Headlines

14 வயது இலங்கை மாணவன், விமானத்தை கண்டுபிடித்து சாதனை (படங்கள்)

பானந்துகம – அகுரஸ்ஸ  பகுதியைச் சேர்ந்த  திஸல் இன்துல (14 வயது) விமானம் ஒன்றை அமைத்து சாதனை படைத்துள்ளான். கொடபிடிய தேசிய பாடசாலையில் தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவனாகும். இவரது முயற்சியால் ரிமோட்டினால் பறக்கும் ஆகாய விமானம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். மேலும் தற்போது ஒருவர் அமர்ந்து செல்லக்கூடிய விமானம் ஒன்றை உருவாக்கி வருவதாக குறிப்பிட்டார். குறித்த மாணவன் எதிர்காலத்தில் பொறியியலாளராக வரவேண்டும் என ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனை

கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு மாத்தறை உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு மொரவக்க, கொட்டபொல பிரதேசத்தில் நபர் ஒருவரை கூரிய ஆயுத்தில் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 72 மற்றும் 64 வயதுடைய இருவருக்கே  இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மண் மேடு சரிந்து விழுந்ததில் மாணவன் பலி : நாவலப்பிட்டியில் ​சம்பவம்

– க.கிஷாந்தன் –  நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மாணவனொருவன் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 4இல் கல்வி பயிலும் 09 வயதுடைய திருச்சந்திரன் கோஷிகன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். குறித்த மாணவன் பாடசாலை விட்டு வீடு திரும்பிய போது, வீட்டுக்கு அருகில் உள்ள மண்மேடு சரிந்து விழுந்ததில் மண்மேடுக்குள் புதையுண்டு உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத…

Read More

கடந்த காலத்தை மறப்போம், மன்­னிப்போம் – வாசு­தேவ

கடந்த காலத்தை மறப்போம்  மன்­னிப்போம். எதிர்­கா­லத்தில் தேசிய நல்­லி­ணக்­கத்­துடன் செயற்­ப­டுவோம் என யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான விசா­ர­ணைக்கு “வியாக்­கி­யானம்” வழங்­கிய ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் பொதுச் செய­லா­ளரும் எம்.பி.யுமான வாசு­தேவ நாண­யக்­கார சர்­வ­தேச விசா­ர­ணைக்கு எதி­ராக மித­வாதத் தமிழ்த் தலை­வர்­களை கடந்த தேர்­தலில் தமிழ் மக்கள் வெற்றிபெறச் செய்­துள்­ளனர் என்றும் அவர் தெரி­வித்தார். கொழும்பில் இடம்­பெற்ற ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மாநாட்டில் உரை­யாற்றும் போதே அதன் பொதுச் செய­லா­ளரும் எம்.பி.யுமான வாசு­தேவ நாண­யக்­கார இவ்­வாறு தெரி­வித்தார்….

Read More

UPFA பாராளுமன்ற குழுத் தலைவராக நிமால்

க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நிமால் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குழுத் தலைவர் என்ற வகையில் தமது கடமைகள் எவ்வாறு அமையும் என்பதனை தெரிந்து கொள்ள அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சபாநாயகரை சந்தித்துள்ளார். ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியதாக அமைச்சரின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள்…

Read More

“நான் என்றும் அகமதுக்கு ஆதரவாக நிற்பேன்” – ஒபாமா

அறிவியலில் ஆர்வம் உள்ள எந்த மாணவனும் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை தான் அமெரிக்காவின் 14 வயது மாணவரான அகமதுவும் செய்தார். ஆனால் அகமது உருவாக்கிய மின்னணு கடிகாரம் அவர் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்படும் சூழலை உருவாக்கியது. இப்போது அகமதுவுக்காக இணையம் குரல் கொடுத்து வருவதோடு, அமெரிக்க அதிபர் ஒபாமா, பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் ஆகியோரின் ஆதரவும் கிடைத்திருக்கிறது. மாணவர் அகமது நிச்சயம் கடிகாரத்தை உருவாக்கியதற்காக கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் அது தான்…

