Headlines

இன்று முதல் யோசனைகளை வழங்கலாம்..!

தேசிய அர­சாங்­கத்­தினால் ஸ்தாபிக்­கப்­ட­வுள்ள புதிய அர­சியல் அமைப்பு சீர்­தி­ருத்தம் தொடர்பில் பொது மக்­களின் கருத்­துக்­களை பெற்­றுக்­கொள்ளும் நட­வ­டிக்கை இன்­றைய தினம் முதல் ஆரம்­பிக்­கப்­படவுள்ளதாக அர­சாங்க தகவல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. நாட­ளா­விய ரீதியில் முன்­னெ­டுக்க எதிர்­பார்க்கும் இச்­செ­யற்­றிட்­டத்தின் முதல்­கட்ட நட­வ­டிக்­கைகள் கொழும்பு மாவட்­டத்தில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது. அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்கை ஒன்­றி­லேயே இந்த விடயம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் இவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது. அர­சியல் அமைப்பு சாச­னத்தில் பல்­வேறு மாற்­றங்­களை உள்­வாங்கும் நோக்­குடன் தேசிய அர­சாங்­கத்­தினால்…

Read More

வகுப்­ப­றை­களில் தொலை­பே­சி பாவ­னைக்குத் தடை

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தமது கடமை நேரத்தில் வகுப்பறைகளில் கையடக்கத் தொலைபேசிகளைப் பாவிக்கக் கூடாதென்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம், சகல வலையக் கல்விப் பணிப்பாளர்கள் மூலமாக, பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஆசிரியர்கள் தமது கடமை நேரங்களில் வகுப்பறைகளில் வைத்து கையடக்கத் தொலைபேசிகளை பாவித்தமை மூலம் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்களிடம் இருந்து வந்த முறைப்பாடுகளை கவனத்திற் கொண்டு, கண்டிப்பான உத்தரவை கிழக்கு…

Read More

அதி­கார பகிர்­வுக்கு செல்வதற்கு தடை­யில்லை : விஜே­தாச

ஒற்­றை­யாட்சி மற்றும் சமஷ்டி என்று வெறும் வார்த்­தை­களை பற்றிப் பிடித்­துக்­கொண்­டி­ருக்­காமல் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­களை தீர்க்கும் வகை­யிலும் தேசியஒற்­று­மையை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லு­மான அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றுக்கே செல்­ல­வேண்­டி­யுள்­ளது என்று நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ தெரி­வித்தார். மேலும் ஒற்­றை­யாட்சி முறை­மையின் ஊடாக முழு­மை­யான அதி­காரப் பகிர்­வுக்கு செல்­வ­தற்கு எவ்­வி­த­மான தடை­களும் இல்லை. ஆனால் எவ்­வா­றான முறை­மைக்கு செல்­ல­வேண்டும் என்­ப­தனை மக்­களே தீர்­மா­னிக்­க­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார். ஒற்­றை­யாட்சி முறை­மையில் மாற்றம் ஏற்­ப­டாது என்று தேசிய அர­சாங்கம் தெரி­வித்­து­வ­ரு­கின்ற நிலையில் ஐக்­கிய இலங்­கைக்­குள்­ளேயே தீர்வு…

Read More

அரசாங்கத்துடன் விரைவில் இணையவுள்ள கூட்டு எதிரணியின் முக்கிய குழுவினர்

கூட்டு எதி­ரணி என்ற நாமத்தில் நாட்டை கூட்­டாக அழித்­தொ­ழிக்கும் கும்­பலில் இருந்து ஒரு குழு­வினர் விரைவில் அர­சாங்­கத்தில் இணை­ய­வுள்­ளனர். புதிய அர­சி­ய­ல­மைப்­பினை நிறை­வேற்­று­வ­தற்­காக மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை ஏற்­க­னவே எமது கைவசம் உள்­ளது. எனினும் நாட்டின் அபி­வி­ருத்­தியை கருத்திற் கொண்­டே­ எம்­முடன் கூட்டு எதி­ர­ணி­யினர் இணை­ய­வி­ருப்­ப­தாக வீட­மைப்பு மற்றும் நிர்­மா­ணத்­துறை அமைச்­சரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலை­வ­ரு­மான சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார். நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டத்தை முழு­மை­யாக எதிர்த்து வரும் கூட்டு எதி­ர­ணி­யினர் எமது ஆட்­சி காலை­வாரும்…

