Headlines

ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சியில் சாதாரண உடையில் பங்கேற்ற ஜனாதிபதி

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நேரடி நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதாரண உடையில் பங்கேற்றுள்ளார். இன்று காலை 7.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இவ்வாறு பங்கேற்றுள்ளார். அண்மைய வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவர் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேரடியாக வருகை தந்து, நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அரசாங்கத்தின் பலம்பொருந்திய அமைச்சர்கள் அமைச்சுக்களின் செயலாளர்கள் கூட வானொலி நிகழ்ச்சிகளுக்கு கலையகத்திற்கு சென்றதில்லை எனவும், வீடுகள் அலுவலகங்களிலிருந்தே பங்கேற்றிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மற்றும்…

Read More

ஜனாதிபதியின் அறிவிப்புக்களை ஆலோசனையாகவே எடுக்கவேண்டும்

அர­சி­ய­ல­மைப்பு 19 ஆவது தட­வை­யா­கவும் திருத்தம் செய்­யப்­பட்­டுள்ள நிலையில் ஜனா­தி­ப­தியின் கணி­ச­மான அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன. அதனால் ஜனா­தி­ப­தியின் கூற்­றுக்­களை ஆலோ­ச­னை­க­ளாக மாத்­தி­ரமே எடுத்­துக்­கொள்ள வேண்டும் என்­ப­தோடு பிர­த­மரின் கருத்­துக்­க­ளையே நடை­மு­றைக்கு சாத்­தி­யப்­படும் விட­யங்­க­ளாக கருத வேண்டும் என நவ சம­ச­மாஜ கட்­சியின் தலைவர் கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ன தெரி­வித்தார். யுத்­தக்­குற்ற விசா­ரணை நீதி­மன்றம் அமைப்­பது தொடர்பில் அர­சாங்கம் அவ­சரம் காட்­டாது என்ற ஜனா­தி­ப­தியின் கருத்து தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும்…

Read More

இலங்கை கடற்படையினருக்கு தொடர்ந்து பயிற்சியளிப்போம் : நவாஸ்

இலங்கை கடற்படையினருக்கு பயிற்சிகளையும் நாம் தொடர்ந்து வழங்குவோம்.   அத்தோடு இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்வது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இது எமது முதலாவது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையாக அமையும்  என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி நவாஸ் ஷெரிப்பிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.  அதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர்…

Read More

மூன்று ஆசனங்கள் கொண்ட பேருந்துகளை தடை செய்யக் கோரிக்கை

கடந்த காலங்களில் இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மூன்று ஆசனங்களைக் கொண்ட பேருந்துகளை தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளின் ஆசனங்களால் பொது மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இந்த விசாரணைகளுக்காக பிரதி மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் மற்றும் மத்திய போக்குவரத்துச் சபை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தப் பேருந்துகள் தூர பயணங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் எனவும் இனிமேல் இவ்வாறான பேருந்துளை இறக்குமதி செய்வது தடை செய்யப்படும் எனவும்…

Read More

சட்டம் அனுமதித்தால் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளை சுட்டே கொல்வேன்

இந்­தியச் சட்டம் அனு­ம­தி­ய­ளித்தால் பாலியல் துஷ்­பி­ர­யோக குற்­ற­வா­ளி­களை சம்­பவ இடத்­தி­லேயே சுட்­டுக்­கொல்வேன் என்று டில்லி பொலிஸ் ஆணை­யாளர் பி.எஸ்.பஸ்ஸி தெரி­வித்­துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, பெண்கள் பாது­காப்பு குறித்து நாங்கள் எப்­போதும் கவ­லைப்­ப­டு­கிறோம். பாலியல் துஷ்­பி­ர­யோகம் உட்­பட பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­களில் ஈடு­ப­டு­வோரை, சட்டம் அனு­ம­தித்தால், சம்­பவ இடத்­தி­லேயே துப்­பாக்­கியால் சுடவோ, தூக்­கி­லி­டவோ விரும்­பு­கிறோம். அத்­த­கைய அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்த டில்லி பொலிஸ் தயங்­காது. பெண்கள் தங்­களைத் தாங்­களே தற்­காத்­துக்­கொள்­வது நல்­லது. அதற்­காக நாங்கள் பொறுப்பை…

Read More

கடற்றொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உபகரணங்களை பாவிக்க தடை

மீன்பிடி நடவடிக்கைகளின்போது பாதிப்பை ஏற்படுத்தும் உபகரணங்களை இன்று (6) முதல் பாவிப்பதற்கு தடை விதிப்பதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. கடற்றெபாழிலின்போது பாதிப்பை ஏற்படுத்தும் உபகரணங்கள் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை நாரா நிறுவனம் கடற்றொழில் அமைச்சரிடம் இன்று கையளித்துள்ளது. லைலா வலை மற்றும் சுறுக்கு வலை என்பவற்றைப் பயன்படுத்தி மீனிபிடித் தொழிலில் ஈடுபட தடை விதிப்பதாக அமைச்சர் இதன் போது  அறிவித்துள்ளார். இன்று முதல் இது சட்டமாக்கப்படுவதாக இந்த நிகழ்வின் போது அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை வெடிபொருட்களை…

