Headlines

சாதிக்கு சமாதி கட்டிய, தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாத்

குப்பை அள்ளுவது, சாக்கடை சுத்தம் செய்வதெல்லாம் ‘தோட்டி’ களின் (கீழ் சாதி) வேலை என்று ஒரு மரபு இருந்தது தமிழகத்தில். அந்த மரபை உடைத்து சென்னையை சுத்தம் செய்கிறோம் என்று அறிவித்து 30000 இளைஞர்களை களத்தில் இறக்கியது தவ்ஹீத் ஜமாத். தமிழக அரசே என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருக்கும் போது மள மள வென்று இளைஞர்கள் களத்தில் இறங்கினர். அவர்களோடு சேர்ந்து தமுமுகவும், எஸ்டிபிஐயும் துப்புரவு தன்னார்வலர்களை களத்தில் இறங்கியது. உடன் காட்சிகள் மாறத்…

Read More

உழைக்கும் மக்கள் போராட்டம் நடத்துவதில் பிழையில்லை!– மஹிந்த ராஜபக்ச

உழைக்கும் மக்கள் போராட்டம் நடத்துவதில் பிழையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் பறிக்கப்படும் போது அதற்காக குரல் கொடுப்பது அவர்களின் உரிமையாகும். அதனை எந்த வகையிலும் பிழையாக கருத முடியாது. வேலை நிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்காதவர்கள் பற்றியே பிரச்சினை காணப்படுகின்றது. வரவு செலவுத்திட்டத்தில் எந்தவொரு தரப்பும் பிளவடைந்திருக்கப் போவதில்லை. எதிர்க்கட்சி எதிர்க்கட்சியேயாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அலுத்கம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில்…

Read More

ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதியவர் கைது

கண்டியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதிய ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். 20 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களை சமர்ப்பித்தல், போலிப் பெயரில் பரீட்சை எழுதியமை, மோசடியில் ஈடுபட்டமை போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட குறித்த நபரை,  கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இரண்டு இலட்ச ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உண்மையான பெயரைக் கொண்ட பரீட்சாத்தியையும் விசாரணைக்குட்படுத்த…

Read More

2500 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

மனித வலு நிறுவனத்தினூடாக மின்சாரசபையில் சேவையாற்றும் 3700 பணியாளர்களில் 2500 பேருக்கு நிரந்த நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி வழங்கப்படவுள்ளது என மின்வலு மற்றும் புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சர் நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார். இலங்கை மின்சாரசபையின் ஆட்சேர்ப்பு விதிமுறைகளுக்கமைய தகைமைகள் ஆராய்ந்து பார்த்த பின்னர் ஏனையோரும் இணைத்துக்கொள்ளப்படுவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

தவ்ஹீத் ஜமாஅத்திடம் நாங்கள், படிப்பினை பெற வேண்டும் – வை.கோ.

குறிப்பிட்ட சமூகம் மட்டுமே குப்பைகளை அள்ள வேண்டும் என்ற நிலையை உடைத்து அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கிய தவ்ஹீத் ஜமாஅத்தின் பணி பாராட்டுக்குரியது. நாங்கள் படிப்பினை பெறுகிறோம். – வைகோ, பொதுச்செயலாளர், மதிமுக

Read More

உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்களுக்கு, நாம் ஆதரவு தர வேண்டும் – கூகுள்

முஸ்லிம்கள், சிறுபான்மையினருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து கருத்து வெளியிட்டிருக்கிறார் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: அச்ச உணர்வு நமது மதிப்பீடுகளைத் தோற்கடிக்க அனுமதிக்கக் கூடாது. அமெரிக்கா மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள், பிற சிறுபான்மையினருக்கு நாம் ஆதரவு தர வேண்டும். பல்வேறு பின்னணி, கருத்துகள், அனுபவங்களால்தான் அனைவருக்கும் பயன்படும் சிறந்த செயல்கள், முடிவுகள் கிடைக்கும். அனைவருக்கும் தங்களின் கருத்துகளை வெளியிடும் உரிமை உண்டு. ஆனால், சிலர்…