Read More

42 வரு­டங்­க­ளுக்கு பின்பு அழைப்பு விடுத்­துள்ள ஜேர்மன் அரசு

ஜேர்­மன் நாட்­டி­லி­ருந்து இலங்கை தலை­வ­ரொ­ரு­வ­ருக்கு சுமார் 42 வரு­டங்­க­ளுக்கு பிறகு அழைப்பு கிடைக்­க­பெற்­றுள்­ளது. இதன்­படி அந்த நாட்டு அர­சாங்­கத்தின் அழைப்­பினை ஏற்று அடுத்த மாதம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜேர்­ம­னுக்கு விஜயம் மேற்­கொள்­ள­வுள்ளார். இலங்கை அர­சாங்­கத்தின் சீரான வெளி­நாட்டுக் கொள்­கையின் கார­ண­மாக ஜேர்­மன் நாட்­டி­லி­ருந்து இந்த அழைப்பு கிடைக்­க­ப்பெற்­றுள்­ளது. ஜன­வரி 8 ஆம் திகதி ஆட்சி மாற்­றத்­திற்கு பின்னர் அபி­வி­ருத்தி அடைந்து வரும் பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவுக்கு அழைப்­புகள் கிடைக்­க­ப்பெற்ற வண்­ண­முள்­ளமை விசேட அம்­ச­மாகும்….

Read More

சூதாட்ட நிலையம் முற்றுகை; 8 பேர் கைது

கொஸ்­வத்தை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வீடொன்றில் இயங்கி வந்த சூதாட்ட நிலையம் ஒன்று பொலி­ஸா­ரினால் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டுள்­ளது. கொஸ்­வத்தை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட போத்­த­லே­கம பிர­தேச வீடொன்றில் மிகவும் இர­க­சி­ய­மான முறையில் நடத்திச் செல்­லப்­பட்ட சூதாட்ட நிலை­யமே இவ்­வாறு பொலி­ஸாரின் முற்­று­கைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­ந­ட­வ­டிக்­கையின் போது அவ்­வீட்டில் சூதாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த எட்டுப் பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். இவர்கள் நீண்ட நாட்­க­ளாக இவ்­வாறு இந்த சட்­ட­வி­ரோத செயலில் ஈடு­பட்டு வந்­தி­ருப்­ப­தா­கவும், வெளி­யி­டங்­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­களும் இங்கு சூதாட்­டத்தில் ஈடு­ப­டு­வ­தா­கவும் அவர்­க­ளிடம் மேற்­கொண்ட…

Read More

தீவிரவாதத்துக்கு, ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை – றிஷாத் பதியுதீன்

நாட்டில் சிங்கள முஸ்லிம் கலவரத்தை உருவாக்க மேற்கொள்ளும் சதி முயற்சிகளுக்கு இந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாதென்றும், இவ்வாறான பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டுமென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். நேற்று  (17) குருநாகலில் இடம்பெற்ற பேராளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் கூறியதாவது, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளையும் அவர்களுடைய பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்காக மர்ஹூம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

Read More

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோத்தா

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ  இன்று காலை வாக்குமூலம் வழங்குவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரக்னங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

வடக்கு மற்றும் தலைமன்னார் புகையிரத சேவைகளில் மாற்றம்

வடக்கு மற்றும் தலைமன்னார் நோக்கி புறப்படும் புகையிரதங்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் இன்று  தெரிவித்துள்ளது. அதன்படி புதிய நேர அட்டவணைகள் வருமாறு, கொழும்பு யாழ்பாணம் இடையில் சேவையில் உள்ள யாழ்தேவி கல்கிஸ்ஸையில் இருந்து காலை 05.50 மணிக்கு ஆரம்பமாகி கொழும்பு கோட்டையில் இருந்து காலை 06.35 இற்கு யாழ்ப்பாணம் நோக்கி புறப்படும் இந்த புகையிரதம் பிற்பகல் 02.37 இற்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளதுடன், பிற்பகல் 03.20 ற்கு காங்கேசன்துறையை சென்றடையவுள்ளது. யாழ்தேவி யாழ்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி…

Read More

இலங்கை விமானப்படைக்கு விரைவில் புதிய ரக போர்விமானங்கள்

இலங்கை விமானப்படைக்காக போர்விமானங்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படு வருவதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவி்த்துள்ளார். இலங்கை விமானப்படையில் காணப்படும் போர் விமானம் 30 வருடங்கள் பழைமையானது எனவும் அதன் பாவனைக்காலம் முடிவடைந்துள்ளதாகவும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனால் விமானப்படைக்கு புதிய ரக போர் விமானங்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். இதற்காகவே போர்விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. ஆனால் எந்த நாட்டிலிருந்து போர் விமானங்கள் கொள்வனவு செய்வது என்பது பற்றி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர்…

Read More