Headlines

சிறுவனின் கழுத்தில் சூடு வைத்த தந்தை கைது

– க.கிஷாந்தன் – சிறுவனின் கழுத்தில்  சூடு வைத்த குற்றச்சாட்டில் அச்சிறுவனின் தந்தையை, தலவாக்கலை பொலிஸார்  நேற்று மாலை கைதுசெய்துள்ளனர். தலவாக்கலை, நானுஓய தோட்டத்தைச் சேர்ந்த மதுஷான் என்ற சிறுவனே இச்சம்பவத்தில்  பாதிக்கப்பட்ட நிலையில், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனக்கு கட்டுப்படாமல் குழப்பம் செய்தமையால் நெருப்பில் சூடு காட்டிய கரண்டியால் சுட்டதாக சிறுவனின் தந்தை பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால், சிறுவனின் கழுத்துப் பகுதியில் எரிகாயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே மேற்படி…

Read More

சிறுமி சேயா கொலை வழக்கு மீதான இறுதி தீர்ப்பு இந்த மாதம்

கொட்டதெனியாய பகுதியில் சிறுமி சேயா சவ்தமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் இறுதித் தீர்ப்பு இம்மாதம் 15ஆம் திகதி வழங்கப்படும் என, நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த வருடம் சிறுமி சேயா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.. இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முன்னதாக 17 வயது மாணவன் ஒருவர், கொண்டையா என கூறப்பட்ட துனேஷ் பிரியஷாந்த உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் மரபணு பரிசோதனை அறிக்கையின் படி,…

Read More

நீதி அமசை்சர் மட்டு.மாவட்டத்திற்கு விஜயம்

கிழக்கு மாகாணத்தில் நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைளை கண்காணிப்பதற்காக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ நேற்று (2) மாலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடதொகுதிக்கு வருகைதந்த நீதி அமைச்சர் மாவட்டத்தின் நீதி நிருவாக நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி சவபாதம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாலில் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதிபதிகள் உட்பட பல நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் நீதிமன்றங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க…

Read More

மிக விரைவில் தேர்தல் : தேர்தல்கள் ஆணையாளர்

உள்ளூராட்சி சபை தேர்தல் மிகவிரைவில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் தெரிவித்தார். தேர்தல்கள் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் மிக விரைவில் நடத்தப்படும். மேலும் விசேட தேவையுடையோருக்கு வாக்களிப்பதற்கு விசேட வசதி செய்யப்படும். வாக்குரிமை உள்ள அனைவரும் தமது வாக்குகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதோடு வாக்குரிமை தொடர்பில் நாட்டின் பல இடங்களில் விழிப்புணர்வு…

Read More

பஸ் குடை சாய்ந்து விபத்து

மட்டக்களப்பு – பொலன்னறுவை கொழும்பு பிராதான வீதியின் வெலிகந்த பிரதேசத்திற்கு அருகாமையில் தனியார் பஸ் ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 40 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி விபத்துக்குள்ளான பஸ் வண்டி கதுறுவெலையிலிருந்து மட்டக்களப்பு பக்கமாக கல்முனை நோக்கி பயணித்த வேளையிலே குடை சாய்ந்துள்ளது. இதனால் குறித்த பஸ் வண்டியில் பயணித்த சுமார் 40பேர் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த விபத்துச் சம்பவம்…

Read More

தெமட்டக்கொடையில் துப்பாக்கி பிரயோகம் நடத்தியோருக்கும் காயம்?

தெமட்­ட­க்கொடை, சமந்தா திரை­ய­ரங்கு அருகே தெமட்­ட­க்கொட சமிந்த உள்­ளிட்ட பாரதலக் ஷ்மன் பிரே­மச்­சந்­தி­ரவின் கொலை சந்­தேக நபர்­களை ஏற்றிச்சென்ற சிறைச்­சாலை பஸ் வண்டி மீது மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டின் போது, துப்­பாக்கிச் சூட்டை நடத்­திய சந்­தேக நபர்கள் தரப்­பிலும் ஒரு­வ­ருக்கு காயம் ஏற்­பட்­டுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கின்­றது. சிறைச் சாலை பஸ் வண்­டியில் பய­ணித்த பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் நடத்­திய பதில் தாக்­கு­தலில், தாக்­குதல் நடத்த மோட்டார் சைக்­கிளில் வந்த சந்­தேக நபர் ஒரு­வரே இவ்­வாறு காய­ம­டைந்­துள்­ள­தாக பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். துப்­பாக்கிச்…

