Headlines

இலத்திரனியல் அடையாள அட்டைக்கு ரூ. 8 பில்லியன்

புதிய இலத்திரனியல் அடையான அட்டையை வழங்குவதற்காக 8 பில்லியன் ரூபாய் தேவைப்படுமென கணக்கிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நாவின்ன தெரிவித்துள்ளார்.

Read More

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் கைது

ருவன்வெல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் இருவர் இலஞ்சம் பெற்ற சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முறையற்ற விதத்தில் மணல் அகழ்வை மேற்கொள்வதற்கு உதவி புரிவதற்கு சம்பந்தப்பட்டவர்களிடம் 8500 ரூபாய் பணத்தினை இந்தப் பொலிஸ் அதிகாரிகள் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 5000 ரூபாய் பணத்தினை இந்த பொலிஸ் அதிகாரிகள் ஏற்கனவே பெற்றுள்ளதாகவும், மிகுதிப் பணத்தை பெற முற்படுகையிலேயே இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை…

Read More

மரக்கறி விலை அதிகரிக்கும் அறிகுறி

எதிர்வரும் நாட்களில் மரக்கறி விலை மேலும் உயரலாம் என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது. மரக்கறி விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கப்படாமை காரணமாக கூடிய விலை கொடுத்து உரங்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நியூஸிலாந்து பிரதமர் இலங்கை வருகிறார்

நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 23ம் திகதி அவர் இலங்கை வரவுள்ளதாக இலங்கையிலுள்ள நியூஸிலாந்து தூதரக பேச்சாளர் ஒருவர் கூறினார். நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ 03 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க உள்ளதுடன் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். நியூசிலாந்து முதலீட்டு நிறுவனங்கள் மேற்கொள்கின்ற விவசாய வேலைத் திட்டங்களை நியூஸிலாந்து பிரதமர் ஆரம்பித்து வைக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதவிர இலங்கையிலுள்ள நியூஸிலாந்து…

Read More

இந்தியாவுக்கு பயணமானார் ரணில்

தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு ரணில் விக்கிரமசிங்க இன்று (12) காலை இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் இன்று மதியம் நாடு திரும்பக் கூடுமென்று எதிர்பார்ப்பதாக பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read More

உலக சந்தையில் பெற்றோல் விலை மேலும் விழ்ச்சி

உலக சந்தையில் பெற்றோல் விலை மேலும் விழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க சந்தையில் நேற்றைய தினம் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று  5% குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெருளாதார தடைகள் நீக்கப்பட்ட பின்னர் ஈரான் மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளதுடன் ஈராக்கும் மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளது. அதேபோன்று சவூதி அரேபியாவும் எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்துள்ளது.இந்த நிலமையே எண்ணெய் விலை வீழ்ச்சியடைவதற்கு காரணமாகும்.

Read More

சவூதி பாடசாலையில் துப்பாக்கி சூடு ; 6 பேர் பலி

சவூதி அரேபியாவில் பாடசாலை அலுவலகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பனியாற்றிய 6 சக ஆசிரியர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி ஜாசன் மாகாணத்தில் உள்ள அல்-தியர் (Al-Dayer) நகரில் உள்ள பாடசாலை அலுவலகத்திற்கு ஆயுதம் ஏந்திய ஆசிரியர் ஒருவர் நுழைந்து, கண் இமைக்கும் நேரத்தில் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில், 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4 பேருக்கு பலத்த குண்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சவூதியின் உள்துறை…

Read More

உலகப்போர் மூளும்: ரஷ்யா எச்சரிக்கை

சிரியாவில் ஆட்சியாளர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இருதரப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யும் முயற்சிகள் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் சிரியாவில் ரஷியப் போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். களின் பதுங்குமிடங்களை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றது. இதனால், அமைதி பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, வான்வழி தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி சமீபத்தில் அறிவுறுத்தி…

Read More

முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குவைட் பயணம்

கொழும்பு மாவட்ட மாவட்ட அபிவித்தி குழு இணைத் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று (11) பிற்பகல் குவைட் நாட்டுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். குவைட் நாட்டின் ஐக்கிய தேசியக் கட்சி கிளையினரின் அழைப்பின் பேரிலேயே இரு நாள் விஜயமொன்றிணை மேற்கொண்டிருக்கும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. நாளைய தினம் நாடு திரும்பவுள்ளார். இந்த விஜயத்தின்போது குவைட் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள கட்சியின் விரிவாக்கள் நடவடிக்கைகள்…

Read More

இன்று மஹிந்த புதிய அலுவலகம் ஆரம்பிக்கிறார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் மற்றும் மக்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று (12) ஆரம்பிக்கப்படவிருக்கிறது. பத்தரமுல்லை, ஜயந்திபுர, நெலும் மாவத்தையில் திறந்து வைக்கப்படவுள்ள இந்த நிகழ்வில்  கூட்டு எதிக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Read More

இரண்டு பேருக்கு மரண தண்டனை விதிப்பு

கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் இரண்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு இரத்தினபுரி, மன்ததெனிய பிரதேச நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கு 17 வருடமாக  இடம்பெற்று வந்த நிலையில் இரத்தினபுரி மேல் நீதிமன்றம் நேற்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹோமாகம மற்றும் அநுராதபுரம் பகுதிகளை சேர்ந்த இருவருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Read More

70 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலையில் 70 அத்தியாவசிய மருந்துப் பொருள் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக மருந்துப்பொருட்களுக்கு இவ்வாறு தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. புற்று நோய், சிறுநீரக நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பல நோய்களுக்கான 70 வகை அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாக சுகாதார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மருந்துப்பொருள் இறக்குமதி செய்வதற்கு விலைமனுக் கோரல்கள் உரிய நேரத்தில் அனுப்பி…

Read More