Read More

அமைச்சர் றிஷாத் – மலேசியா அமைச்சர்களுடன் சந்திப்பு

மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அன்னாட்டு சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் முஸ்தபா முஹம்மத் மற்றும் மலேசியாவின் பிரதமர் முஹம்மத் னஜீப் பின் துன் ஹாஜி அப்துல் ரசாகினையும் சத்தித்து கலன்துரையாடுவதையும்,வெளினாட்டு வர்த்தக அமைச்சருக்கு ஞாபகார்த்த சின்னம் ஒன்றினை வழங்குவதையும்,அருகில் இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர்,கலானிதி ஜெமீல் இருப்பதையும் படங்களில்

Read More

தாஜூதீன் கொலை; மஹிந்தவின் வாகன சாரதி விரைவில் கைது

முன்னாள் றக்பி வீரர் வஸிம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார். சீசீடிவி கமரா மூலம் அடையாளம் காணப்பட்ட அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தாஜூதீன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சீசீடிவி கமராவின் படங்கள் கிடைத்துள்ளன. இவை தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவின் சாரதியாக இருந்த இராணுவ வீரர் உட்பட இதன் பின்னர் பலர் இந்த மரணம் தொடர்பில் கைது…

Read More

மஹிந்த ரெஜிமன்ட் முஸ்லிம்களை தாக்குகிறார்கள்

– அஸ்ரப் ஏ சமத் – பாராளுமன்றத்தில் ஊடக அமைச்சிற்கான வரவு செலவுத்திட்ட விவாத்தின்போது பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க உரையாற்றும்போது பாராளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக சில ராஜபக்ச ரெஜிமன்ட் உறுப்பினர்கள் தாக்குவதற்கு வந்துள்ளனா். கடந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தான் பாராளுமன்றதுக்கு வெளியில் வைத்து முஸ்லீம்களை எல்லாம் அடித்தீா்கள். அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்த பிறகு தற்பொழுது அந்த சண்டித் தணத்தை பாராளுமன்றத்திற்குள் கொண்டு வந்து முஸ்லீம் எம்.பிக்கு அடிக்க வருகின்றீா்கள். இதனை நாம்…

Read More

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டவர் இந்தியாவில் உயிருடன் இருக்கின்றார்

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சென்னை டாக்ஸி சாரதி இந்தியாவில் உயிருடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பூமிதுரை எனப்படும் டாக்ஸி சாரதியின் சடலம் அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த சடலத்துடன் காணப்பட்ட அடையாள அட்டையின் அடிப்படையில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், 41 வயதான குறித்த சாரதி உயிருடன் இருப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்த நபர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை எனவும் இராமேஸ்வரத்தில் உயிரிழந்த நபரின் சடலம், இலங்கைக் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்…

Read More

மாகாணசபைகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்ய ஜனாதிபதி தீர்மானம்

மாகாணசபைகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். கடந்த காலங்களைப் போன்றே எதிர்வம் 2016ம் ஆண்டிலும் மாகாணசபைகளுக்கு நேரடியாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதற்கு முன்னதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டத்தில் மாகாணசபைகளுக்கு, உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. எனினும் இந்த யோசனைத் திட்டத்தை மாகாண முதலமைச்சர்கள் கடுமையாக எதிர்த்திருந்தனர். ஜனாதிபதி, நிதி அமைச்சர், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும்…

Read More

2050-க்குள் உலகில் அதிக முஸ்லிம்கள் கொண்ட நாடாக இந்தியா மாறும்

2050-ம் ஆண்டிற்குள் உலக அளவில் அதிக முஸ்லீம்கள் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பியு ஆராய்ச்சி மையம் இந்த கருத்தினை தெரிவித்துள்ளது. அதேபோல், 2050-ம் ஆண்டிற்குள் ஐரோப்பிய மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 10 சதவீதம் இருப்பார்கள் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தற்போதையை நிலவரப்படி உலக அளவில் அதிக முஸ்லீம்கள் வாழும் நாடாக இந்தோனேசியா உள்ளது. அதற்கு அடுத்தபடியாக முஸ்லீம்கள் அதிகம் வாழும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது….

Read More