Read More

முஸ்லிம் என்பதால் கைதுசெய்யப்பட்ட 14 வயது மாணவன்

அமெரிக்காவில் டெக்ஸாஸ் இர்விங்கில் வசிக்கும் அகமது முகமது.. 14 வயதுச் சிறுவன். அங்குள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். எலெக்ட்ரானிப் பொருட்களை புதிது புதிதாக வடிவமைப்பது அவனுடைய பொழுது போக்கு. கடந்த திங்கள் கிழமையன்று தான் லேட்டஸ்டாக வடிவமைத்த எலெக்ட்ரானிக்ஸ் கடிகாரம் ஒன்றை பள்ளிக்கூடத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறான் அகமது. அவனது வகுப்பாசிரியரிடம் சென்று காட்டியவுடன், “நன்றாக இருக்கிறது. ஆனால் வேறு யாரிடமும் இதைக் காட்ட வேண்டாம்” என்று அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு…

Read More

ஐ.நாவின் விசாரணை அறிக்கை

ஐக்கிய நாடுகள் அறிக்கை இலங்கையில் பாரதூரமான மீறல்களின் வடிவங்களை உறுதிப்படுத்தும் வேளையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சையிட், ஒரு சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு அழுத்தம் கொடுக்கின்றார். ஜெனீவாவில் இன்று வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் 2002 இல் இருந்து 2011 ம் ஆண்டு வரை பாரதூரமான உரிமை மீறல்களின் வடிவங்களை அடையாளம் கண்டுள்ளது. இவை இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் இருதரப்பினராலும் பெரும்பாலும் இழைக்கப்பட்டிருக்கலாம் என்று வெளிப்படுத்துகின்றன. இவ்வறிக்கை,…

Read More

நீதி பெற்றுத் தாருங்கள் ;ஜெனீவா சென்ற முஸ்லிம் தாய் (video)

2009 செப்டெம்பர் மாதம் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இருக்கும்போது எனது மகனை கடத்தி விட்டார்கள். ஐ.நாவில் முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் வந்திருக்கிறேன். புதிய அரசாங்கம் வந்தாலும் வேலையில்லை. மகிந்த அரசாங்கத்திற்கு ஆதரவாகவே அவர்கள் பேசுகிறார்கள். எனது மகனை கோத்தபாய ராஜபக்ச தான் கடத்தியுள்ளார் என்பது நன்றாகவே தெரியும் என முஸ்லிம் பெண்ணொருவர்  வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Read More

எதிர்காலத்திற்கும் எமது பங்களிப்புக்களை வழங்க வேண்டும் – றிஷாத் பதியுதீன்

– இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் – நாம் மட்டும் கற்றுவிட்டோம் என்று நினைக்காமல் எதிர்காலத்திற்கும் எமது பங்களிப்புக்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் வறுமையினை காரணம் காட்டி கல்விக்கு முடிச்சு போடவோமெனில் எமது சமூகம் 3 ஆம் தரத்திற்கு தள்ளப்பட்டுவிடும் என்று எச்சரிக்கையினையும் விடுத்தார். மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 15 வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு கல்வி மற்றும் சமூக நலன் மேம்பாட்டுக்கான…

Read More

அமான் அஸ்ரப் தனது தந்தைக்காக துஆ பிராத்தனையில் (Photo)

– அஸ்ரப் ஏ சமத் – மறைந்த தலைவா்  எம். எச்.எம் அஸ்ரபின் 15வது வருட வபாத்த தினமான நேற்று இரவு  கொழும்பு  திம்பிரிகாசாயாவில் உள்ள அமான் அஸ்ரப் இல்லத்தில்  தனது தந்தைக்காக துஆ பிராத்தனையில் ஈடுபட்டாா்.  இந் நிகழ்வின் போது அமைச்சா் றிஷாதும் கலந்து கொண்டாா்.

Read More

மாதாந்த சம்பளத்தை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒதுக்கிய அமைச்சர் றிஷாத்

– எஸ்.எச்.எம்.வாஜித் – மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் 16வது வருட ஞாபகார்த்த நாளான இன்று (16)அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது. இதில் 130 பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசிலும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள். தலைவரின் ஞாபகார்த்த நாளில் ஆரம்பித்து வைக்கபட்ட இந்த சமூக பணி தொடர்ந்தும் நடை முறைப்படுத்தப்படும் என்றும் இதற்காக அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்க உத்தேசித்துள்ளதாகவும் கூறினார். இவ்வாறான சதகத்துல்…

Read More