Read More

வலது காலுக்கு பதில் இடது காலில் சத்திரசிகிச்சை

வலது கால் முழங்காலுக்கு சிகிச்சை பெற பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது பாடசாலை மாணவியின் இடது காலுக்கு சத்திரசிகிச்சை செய்துள்ளதாக மாணவியின் தந்தை பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பிலிமதலாவை விஜயதுங்க மாவத்தையில் வசிக்கும் ஒன்பதாம் ஆண்டில் கல்விபயிலும் குறித்த மாணவிக்கு சிறு வயது முதல் வலது முழங்காலில் சிறு கட்டி ஒன்று காணப்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை பெற்றுகொள்வதற்காக கடந்த 20ஆம் திகதி பேராதனை வைத்தியசாலையில் 16ஆம் வாட்டில் தனது மகள் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள தந்தை,…

Read More

பஸ் விபத்து: மாணவன் காயம்

– க.கிஷாந்தன் – ஹட்டன் நகரத்திலிருந்து இன்று (3) காலை 7.30 மணியளவில் டயகம நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று பாடசாலை மாணவன் மீது மோதியதால் மாணவன் படுகாயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான். இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவருவதாவது, டிக்கோயா தரவளை பகுதியில் 8 வயதுடைய மாணவன் ஒருவன் தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்லும் வேளையில் ஹட்டனில் இருந்து டயகம நோக்கி பயணித்த தனியார் பஸ் மாணவனின் மீது…

Read More

வழக்கை சமாதானமாய் தீர்க்க ஞானசார தேரர் நீதிமன்றில் கோரிக்கை

ஜாதிக பல சேனா அமைப்பு 2014ம் ஆண்டு கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் புகுந்த bbs அமைப்பினர் தடுத்து நிறுத்தி அசம்பாவிதம் ஏற்படுத்திய சம்பவம் மற்றும் புனித அல்குர்ஆனை அவமதித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குறித்த வழக்கில் ஆஜரான பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் இந்த வழக்கை சமாதானமாக முடித்துக்கொள்வோம் என நீதிமன்றில் கேட்டுள்ளார். மேலும், குறித்த இந்த வழக்கு…

Read More

இலங்கையில் செய்தி இணையதளங்களை பதிவு செய்யக் கோருவது ஏன்?

இலங்கையில் இயங்கும் சகல செய்தி இணையதளங்களும் இம்மாதம் 31-ம் திகதிக்கு முன்னதாக ஊடக அமைச்சில் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஊடக தர்மங்களுக்கும், தராதரங்களுக்கும் உட்பட்ட வகையில் செய்தி இணையதளங்கள் தடையின்றி இயங்குவதற்கு இந்த பதிவு அவசியம் என்று நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் கீழ் ஏற்கனவே பல இணையதளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பதிவு செய்துகொள்ளாத இணையதளங்கள் உரிய திகதிக்குள் பதிவு செய்யப்பட…

Read More

ஆட்டோ சாரதிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!

முச்சக்கரவண்டிகளுக்கு பாதுகாப்பு ஆசனப் பட்டியை அறிமுகப்படுத்தல், தலைக்கவசங்களுக்​கென புதிய தரம் அறிமுகப்படுத்தல் உட்பட வீதி ஒழுங்கு விதிகள் தொடர்பில் புதிய பரிந்துரைகள் வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால், போக்குவரத்து அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்களின் கருத்துக்களுக்கமைய வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால் தயாரிக்கப்பட்ட இந்த பரிந்துரைகள் போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் பின்பற்றப்படும் 50 கிலோ மீட்டர் வேக…

Read More

எம்பிலிபிட்டிய இளைஞன் கொலை வழக்கு இன்று இடம் பெற்றது

எம்பிலிபிட்டிய இளைஞரின் சடலத்தை தோண்டி எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சத்தியக்கடதாசி வாக்குமூலம் அல்லது நெருங்கிய உறவினரின் சாட்சியின் மூலமாக முன்வைக்குமாறு எம்பிலிபிட்டிய நீதவான் உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (3) எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது சத்தியக்கடதாசி வாக்குமூலம் முன்வைக்கப்படும் வரை இந்த வழக்கை பிற்போடுவதாக நீதிபதி பிரசன்ன பெர்ணான்டோ உத்தரவிட்டார்.

Read More