் செய்து பள்ளிவாசல் நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடியதாகவும், பள்ளிவாசளுக்கென கண்காணிப்பு கேமராவை பெற்றுத்தர வேண்டுமென நாம் விடுத்த கோரிக்கையை ஏற்று அதனை நிறைவேற்றித் தருவதாகவும் உறுதியளித்தார் என்று பள்ளிவாயல் தலைவர் ஜனாப் மசூத் தெரிவித்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்ற இந்த சம்பவத்தினால் கிராமத்திலே சிறிய பதட்டம் நிலவியதாகவும்,…

Read More

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடி கணனி

நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களின் 80,000 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மடி கணனிகளை வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டம் (26) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் மாணவர்களுக்கு மடிகணனிகள் பிரதமரால் கையளிக்கப்பட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவு திட்ட வாக்குறுதிக்கமைய இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மடிகணனியைப் பல்கலைக்கழக மாணவர்கள் பெற்றுக் கொள்வதற்காக 75,000 ரூபா நிதி இலகு கடனாக வழங்கப்படுகிறது. நாடளாவிய…

Read More

அனைத்து வகுப்புகளுக்கும் தடை.!

மத்திய மாகாணத்தில் ஞாயிறுக்கிழமை காலையில் நடைபெறும் அனைத்து வகுப்புகளுக்கும் எதிர்வரும் பொசன் போயா தினத்திலிருந்து தடை விதிக்கப்போவதாக மத்திய மாகாண ஆளுநர் நிலூகா ஏகநாயக்க தெரிவித்துள்ளார். சமய கல்வி நடவடிக்கைகளில் சிறுவர்கள் அதிக நாட்டத்துடன் ஈடுபடுவதற்காகவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தின் மத நல்லிணக்கம் தொடர்பான சிறப்பு ஆலோசனைக்குழு மற்றும் மத்திய மாகாணத்தின் ஒத்துழைப்புடனும் இந்நடவடிக்கையானது மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, மத தலைவர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கையின் பேரிலேயே குறித்த…

Read More

நான் செய்த, மிகப்பெரும் தவறு

ஐக்கிய தேசிய கட்சியை விட்டு விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டமையே தான் செய்த பெரிய தவறென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கவலை தெரிவித்துள்ளார். நேற்று -28-  கதிர்காமத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேபோல் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் தனக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்களில் கடமையாற்றும் போது, கடமையாற்ற முடியாத அமைச்சான மக்கள் தொடர்பாடல் அமைச்சை தனக்கு வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ருஹனு பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் நிதி…

Read More

ஐந்தே நிமிடங்களில் டெல்லியை தாக்கும் ஆற்றல் பாகிஸ்தானுக்கு உண்டு

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரின் அருகேயுள்ள கவுட்டா பகுதியில் அணு ஆயுதங்களை தயாரிக்க தேவையான யுரேனியத்தை செறிவூட்டும் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தின் தலைமை ஆராய்ச்சியாளராக முன்னர் பொறுப்புவகித்த அப்துல் காதீர் கான்(80) பாகிஸ்தானின் அணு ஆயுதங்களின் பிதாமகன் என கருதப்படுகிறார். பாகிஸ்தான் முதன்முறையாக கடந்த 28-5-1988 அன்று ஐந்து அணுகுண்டுகளை பூமிக்கு அடியில் வெடிக்கவைத்து பரிசோதனை நடத்தியது. இந்த பரிசோதனைகளின் பாகிஸ்தான் பெரிய அளவில் வெற்றியை காட்டியது. உலகின் வல்லரசு நாடுகளுக்கு இணையான ஆயுதபலம் தன்னிடம் இருப்பதாக…

Read More

ஜப்பான் ராடாரில் அரநாயக்கவின் படங்கள்

அரநாயக்கவில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண்சரிவை, ஜப்பானின் ராடார் செயற்கைக் கோள் புகைப்படமெடுத்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி மண்சரிவு இடம்பெற்றவுள்ள மலைப்பகுதி எவ்வாறு காட்சியளித்தது என்றும் கடந்த 25ஆம் திகதி எந்தப்பகுதி மண்சரிவால் பாதிக்கப்பட்டது என்றும் அந்தப் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.

Read More