Read More

பாகிஸ்தானின் 8 போர் விமானங்களை இலங்கை கொள்வனவு செய்கிறது

இலங்கைக்கு தமது நாட்டின் 8 ஜேஎப்-17 போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான உடன்படிக்கையை பாகிஸ்தான் செய்துக்கொண்டுள்ளது. பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் செரீப்பின் தற்போதைய இலங்கை விஜயத்தின் போது இது சாத்தியமாகியுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் அழுத்தம் காரணமாக இந்த ஜேஎப் 17 போர் விமானங்களை இலங்கை கொள்வனவு செய்யாது என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் நவாஸ் செரீப்பும் மைத்திரிபால சிறிசேனவும் நேற்று (5) செய்து கொண்ட 8 உடன்டிக்கைகளில், பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையில் இந்த 8 விமானங்களை இலங்கைக்கு…

Read More

வீதிகளில் தனிமையில் செல்லும் பொதுமக்கள் மிக அவதானம்

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் அண்மைக்காலங்களாக வீதியோரத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையினால் வீதிகளில் தனிமையாகச் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ளுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில். கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களில் உள்ள சன நடமாட்டம் குறைவாக உள்ள உள்வீதிகளினால் பொதுமக்கள் தங்க ஆபரணங்களை அணிந்து செல்லும்போது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வருபவர்கள் தங்க ஆபரணங்களை அபகரித்துச்செல்லும் நடவடிக்கைகள் அதிகரித்துக்  காணப்படுகின்றது. இதனை தவிர்த்துக்கொள்வதற்காக வேண்டி குறிப்பாக பெண்கள்…

Read More

ரஷ்யா உருவாக்கும் எலி படை

சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.களை ஓழிப்பதில் ரஷியா தீவிரமாக உள்ளது. அதற்கான புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. ஐ.எஸ். களை அழிக்க திறமை வாய்ந்த ‘எலிகள் ராணுவ படை’யை தயார் செய்து வருகிறது. எலிகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக உள்ளதால் அவற்றை ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தில் பயன்படுத்த ரஷியா முடிவு செய்துள்ளது. எலிகளின் மூளையை இணைக்கும் மைக்ரோ சிப் ஒன்றைய சிகிச்சையின் மூலம் அதன் தலைக்கு உள்ளே வைக்கப்படும். இதன் மூலம் எலிகளின் மூளை…

Read More

நவாஸ் ​ஷரீப் கண்டிக்கு விஜயம்

நாட்டிற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ​ஷெரீப் கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு செல்லவுள்ளார். அத்துடன் பாகிஸ்தான் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கண்டி ஜின்னா மத்திய நிலையத்திற்கும் அவர் செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது . பாகிஸ்தான் பிரதமர் பேராதனை தாவரவியல் பூங்காவிற்கும் செல்லவுள்ளதுடன் அங்கு மரக்கன்று ஒன்றினையும் நடவுள்ளார். நேற்று (5) முன்தினம் நாட்டிற்கு வருகை தந்த பாகிஸ்தான் பிரதமரை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

மஹிந்த சூழ்ச்சிகள் மூலமே தோற்கடிக்கப்பட்டாராம்

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இலங்கை நாட்டு வரலாற்றில் மிகவும் இருண்ட தினம் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தொம்பே உடுபில பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது  உரையாற்றிய அவர், நல்லாட்சி அரசாங்கம் மகிந்த மீது கொண்டுள்ள அச்சமே இதற்கான காரணமாகும்.நல்லாட்சி அரசாங்கம் மகிந்தவை அரசியலிலிருந்து ஒரம் கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம்…

Read More

சோள உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படலாம்

க்லைபோசெட் எனும் களைநாசினியை தடைசெய்தமையால் சோளஉற்பத்தியில் 20 வீதம் வீழ்ச்சி ஏற்படலாம் என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். யாரையும் பழிவாங்குவதற்காக இந்த களைநாசினியை தடை செய்யவில்லை எனவும் குறித்த களைநாசினியால் ஏற்படுகின்ற பாதிப்பை கருத்திற்கொண்டே  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின்போது நிவாரண அடிப்படையில் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட உரத்தை 1200- 1300 ரூபாய்க்கே விற்பனை செய்ய முடியும் எனவும் சில வர்த்தகர்கள் அதனை 3000-3500 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாகவும்…

Read More