மீண்டும் ஹஜ் சர்ச்சை: கோட்டா மீள் பகிர்வுக்கு முகவர்கள் ஆட்சேபனை
ஹஜ் குழுவினால் நேற்று உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட முகவர்களுக்கிடையிலான கோட்டா மீள்பகிர்வு பட்டியலிலும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறி ஹஜ் கோட்டா மீள் பகிர்வுக்கு முகவர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதியரசர் வழங்கிய ஹஜ் வழிகாட்டல்கள்(Guide Lines SCFR 500/2012) மீண்டும் மீறப்பட்டுள்ளமையினால் கோட்டா பகிர்வினை ஏற்றுக் கொள்ள முடியாதென பெரும்பாலான ஹஜ் முகவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் இலங்கையருக்கான ஹஜ் கேள்விக்குறியாகியுள்ளது. ஹஜ் முகவர்களுக்கான நேர்முகப்பரீட்சை ஒரு சுயாதீனக் குழுவினால் நடாத்தப்பட்டாலும்…
