மேல் மாகாண முஸ்லிம்களின் கல்வியில் இனவாதம்?
– றிஹாம் – மேல் மாகாண கல்வித்திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட நாடகப்போட்டி இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரியில் உயர் கல்வி அதிகாரி ஒருவரின் தலைமையில் நேற்று நடைபெற்றது. குறித்த இப்போட்டி நிகழ்ச்சியில் 07 பாடசாலைகள் பங்கு பற்றின. அதில் இரண்டு பாடசாலைகள் முஸ்லிம் பாடசாலைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நிகழ்ச்சிகள் அனைத்தும் குறித்த பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றபோதும் அம்மண்டபத்தின் அனைத்து நுழைவாயில்கள், ஜன்னல்கள் குறித்த கல்வி அதிகாரியினால் மூடப்பட்டன. அத்தோடு மூடிய அறையில் அரங்கேற்றப்பட்ட நிகழ்சிக்கு…
