Headlines

ஜனாதிபதி அமெரிக்கா விஜயம்

– லியோ நிரோஷ தர்ஷன் – ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன நான்கு நாள் உத்தியோகப்பூர்வமான விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 20 ஆம் திகதி அமெரிக்கவிற்கு செல்லவுள்ளளார். பன்னாடுகளின் தலைவர்களின் பங்குப்பற்றலுடன் சூழல் பாதுகாப்பு தொடர்பில் இடம்பெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன அமெரிக்கா செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது.

Read More

போர்ட் சிட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கொழும்பில் நிர்மாணிக்கப்படவிருக்கும் போர்ட் சிட்டிக்கு எதிராக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (4) மாலை நான்கு மணியளவில் குறித்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ள இடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்த திட்டத்தினை எதிர்க்கும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த போர்ட் சிட்டி திட்டத்தினை உடனே இடைநிறுத்துமாறு கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் 9 அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் இதன் ஏற்பாட்டாளர் சுஜீவ சாம்கர தெரிவித்துள்ளார்.

Read More

சிறுநீரகம் வழங்கியதை சந்தேகநபர்கள் ஒப்புக் கொண்டனர்

சிறுநீரக மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள எட்டு பேரில் அறுவர் தாங்கள் சிறுநீரகத்தை வழங்கியதை ஒப்புக் கொண்டுள்ளதாக, நீதிமன்றத்தில், அவர்களது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று (4) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். சந்தேகநபர்கள் இந்த நாட்டின் சட்டத்துக்கு அமையவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், சந்தேகநபர்கள் வசமிருந்து போலி ஆவணங்கள் மற்றும் போலி சீல்கள்…

Read More

அஷ்ரபின் குணாதிசயங்களை றிஷாத்தில் காண்கின்றேன்

– சுஐப் எம்.காசிம் –  மர்ஹூம் அஷ்ரப் அவர்களிடம் கண்ட குணாதிசயங்களை, அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் கண்டதனாலேயே, தான் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்துகொண்டதாக, பிரபல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி இன்று (04/04/2016) தெரிவித்தார். மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் அமீர் அலி, நவவி எம்.பி, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜெமீல்…

Read More

வர்த்­த­கர்கள் தொடர்­பாக பொது­மக்கள் முறையிடலாம்

தமிழ் – சிங்­களப் புத்­தாண்டு காலத்தில் பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீதி மற்றும் அவர்­களை ஏமாற்றும் வர்த்­த­கர்­களை மடக்கிப் பிடிக்க பாவ­னை­யாளர் விவ­கா­ரங்­க­ளுக்­கான அதி­கா­ர­சபை ஏப்ரல் 11 ஆம் திகதி வரை சுற்­றி­வ­ளைப்­பு­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. இதன்­படி மொத்த, சில்­ல­றை­க­டைகள் மற்றும் களஞ்­சி­ய­சா­லை­களில் சோதனை நடத்­தவும் அதி­கா­ரிகள் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளனர். பாவ­னை­யா­ளர்­களை  பண்­டிகைக் காலத்தில் ஏமாற்றும் வர்த்­த­கர்கள் அதிக விலைக்கு பொருட்­களை விற்­பனை செய்யும் வர்த்­த­கர்கள் தொடர்­பாக பொது­மக்கள் 011-2399149, 011–7755481 – 3  ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு…

Read More

யால தேசிய பூங்காவில் உள்நுழையும் வாகனங்களுக்கு புதிய விதி

பாடசாலை விடுமுறையில் குறிப்பிடத்தக்க சுற்றுலா பயணிகள் யால தேசிய பூங்காவை பார்வையிட வருவதை முன்னிட்டு யால தேசிய பூங்காவில் உள்நுழையும் வாகனங்களுக்கு புதிய நிபந்தனைகளை விதிக்கவுள்ளதாக வனவிலங்கு திணைக்கள இயக்குனர் ஜெனரல் சுமித் பிலபிடிய தெரிவித்துள்ளார். வன விலங்கு மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சபாரி ஜீப் வண்டி சாரதிகள் மற்றும் அவர்களின் சங்கத்திடமும் கலந்துரையாடி இந்த நிபந்தனைகளை விதிக்கவுள்ளதாக எனவே சபாரி ஜீப் வண்டிகள் இந்த மாதம் 10…

