Headlines

தாஜுதீன் கொலை : முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலை  தொடர்பிலான  ஆதாரங்களை இல்லாதொழித்த குற்றச்சாட்டின் பேரில் நாராஹென்பிட்டிய பொலிஸ் நிலையத்தின்  முன்னாள்  பொறுப்பதிகாரி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

அவதானம்..! இப்படியும் ஒரு கொள்ளைச் சம்பவம்

தம்பலகாமத்தில் நடைபெற்ற கொள்ளைப் பாணியானது மிகவும் விசித்திரமான வகையில் அமைந்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் தம்பலகாமத்தில் நடைபெற்ற திருமண வைபவமொன்றில் கலந்து கொண்டு விட்டு கணவனும் மனைவியும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிப் பயணித்துள்ளனர். இதன் போது அவர்களின் பின்னால் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அவர்களை மோதித் தள்ளியுள்ளது. விபத்துக்குள்ளான இருவரும் சுதாகரிக்கும் முன்னரே விமுந்து கிடந்த பெண்ணின் கழுத்தில் இருந்த  தாலிக்கொடி உட்பட நகைகளை பறித்துக்கொண்டு பின்னாள்…

Read More

கிராம சேவகரின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு சிவபுரத்தில்  கிராமசேவை உத்தியோகத்தர் கொல்லப்பட்டமையை கண்டித்தும் இதற்கு காரணமான சூத்திரதாரிகளை  சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று புதன்கிழமை (20) கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று அமைதியன முறையில், முன்னெடுக்கப் பட்டிருந்தது.

Read More

ஜனாதிபதி மட்டு விஜயம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முத லாம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஏறா­வூ­ருக்கு விஜயம் செய்­ய­வுள்ளார். கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஜெயி­னு­ லாப்தீன் நசீர் அகமட்டின் அழைப்பின் பேரில் ஏறா­வூ­ருக்கு விஜயம் செய்யும் ஜனா­தி­பதி அன்­றைய தினம் பிற்­பகல் 2 மணிக்கு ஏறா­வூரில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டு ள்ள ஆடைத்­தொ­ழிற்­சாலை மற்றும் கைத்­தறி உற்­பத்தி தொழிற்­சாலை ஆகி­ய­வற்றை திறந்து வைக்­க­வுள்ளார் என கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஜெயி­னு­லாப்தீன் நசீர் அகமட் தெரி­வித்தார்.

Read More

ஊடகவியலாளரின் தந்தை காலமானார்

மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் எஸ். ஆர். லம்பேட்டின் தந்தை எஸ்.எஸ். லம்பேட் நேற்று மாலை காலமானார். இவர் சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தனது 60 ஆவது வயதில் காலமானார். இவரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மானை வேட்டையாடிய நபர் கைது

– பேரின்பராஜா சபேஷ் – சட்ட விரோத துப்பாக்கியைப் பயன்படுத்தி மான் வேட்டையாடிய நபரொருவரை, மான் இறைச்சியுடன் இன்று புதன்கிழமை (20) மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மாவடிஓடைப் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட இவரை, ஏறாவூர் நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ளதாகக் கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்ஆர்பீ சேனநாயக்க தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜயசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைவாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி ரத்னவின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read More

பாஸ்போர்ட் இல்லாமல் 117 நாடுகளுக்கு பயணம் செய்த எலிசபெத் ராணி

தற்போது இங்கிலாந்து நாட்டின் ராணியாக இருப்பவர் இரண்டாம் எலிசபெத். இவர் நாளை தனது 90-வது பிறந்த தினத்தை கொண்டாட உள்ளார். ராணி எலிசபெத்தின் முப்பாட்டனாரின் மனைவி விக்டோரியா, 1837–ம் ஆண்டு ஜூன் 20–ந் தேதி முதல் 1901–ம் ஆண்டு ஜனவரி 22–ந் தேதி வரை இங்கிலாந்தின் ராணியாக ஆட்சிபீடத்தில் இருந்தார். அதாவது, அவரது ஆட்சி காலம் 63 ஆண்டுகள் 216 நாட்கள் ஆகும். ராணி விக்டோரியா தான் இதுவரை இங்கிலாந்திலேயே மிக அதிக காலம் ஆட்சியில் இருந்தவர்…

Read More

சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட கூட்டம்!

திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கான விசேட கூட்டம் நேற்று (19) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்றது. கிராம மட்டத்தில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களாகிய நீங்கள் பொறுப்புணர்வுடன் செயற்படும் போது அங்கு ஏற்படுகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளை கட்டுப்படுத்த முடியுமென்றும் கிராமங்களிலே உள்ள மதத் தலைவர்கள், பெரியார்கள் மற்றும் சிவில் சங்கங்களை இணைத்து இவற்றை தடுப்பது…

Read More

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி பிள்ளையான் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டடிருந்தார். இந்நிலையிலே் அவரை…

Read More

ஈக்குவடோர் தாக்கிய பூமியதிர்ச்சி: உயிரிழந்தவர்கள் தொகை 413 ஆக உயர்வு

ஈக்­கு­வ­டோரைத் தாக்­கிய பூமி­ய­திர்ச்­சியில் சிக்கி பலி­யா­ன­வர்கள் தொகை 413 ஆக உயர்ந்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. ஈக்­கு­வ­டோரின் பசுபிக் பிராந்­திய கடற்­க­ரையை கடந்த சனிக்­கி­ழமை தாக்­கிய இந்த பூமி­ய­திர்ச்­சியில் சிக்­கி­யுள்­ள­வர்­களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற நிலையில் பலி­யா­ன­வர்கள் தொகை மென்­மேலும் அதி­க­ரிக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது. கடந்த 7 தசாப்த காலத்தில் ஈக்­கு­வடோர் எதிர்­கொண்ட பாரிய பூமி­ய­திர்ச்­சி­யாக இது விளங்­கு­கி­றது. இந்த அனர்த்­தத்தில் சிக்கி சுமார் 2,500 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். பூமி­ய­திர்ச்சி தாக்கி இரு…

Read More

மின்னுயர்த்திக்குள் சிக்கிக்கொண்ட யுவதி

மின்­சாரம் தடைப்­பட்­ட­தனால் மின்­னு­யர்த்­திக்குள் சிக்­கிக்­கொண்ட யுவ­தி­யொ­ருவர் 45 நிமி­டங்­க­ளுக்குப் பின்னர் உயி­ருடன் மீட்­கப்­பட்ட சம்­பவம் கொழும்பு- 02, கொம்­பனி வீதியில் இடம்­பெற்­றுள்­ளது. கொம்­பனி வீதியில் உள்ள புகை­யி­ரத வீட­மைப்பு தொகு­தியில் வசிக்கும் யுவ­தியே இவ்­வாறு மீட்­கப்பட்டவராவார். குறித்த யுவதி, மின்­னு­யர்த்­தியின் மூல­மாக ஏழா­வது மாடி­யி­லி­ருந்து, கீழே வந்­து­கொண்­டி­ருந்­த­போதே, திடீ­ரென மின்­சாரம் தடைப்­பட்­டதால் இடை­ந­டுவில் சிக்­கிக்­கொண்­டுள்ளார். இந்த சம்­பவம் தொடர்பில், தீய­ணைப்பு சேவை திணைக்­க­ளத்­துக்கு அறி­விக்­கப்­பட்­ட­ தை­ய­டுத்து விரைந்து செயற்­பட்ட தீய­ணைப்பு பிரி­வினர், அந்த யுவ­தியை மீட்­டுள்­ளனர். மின்­னு­யர்த்­தி­யா­னது…

Read More

பொருளாதார வளர்ச்சியில் பாரிய மாற்றங்கள்!

எதிர்­வரும் ஒன்­றரை வரு­டங்­களில் இலங்கையின் பொரு­ளா­தார வளர்ச்­சியில் பாரி­ய­மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன இதற்­கான ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது .உள்­நாட்டு பொரு­ளா­தா­ரத்தை வளப்­ப­டுத்த உற்­பத்தி ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க வேண்டும் அத்­துடன் வெ ளிநாட்டு முத­லீட்டை அதி­க­ரிப்­ப­தற்­காககுறு­கிய கால மற்றும் நீண்ட கால திட்­டங்கள் வகுக்­கப்­ப­டு­வ­தாக நிதி­ய­மைச்சர் ரவிகரு­ணா­நா­யக்க தெரி­வித்தார். சபு­­கஸ்­கந்த பாது­காப்பு கல்­லூ­ரியில் இடம்பெற்ற ‘இலங்­கையில் தற்­போ­தைய பொரு­ளாதார நிலைமை’ தொடர்பான செய­ல­மர்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனை தெரி­வித்தார் அங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது கடந்த…

Read More