Headlines

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக கூடாது – ஒபாமா

பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க மக்கள் ஆதரவுகரம் நீட்ட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விரும்புகிறார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடரவேண்டும் என்று வெளிப்படையாக ஆதரித்துப் பேசியதன் மூலம் அதிபர் ஒபாமா பிரிட்டன் ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்று குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்களை கோபப்படுத்தியுள்ளார். பிரிட்டனுக்கான தனது மூன்று நாள் விஜயத்தின் ஆரம்பத்தில் பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ள அதிபர் ஒபாமா, அதில் ´´பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம், வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது மற்றும் உலகெங்கும்…

Read More

ஏழு புதிய தூதுவர்கள் நியமனக் கடிதங்கள் கையளிப்பு

ஐந்து புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயரிஸ்தானிகர்கள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று(22) கையளித்தனர். இந்த நிகழ்வு கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. அவ்வகையில் திரு. கார்லோஸ் ஈ ஓர்லாண்டோ (Carlos E. Orlando) உருகுவே குடியரசின் தூதுவர் திரு. பிரகாத் எச். டேர்ட்லி (Parakhat H. Durdyev) துருக்மெனிக்ஸ்தான் குடியரசின் தூதுவர் திரு. குயுலோ பெத்ஓ (Gyula PethO) ஹங்கேரி நாட்டின் தூதுவர் திரு. சொசெப் டுரொபெனிக் (Zozef Drofenik) சுலோவேனியா குடியரசின் தூதுவர் திரு. நியான்கொரோ…

Read More

இளவரசர் ஜோர்ஜை சந்தித்த ஒபாமா

பிரித்தானியாவின் மூன்றாவது முடிக்குரிய இளவரசர், வில்லியம் கேத் தம்பதிகளில் மூத்த மகன் இளவரசர் ஜோர்ஜ் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் உரையாடும் புகைப்படம் நேற்று (22) வௌியாகியுள்ளது. லண்டனிலுள்ள கெனிங்ஸ்டன் மாளிகையில் இரவு உறங்க செல்ல முன்னர் அமெரிக்க ஜனாதிபதியும் அவரது பாரியாரும் இளவரசர் ஜோர்ஜ் சந்தித்துள்ளனர். இரவுடையில் உறங்க தயாராக இளவரசர் இருக்கும் சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது அவருடைய தந்தை இளவரசர் வில்லியமும் உள்ளார். ஜேர்மனி செல்லும் வழியில் லண்டனுக்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி…

Read More

சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர் நியமிப்பு

கோட்டை தேர்தல் தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளராக ஆர்.ஏ.டி ஜனக ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனக ரணவக்க தனது நியமனக் கடிதத்தினை நேற்று (22) நண்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

Read More

மஹிந்தவின் பெயரிலும் வீட்டுத் திட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட அனைத்து நாட்டு தலைவர்களின் பெயரிலும் வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு புதிய கிராமங்கள் உருவாக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

Read More

பொலிஸ் அதிகாரியின் காதை கடித்து தப்பிய நபர்

மஹியங்கனை – சேனார பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை மோசடியை முற்றுகையிட சென்ற சந்தர்ப்பத்தில் அதனை நடத்தி சென்ற சந்தேக நபர், பொலிஸ் அதிகாரியின் காதை கடித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு மஹியங்கனை பொலிஸ் அதிகாரிகள் மூன்று பேர், இந்த சட்டவிரோத மதுபான மோசடியை முற்றுகையிட சென்ற போதே இந்த சம்பவத்திற்கு இடம்பெற்றுள்ளதோடு, குறித்த சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தப்பி சென்றுள்ளார். குறித்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி, மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தோடு,சந்தேக நபரை…

Read More

நாளை நீர் வெட்டு

மன்னார் மற்றும் முருங்கன் நகரங்களும் அவை அருகில் உள்ள பிரதேசங்களிலும் நாளை காலை 8.00 மணி முதல் 12 மணி நேரம் வரை நீர் விநியோகம் தடைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மன்னார் நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் மன்னார் மற்றும் முருங்கன், நீர் தாங்கிகளில் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதன் காரணமாகவே இந்த நீர் விநியோக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மஹிந்த நாட்டைவிட்டு வெளியேறியமைக்கான காரணம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்தின் சில பௌத்த மதஸ்தானங்களில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே தாய்லாந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ரண்பா பாதணிகளில் அல்லாஹ் என்ற வாசகம்

இலங்கையின் முன்னணி பாதணி உற்பத்தி நிறுவணமான டி சம்சன் என்ட் சன்ஸ் நிறுவணத்தின் ரண்பா பாதணிகளில் அல்லாஹ் என்ற அறபு எழுத்தை ஒத்த வடிவமைப்புக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அச்சடிக்கப்பட்ட பாதணிகள் சந்தைக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ளதினால் முஸ்லிம்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். புதுவருடப் புத்தாண்டுக்காக செய்யப்பட்ட இப்பாதணிகளிலேயே இவ்வாறான அறபு வடிவமைப்புக்கள் காணப்பட்டுள்ளன. இப்பாதணிகள் தொடர்பில் டி சம்சன் என்ட் சன்ஸ் நிறுவனத்திடம் முஸ்லிம்கள் கடந்த வாரம் முறைப்பாடு செய்திருந்தனர். இது தொடர்பில் தற்போது குறித்த நிறுவணம் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோரி…

Read More

மீள்குடியேற்றக் கிராமங்களுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

– சுஐப் எம் காசிம் – சுமார் இருபத்தைந்து ஆண்டு காலம் தென்னிலங்கையில் அகதி வாழ்வுக்கு முகம் கொடுத்து தற்போது மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ள அகதி முஸ்லிம் மக்களின் பூர்வீகக் கிராமங்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (22) விஜயம் செய்தார். மன்னார் முசலி – சிலாவத்துறை பிரதேசங்களிலுள்ள அகத்திமுறிப்பு, அளக்கட்டு, பீ பீ பொற்கேணி, எஸ் பீ பொற்கேணி, வேப்பங்குளம், மறிச்சுக்கட்டி ஆகிய கிராமங்களுக்கும் சிங்கள மக்கள்…

Read More