Read More

முஸ்லிம் மாணவனை தீவிரவாதி என்று அழைத்த ஆசிரியை சஸ்பெண்டு

அமெரிக்காவில் டெக்டாஸ் மாகாணத்தில் உள்ள ஹீஸ்டன் முதல் காலனியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 7–வது படிக்கும் முஸ்லிம் மாணவன் வாலீத் அபுஷாபான் (12). சம்பவத்தன்று வகுப்பறையில் ‘பென்ட் இட் லைக் பெக்காம்‘ என்ற சினிமா படம் காட்டப்பட்டது. அதை தொடர்ந்து பரீட்சை நடத்தப்பட்டது. அதன் பின்னர் படத்தில் வந்த காமெடி காட்சிகளை நினைவுபடுத்தி மாணவன் வாலீத் சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த ஆங்கிலமொழி ஆசிரியை வாலீத்தை பார்த்து ‘நீ ஒரு தீவிரவாதி’ அதனால்தான் சிரிக்கிறாய் என்றார்….

Read More

அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி மக்கள் காங்கிரசில் இணைவு

பிரபல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளரும், கல்விமானும் சிறந்த ஆய்வாளரும், அரசியல் விமர்சகருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசில் உத்தியோகப்பூர்வமாக இணைந்து கொண்டார். சாய்ந்தமருது, அல்/ஹிலால் மகாவித்தியாலயத்தில் நேற்று (03) இடம்பெற்ற, எழுத்தாளர் பீர்முகம்மத் எழுதிய “திறன்நோக்கு” என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே இந்த அறிவிப்பை அவர் பகிரங்கமாக விடுத்தார். அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், மர்ஹூம் அஷ்ரபின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை…

Read More

வெலேசுதாவுக்கு மீண்டும் விளக்கமறியல்

பல கோணங்களிலும் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் குறித்து, பண மோசடி குற்றச்சாட்டின் பெயரில் சந்தேகத்தின் பெயரில் கைதாகியுள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னன் வெலே சுதா உட்பட எட்டுப் பேருக்கான விளக்கமறியல் எதிர்வரும் 18ம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிளபிடிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர்களுக்கு எதிரான வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படுவதோடு,அதுவரையில் 14நாட்களுக்கு ஒருதரம் நீதிமன்றில் ஆஜராக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும், ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில்…

Read More

சமூக சேவைகள் தினம் இன்று அம்பாறையில்!

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம், போதை பொருள் பாவனை தவிர்த்தல் மற்றும்  உலக சமூக சேவைகள் தினம் கொண்டாடும் நிகழ்வு இன்று (04), அம்பாறை தீகவாபிய வைத்திய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சமூக வலுவூட்டல் மற்றும் நலனோன்புகை அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க மற்றும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் தலைமையில் அமைச்சின் செயலாளர் மஹிந்த செனவிரத்ன மற்றும் பணிப்பாளர் நாயகம் ரிட்லி ஜயசிங்க ஆகியோரின் பங்களிப்பில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

Read More

ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவை தனியாரிடம்!

ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவையினை தனியார்த்துறையினருக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கையெடுத்து வருவதாக அகில இலங்கை ரயில்வே ஊழியர்களின் பொதுச் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த திட்டமானது ரயில்வே துறையினரை தனியார் மயப்படுத்துவதற்கான ஆரம்பம் என சங்கத்தின் பிரதான செயலாளர் எஸ் பீ விதானகே தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவைத்துறையில் ஏராளமான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவையினை கையளிக்க ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தீர்மானித்துள்ளதாக…

Read More

சம்மாந்துறை பிரதேசத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவோம்: அமீர் அலி

சம்மாந்துறை மத்திய குழுவானது எதிர்காலத்தில் இந்தப்பிரதேத்தின் பிரச்சினைகள் இனங்கண்டு அதனை தீர்க்கின்ற வகையில் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் என பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அ.இ.ம.காங்கிஸின் பிரதித்தலைவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெமீல் அவர்களின் தலைமையில் நேற்று (3) இரவு சாய்ந்தமருது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவின் உட்கட்டமைப்பு சம்மந்தமான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர்…

Read More