மின்சாரம் தடைப்பட்டதனால் மின்னுயர்த்திக்குள் சிக்கிக்கொண்ட யுவதியொருவர் 45 நிமிடங்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் கொழும்பு- 02, கொம்பனி வீதியில் இடம்பெற்றுள்ளது. கொம்பனி வீதியில் உள்ள புகையிரத வீடமைப்பு தொகுதியில் வசிக்கும் யுவதியே இவ்வாறு மீட்கப்பட்டவராவார். குறித்த யுவதி, மின்னுயர்த்தியின் மூலமாக ஏழாவது மாடியிலிருந்து, கீழே வந்துகொண்டிருந்தபோதே, திடீரென மின்சாரம் தடைப்பட்டதால் இடைநடுவில் சிக்கிக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில், தீயணைப்பு சேவை திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்ட தையடுத்து விரைந்து செயற்பட்ட தீயணைப்பு பிரிவினர், அந்த யுவதியை மீட்டுள்ளனர். மின்னுயர்த்தியானது…