Headlines

தனியார்துறைக்கு சம்பள உயர்வு; 2016ல் சட்டம் நிறைவேறும்!

தனியார்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புத் தொடர்பில் தொழில் அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு 2016ஆம் ஆண்டில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன், தோட்டத் தொழிலாளர்களுக்கும் உறுதியளித்தப்படி சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பாதனியவின் செயற்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்….

Read More

வசிம் தாஜுதீனின் கொலை; அநுர சேனநாயக்கவிடம் விசாரணை

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜுதீனின் கொலை தொடர்பிலான சி.சி.டி.வி கமெராவின் காட்சிகள் தொடர்பில், அடுத்த 14 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸ், கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு நேற்று (10) கட்டளையிட்டார். இந்த சம்பவம் தொடர்பிலான காட்சிகள் அடங்கிய இறுவட்டுகள் (சீடி) நான்கு, பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வாகனம், அங்கிங்கும் பயணம் செய்வதுபோன்ற காட்சிகளும் அதில் இருக்கின்றன என்று இரகசிய பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். இதேவேளை,…

Read More

அமைச்சர் றிஷாதோ, முஸ்லிம்களோ காட்டை அழிக்கவில்லை – ராஜித

-அஷ்ரப் ஏ சமத்- வாராந்த அமைச்சரவை முடிவுகளை ஊடகங்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு நேற்று (10)ஆம் திகதி மு.பகல் 11.00 மணிக்கு பாராளுமன்றத்தில் அமைச்சா் டொக்டா் ராஜித்த சேனாரத்தினாவில் தலைமையில் நடைபெற்றது. இங்கு ஊடகவியலாளா் ஒருவா் கேட்ட  கேள்வி –  அமைச்சா் றிஷாத் பதியுதீனால்  வில்பத்து காடுகள் அழிக்கப்பட்டு அங்கு மக்கள் குடியேற்றப்படுகின்றனா்    அது பற்றி அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன ? இதனை நீங்கள் அறிவீா்களா ? அமைச்சா் டொக்டா் ராஜித்த  பதில் – அவ்வாறு அந்த…

Read More

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவராக அமீர் அலி நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவராக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி நியமிக்கப்பட்டுள்ளார். 08 ஆம் திகதி மாலை பிரதி அமைச்சா் அமீா் அலி மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழு தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நியமித்துள்ளார்.

Read More

ஐ.நாவின் அனைத்துலக பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திட தீர்மானம்

பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்படுவதில் இருந்து அனைத்துக் குடிமக்களையும் பாதுகாப்பது தொடர்பான ஐ.நாவின் அனைத்துலக பிரகடனத்தில் இலங்கையும் கையெழுத்திடவுள்ளது. இந்த முக்கியமான பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு,  அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவார். பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்படுதலை ஒரு மனித உரிமை மீறலாக இந்தப் பிரகடனம் வரையறுப்பதுடன், இதனை ஒரு குற்றவியல் நடவடிக்கையாக கருதும் வகையில் சட்டங்களை வகுக்கவும் உறுப்பு நாடுகளை வலியுறுத்துகிறது….

Read More

வசிம் தாஜூதீனின் கொலை வழக்கு தீர்ப்பு இன்று அறிவிக்கப் படாது

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூதீனின் கொலை தொடர்பாக, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரை விசாரணை செய்யுமாறு, நீதிமன்றம் குற்றப்புலனாய்வு அதிகாரிகளை பணித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது. மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், சந்தேகத்துக்கிடமாகவுள்ள இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த வாசக்கின் தீர்ப்பு இன்று…

Read More

ஐக்கிய மலாய தேசிய அமைப்பின் பொதுக்கூட்டம்: அதிதியாக அமைச்சர் றிஷாத்

ஐக்கிய மலாய தேசிய அமைப்பின் (UMNO) வருடாந்த பொதுக்கூட்டம், இன்று (10) மலேசியா, கோலாலம்பூர், பியூட்றா உலக வர்த்தக நிலையத்தில் ஆரம்பமானது. அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்கள் இந்நிகழ்வில் அதிதியாக பங்கேற்றார். இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஜமீலும் கலந்துகொண்டார். உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும், பிரமுகர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Read More

தவறிழைத்தோர் தனது குடும்பப் பெயரைக் கூறித் தப்பிக்க முயற்சி –

கடந்த காலங்களில் தவறிழைத்த பிரிவினர் தமது குடும்பத்தினரின் பெயரைப் பயன்படுத்தி அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்துவருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ராஜபக்ச குடும்பத்தினர் மீது தற்போது பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். உதாரணமாக அவன்கார்ட் விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும்…

Read More

இது சிங்களவரின் நாடு ஏனையோர் வந்தேறு குடிகள் – ஞானசார தேரர்

வரலாற்று ரீதியாக இந்த நாட்டின் மக்கள் சிங்களவர்களே. பாதைகள் அமைப்பதற்கும், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தோட்டங்களில் பணியாற்றுவதற்காகவுமே ஏனைய இனத்தவர் இந்த நாட்டுக்கு வந்தனர். இந்த நாடு சிங்களவர்களின் நாடு. நாட்டில் தோன்றியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தமிழ் மக்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும். இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அந்த அமைப்பின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இது சிங்களவர்களின்…

Read More

ரயிலில் மோதுண்டு கரடி பலி

முல்லைத்தீவு – பழைய முறிகண்டி பகுதியில் ரயிலில் மோதுண்டு கரடியொன்று பலியாகியுள்ளது, இந்த பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகளும் ரயிலுடன் மோதுண்ட பல சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியிருந்த நிலையில், நேற்று இரவு இந்த கரடி ரயிலில் மோதுண்டு பலியாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இவ்வாறு வன விலங்குகள் தொடர்ந்தும் பலியாகி வருகின்றமை தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கினறனர். அருகிவரும் கரடி இனத்தை சார்ந்த…

Read More

குவைத்தில் நிர்க்கதியான பணிப்பெண்கள் 83 பேர் நாடு திரும்பினர்!

குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்று அங்கு நிர்க்கதியான சில இலங்கையர்கள் நேற்று(9) நாடு திரும்பியுள்ளனர். இதன்படி 83 பேர் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் மட்டக்களப்பு, அனுராதபுரம், கண்டி, மாத்தளை, குருநாகல் மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும் குவைத் நாட்டிற்கு பணிப் பெண்களாக சென்று அங்கு பல்வேறு இன்னல்களையும் எதிர்நோக்கிய நிலையில், அந்த நாட்டிலுள்ள இலங்கைக்கான தூதரகத்தில் தங்கியிருந்த குழுவினரே…

Read More