Headlines

மோடியை பேஸ்புக்கில் தவறாக சித்தரித்த வாலிபர் கைது

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமத் மெகபூப் (25). நகைக்கடை ஊழியரான இவர் தனது பேஸ்புக், வாட்ஸ்அப்பில் பிரதமர் மோடியை அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அக்பருதின் உவைசி மற்றும் ஒரு தெலுங்கானா எம்.எல்.ஏ. ஆகியோரது காலில் விழுவது போல் சித்தரித்து இருந்தார். இந்த காட்சி இது கொப்பல் மாவட்டம் முழுவதும் பரவியது. இதைப்பார்த்த பா.ஜனதா கட்சியினர் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமத் மெகபூப்பை கைது செய்தனர்….

Read More

வாட்ஸ் ஆப் செயலியில் இதை அவதானித்தீர்களா?

வாட்ஸ் ஆப் செயலியின் குறுஞ்செய்திச் சேவையினை அண்மையில் மேம்படுத்தினர். இந்தப் புதிய பதிவேற்றலின் மூலம் ஒரு புதிய வசதியையும் சேர்த்துள்ளனர். இனி செய்திகளை எழுதும்போது வேண்டிய சொற்களைத்  தங்களின் விருப்பங்களுக்கு வடிவமைத்து கொள்ள முடியும். இது ஐ-போன்களில் வழக்கமான மேம்பாட்டுக்குப்பின் இந்த வசதி இயல்பாகவே தோன்றுகின்றியுள்ள நிலையில் அன்ரொய்டில் இன்னும் இது தேர்வு முறையிலேயே இருக்கின்றது. இந்த வசதியைப் பற்றிய விவரம், வாட்ஸ் ஆப் செயலியின் திரையில் எங்குமே தெரியாது. ஆனால் செய்திகளை எழுதும்போது சொற்களுக்கு முன்னும்…

Read More

முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கை: டொனால்டு டிரம்ப் மீது ஒபாமா தாக்கு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் உத்தேச வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் கடந்த டிசம்பர் மாதம் பேசும்போது, தான் ஜனாதிபதியானால் அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைவது தடை செய்யப்படும் எனவும் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பப்படும் எனவும் கூறியிருந்தார். டிரம்பின் இந்த கருத்து அப்போதே சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் அமெரிக்காவின் ரட்கர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி ஒபாமா கலந்து கொண்டு பேசினார். அப்போது டிரம்பின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் ஒபாமா பேசுகையில்,…

Read More

அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க விழிப்புடன் இருக்க வேண்டும்!

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்படும் அவசர நிலைமைகளுக்கு முகம்கொடுப்பதற்கு எந்நேரமும் விழிப்புடன் இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு உலருணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு  பதிலாக நாளொன்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கொடுப்பனவான 150 ரூபாவை 225 ரூபாவாக அதிகரிப்பதற்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

Read More

நிலையான சமாதானம் பொருளாதார வளர்ச்சியின் மூலமே!

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஜேர்மனியின் வர்த்தக தூதுக்குழுவின் தலைவரும், பொருளாதார அலுவல்கள் மற்றும் வலுசக்தி தொடர்பான ஜேர்மன் பாராளுமன்ற  இராஜாங்க செயலாளருமான உவே பக்மேயர் நேற்று (16) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்தார். ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயத்தின் போது ஜேர்மனியின் அதிபர் அஞ்சலா மேர்கல், இலங்கையில் வர்த்தக முதலீட்டு வாய்ப்புக்களை கண்டறிவதற்காக வர்த்தக  தூதுக்குழுவினரை அனுப்புவதாக வாக்குறுதி அளித்ததற்கு அமைய ஜேர்மனியின் வர்த்தக தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜேர்மனி…

Read More

கடுகண்ணாவ மண் சரிவு: தாயும் மகனும் ஜனாஸாவாக மீட்பு

கண்டி, கடுகண்ணாவ, இழுக்வத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதையுண்டு காணாமல் போன இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 15 வயதுடைய சிறுவனின் சடலமும் தாயொருவரின் சடலமும் இவ்வாறு மீட்கப்பட்டதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஏனைய நால்வரையும் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. கண்டி, கடுகண்ணாவ, இழுக்வத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 06 பேர் மண்ணுக்குள் புதையுண்டு காணாமல் போயிருந்தனர்.

Read More

அதிவேக நெடுஞ்சாலை இன்று இலவசம்

தெற்கு அதிவேகப் பாதையின் கடவத்தை மற்றும் கொட்டாவைக்கு இடைப்பட்ட பாதையை பொதுமக்கள் இன்று இலவசமாக போக்குவரத்திற்கு பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது. இதன்மூலம் போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், வீதி விபத்துக்களை குறைக்க முடியும் என்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Read More

கிளிநொச்சியில் வரலாற்றிலேயே அதிகூடிய மழைவீழ்ச்சி

கடந்த 71 வருடங்களின் பின்னர் கிளிநொச்சிப் பிரதேசத்துக்கு பெய்த அதி கூடிய மழை வீழ்ச்சி நேற்று (16) பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இது 373.2 மி.மீ. என கணிப்பிடப்பட்டுள்ளது. 1945 டிசம்பர் 5 ஆம் திகதியே அப்பிரதேசத்துக்கு பெய்த அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இது 260 மி.மீ. எனவும் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.

Read More

26 பாடசாலைகள் மூடப்பட்டன

மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியமையை அடுத்து, இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 26 பாடசாலைகள் மறுஅறிவித்தல் வரையிலும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மண்சரிவு அபாயம் காரணமாக, மாத்தளை மாவட்டத்தில் தொடங்தெனிய வித்தியாலயலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதேவேளை, வெள்ளப்பெருக்கு அபாயம் காரணமாக வடமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் 25 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரையிலும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. புத்தளம், நிக்கரவெட்டிய, சிலாபம், கிரிஉல்ல ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

Read More

மின்னல் தாக்கத்தில் 65 பேர் பலி

பங்களதேஷில் நிலவுகின்ற மோசமான காலநிலை காரணமாக கடந்த நான்கு நாட்களில் மட்டும் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி, 65 பேர் பலியாகியுள்ளனனர் என்று பங்களாதேஷ் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அந்நாட்டில், மிகவும் பின்தங்கிய வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்றும் சி.என்.என் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

Read More

‘தற்காலிக விடுமுறை வழங்கலாம்’

நாட்டில் நிலவுகின்ற மோசமான வானிலை காரணமாகப் பாடசாலைகளைக் கொண்டு நடத்துவதில் இடையூறுகள் ஏற்படுமாயின், அவைதொடர்பில் ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், சகல வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளார். பாடசாலையைக் கொண்டுநடத்துவதற்கு இயலாத நிலைமையொன்று ஏற்பட்டால், அவ்வாறான பாடசாலைகளுக்குத் தற்காலிகமாக விடுமுறை வழங்குவதற்கோ அல்லது தற்காலிகமாக மூடிவிடுவதற்கோ அனுமதி உண்டு என்றும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read More

சீரற்ற காலநிலை! கடுவலை அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்

கடுவலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையின் நுழைவு பகுதி வெளியேறும் பகுதிகளில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவே இந்த பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக 10 மாத குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளன. பாதிப்பு காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Read More