Headlines

குற்றங்கள் நிரூபிக்கப்படின் தண்டனை நிச்சயம்: ருவன் விஜயவர்த்தன

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். எனினும் குற்றமற்றவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர்களை தடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை எனவும், அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் போராட்டங்களை நடத்த வேண்டிய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Read More

யாழில் பாரிய போராட்டம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் அவர்­களின் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்­திற்கு வலுச்­சேர்க்கும் வகை­யிலும் யாழில் பாரிய கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்று இன்­றைய தினம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்நிலையில் நீண்­ட­கா­ல­மாக விசா­ர­ணை­க­ளின்றி மகசின் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் 14பேர் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி நேற்று (01) செவ்­வாய்க்­கி­ழமை எட்­டா­வது நாளா­கவும் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கான வெகு­ஜன அமைப்பின் ஏற்­பாட்டில் இன்று முற்­பகல் 10 மணி­ய­ளவில் யாழ்ப்­பாண பிர­தான பேருந்து நிலை­யத்­திற்கு முன்­பாக இக்­க­வ­ன­யீர்ப்பு…

Read More

ராவணா பலய எச்சரிக்கை!

பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்தால், ஜனாதிபதி செலயகத்தை சுற்றி வளைப்போம் என ராவணா பலய அமைப்பின் அழைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் நேற்று தெரிவித்துள்ளார். சுமார் மூவாயிரம் பௌத்த பிக்குகள் ஜனாதிபதி செலயகத்தை சுற்றி வளைக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபேகோன் தலைமயிலான பிரதிநிதிகளுடன் ராவனா பலய நேற்று (30) சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது. இந்த சந்திப்பின்போது, சத்தாதிஸ்ஸ தேரர் குறித்த எச்சரிக்கையை…

Read More

கைதிகள் விடுதலையால் பாதுகாப்பிற்கு பிரச்சினையில்லை

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் சில தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவது தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சினையல்லவென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று முற்பகல் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். இந்தநிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 20 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் நிறைவுறுத்தப்பட்டு விடுவிக்க தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read More

ரயிலில் தற்கொலை செய்ததாக நம்பப்படும் 18 வயது மாணவன் குறித்து சந்தேகம்

– பா.சிகான் – அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கடிதத்துடன்  மாணவன்  இன்று தற்கொலை செய்தமை குறித்து மக்கள் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.   கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்ற ராஜேஸ்வரன் செந்தூரன் (வயது 18) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.   கோண்டாவில்  பகுதி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இன்று (26) காலை  ஓடும் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   எனினும் இம்மாணவன் தனியாக வந்தாரா அல்லது…

Read More

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை : மங்கள ​

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது 116 அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய முடி­யு­மாயின் ஏன் மீத­முள்­ள­வர்­களை விடு­தலை செய்­ய­மு­டி­யாது. அர­சியல் கைதி­களை விடு­விப்­பதில் தவறில்லை. அவர்­களை சமூ­க­ம­யப்­ப­டுத்த வேண்டும் என வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். அத்­துடன் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தை இன்னும் வைத்­தி­ருப்­பதில் அர்த்தம் கிடை­யாது. குறித்த தடைச்­சட்­டத்தை நீக்­கி­விட்டு சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு ஏற்றால் போல் புதிய சட்டம் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய தேசிய கட்­சியின்…

Read More

ஜனா­தி­ப­தியின் பதில் இன்று

தமிழ் அர­சியல் கைதிகள் விட­யத்­திற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்றைய தினம் தனது பதிலை வழங்­க­வுள்ள நிலையில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் கைதி கள் மற்றும் அவர்­களின் உற­வி­னர்கள் பலத்த எதிர்­பார்ப்­பு­டனும் நம்­பிக்­கை­யு­ட­னு­ம் இருக்கின்றனர். நீண்­ட­கா­ல­மாக நாடளா­விய ரீதியில் உள்ள தமிழ் அர­சியல் கைதிகள் தமது விடு­த­லையை ஆட்­சி­மாற்­றத்தின் பின்னர் வலி­யு­றுத்தி வந்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் கடந்த மாதம் 12ஆம் திகதி சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­தனர். ஐந்து தினங்­களின் பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வழங்­கிய வாக்­கு­று­திக்கு அமை­வாக எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக்…

Read More

அமைச்சர் றிஷாத் அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அரசுக்கு தொடர்ந்தும் நான் அழுத்தங்களை கொடுப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று நானாட்டான் கலாச்சார மண்டபத்தில் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை )  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான  றிஷாத்  பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது.  இங்கு பேசும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். நானாட்டான் பிரதேச அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள்…

Read More

அரசியல் கைதிகளின் விடுதலை?

அரசியல் கைதிகள் நிபந்தனை பிணை அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தாலும் அதனை முழு விடுதலையாக கருத முடியாது என்று நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

தமிழ் மக்களின் ஜனநாயக போராட்டங்களுக்கு அ.இ.ம.கா. ஆதரவு வழங்கும்

– இர்ஷாத் றஹ்மத்துல்லா –  சிறைச்சாலைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் பேசி வந்துள்ளார். கடந்த அரசாங்கத்திலும்,முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரிடத்தில் இது தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பல முறை பேசி யுள்ளார். புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடத்திலும் இந்த கைதிகளின் விசாரணைகள் துரிதப்படுத்தப்படுவதுடன்,சந்தேகத்தின் பேரில் குற்றங்கள் பதியப்படாதவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை…

Read More

அரசியல் கைதிகளுக்கு இன்று முதல் பிணை

சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு பிணை வழங்கும் செயற்­பாட்­டுக்கு சட்­டமா அதிபர் திணைக்­களம் எதிர்ப்புத் தெரி­விக்கக் கூடாது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார். அந்த வகையில் இன்று முதல் தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு பிணை வழங்கும் செயற்­பாடு இடம்­பெறும் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி தமிழ் அர­சியல் கைதிகள் மீண்டும் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். இந்­த­நி­லையில் இவ்­வி­டயம் குறித்து தேசிய கலந்­து­ரை­யா­டல்கள் அமைச்சர் மனோ கணேசன் நேற்று பிர­தமர் ரணில்…

Read More