Headlines

வெள்ளத்தினால் நிரம்பியுள்ள கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை

பெய்துவரும் அடைமழை காரணமாக கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை வெள்ளத்தினால் நிரம்பி காணப்படுகின்றது. மிக நீண்டகாலமாக மழை காலங்களில் இப்பாடசாலையில் வெள்ளம் தேங்கி நிற்பதனால் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்படைவது குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையில் காய்த்திருக்கும் அதிசய மாங்காய்

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியா பிரதேசத்தில் உள்ள குறிஞ்சாக்கேணி இரண்டாம் வட்டார பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் மனிதமுகத்தின் அமைப்பிலான அதிசய மாங்காய் ஒன்று காய்த்துள்ளது. தோற்றத்தில் மனிதர்களின் முகத்தை போலவே உள்ள இந்த அதிசய மாங்காயில் மனிதமுகத்தில் உள்ளது போலவே கண்கள், மூக்கு, வாய் போன்றவையும் காணப்படுகின்றன. இதுதொடர்பான செய்திகள் இலங்கையில் உள்ள சில ஊடகங்களில் வெளியானபின்னர்  சமூகவலைத்தளங்கள் மூலமாக இந்த தகவல் படுவேகமாக பரவி வருகிறது. இதேபோல், நைஜீரியா நாட்டிலும் ஒரு மாங்காய்…

Read More

வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம்

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளம் மிகுந்த நாடு. அதன் அதிபராக  நிகோலஸ் மதுரோ பதவி வகிக்கிறார். சர்வதேச அளவில் ஏற்பட்ட எண்ணெய் விலை வீழ்ச்சியால் வெனிசுலாவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, மருந்து, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கட்டுப்பாட்டால் பொது மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் நிறுவனங்களில் நீண்ட கியூ வரிசையில் நிற்கின்றனர். இதனால் அதிபர் மதுரோ மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே…

Read More

அனர்த்தமா உடன் அறிவிக்கவும்

நாட்டில் தற்போது நிலவுகின்ற மோசடியான காலநிலை காரணமாக ஏற்படும், அவசர அனர்த்த நிலைமைகளை, கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் இருக்கின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அனர்த்தம் தொடர்பில் கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்கலாம். இராணுவம்: 011 2 434 251, 011 3 818 578 கடற்படை: 011 2 212 230, 011 2 445 368, 011 2 212 231 விமானப்படை:  011 2 343 970,…

Read More

 நூதனசாலைக்கு முன்பாக மரமுறிந்து விழுந்தது

கொழும்பு, நூதனசாலைக்கு முன்பாக பாரிய மரமொன்றின் கிளை முறிந்து விழுந்ததில் அப்பகுதியின் ஊடாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More

தகவல் அறியும் உரிமை! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட கருத்தரங்கு

தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு ஒன்றை நடாத்த பிரதமர் அலுவலகம் தீர்மானித்துள்ளது. இந்த கருத்தரங்கு கொழும்பில் நாளைய தினம் நடைபெறவுள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. கருத்தரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புரிதலையும் அறிவையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில்…

Read More

கொழும்பில் வெள்ளம்

கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் சீரற்ற காலநிலையால் கொழும்பில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Pic By: Sujeewa Kumar (நன்றி வீரகேசரி)

Read More

அக்குரனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அக்குரனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ள நீர் வீதியில் நிரம்பி வழிவதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வாகனங்கள் வீதியில் செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது. வியாபார நிலையங்கள், வீடுகள், பாடசாலைகள் என்பனவற்றில் வெள்ள நீர் நிரம்பியுள்ளது பல முஸ்லிம் குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

பாணந்துறையில் சூறாவளி; 30 வீடுகள் சேதம்

பெய்யும் அடைமழை காரணமாக பாணந்துறை பகுதியில் மினி சூறாவளி ஒன்று ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த மினி சூறாவளியால் சுமார் 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதில் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

நாட்டில் அடைமழை

தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.

Read More