Headlines

மகிந்தவின், குடியுரிமை இரத்தாகும் – ஜனாதிபதி

மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த போது சுனாமி அனர்த்தம் காரணமா வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் போர்வையில் விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மகிந்த ராஜபக்சவின் குடியுரிமையை இரத்துச் செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குருணாகலில் இன்று நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால…

Read More

அஷ்ரப் கண்ட கனவு இன்று றிஷாத் பதியுதீன் ஊடாக நனவாகவுள்ளது -இஸ்மாயில்

எம்.சி.அன்சார் நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் அந்த மாற்றத்தினை முஸ்லிம் மக்களால் முழுமையாக சுவைக்க முடியவில்லை. குறுகிய அரசியல் வட்டத்துக்குள் கட்டண்டு மீள முடியாமல் தவிக்கின்றனர். அவற்றிலிருந்து சமூகத்தை விடுவிப்பதே எனது முதற்பணியாகும். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார். எதிர்வருகின்ற பொதுத்தேர்தல் தொடர்பில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை(19) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார். முஸ்லிம் சமூகம் தனித்துவமாக இருந்து…

Read More

மாளிகாவத்தை பள்ளிவாசல் மீதான தாக்குதல்

மாளிகாவத்தையில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பார்வையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதன்போது வெளியே வந்த தரப்பினர் வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சிலவற்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் சில வாகனங்கள் சேதமடைந்தன இதனால் மாளிகாவத்தையில் பதற்ற நிலை ஏற்பட்டதாகவும் உடனடியாக பொலிஸ், அதிரடிப்படை, இராணுவ வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது இந்நிலையிவ் மாளிகாவத்தை…

Read More

தபால் மூல வாக்களிப்பிற்கு மகிந்த விண்ணப்பிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் செயலக தெரிவித்துள்ளன. மகிந்த ராஜபக்சவின் பெயர் அம்பாந்தோட்டை மாவட்ட வாக்காளர் இடாப்பிலேயே இருப்பதனால்அவரின் வாக்கு உரிமை அந்த மாவட்டத்திலேயே இருக்கின்றது. இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதனால் தனக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி மகிந்த ராஜபக்சவுக்கு தபால் மூல வாக்களிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக…

Read More

நாளை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் -ACJU உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதால் நாளை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Read More

கடமை தவறாத தொழிலாளி!

சவுதி அரேபிய உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பம் வாட்டி வதைக்கும் சூழலில் தான் ரமளான் மாதம் வருகை தந்தது. வாட்டி வதைக்கும் வெப்பத்திர்கு இடையேயும் கடுமையான பணிகளுக்கு இடையேயும் ஒரு துப்பரவு தொழிலாளி இறைவனுக்கு கடமைதவறாதவராக காட்சி தருவதை தான் படம் விளக்குகிறது

Read More

நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள்

ஷவ்வால் மாதத்திட்ககான பிறை தென்பட்டதை அடுத்து நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள் கொண்ட்டடப்பட உள்ளதாக  SLTJ சற்றுமுன் அறிவித்தது. ஆனால் இதுவரை ஜம்மியத்துல் உலமா இதுபற்றி உத்தியோகபூர்வ மாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. SLTJ அறிவிப்பு:

Read More

அமைச்சர் றிஷாதின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இலங்கை வாழ் முஸ்லிம் சமுகம் இன்று மலர்ந்துள்ள புதிய ஆட்சியில் நிம்மதியாகவும் கௌரவாகவும் வாழ்வது போல் – மலரும் புது ஆட்சியிலும் அதே கௌரவத்துடனும் நிம்மதியுடனும் வாழ இன்றைய தினத்தில்; பிரார்த்திப்போம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் கைத்தொழில் வானிபத் துறை அமைச்சருமான ரிசாத் பதியுதீன் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, புனித ரமழான் மாதம் நிறைவடைந்து நோன்புப் பெருநாளை இன்று கொண்டாடும்…

Read More

ஆட்டோ டிரைவரை பலாத்காரம் செய்த 2 இளம் பெண்கள்!

இரு இளம் பெண்களிடம் சிக்கி பலாத்காரத்துக்கு உள்ளான ஆட்டோ டிரைவர், மாடியில் இருந்து குதித்து தப்பியோடிய சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்துவருபவர் உமேஷ். நேற்றுமுன்தினம் இரவு, இளம் பெண் ஒருவர் இவரது ஆட்டோவை மறித்து, சபடார்ஜங் என்கிளேவ் பகுதிக்கு செல்ல கூறியுள்ளார். ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, நடுவே ஒரு கடையின் அருகே வண்டியை நிறுத்த சொன்ன அந்த பெண், தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி, உமேஷிடம் ரூ.300…

Read More

நபிமார்கள் கேட்ட துஆக்கள்!

01. துஆக்கள் ஏற்கப்பட நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ ) “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” (அல்குர்ஆன் 2: 127-128) 02. ஈருலக நன்மை பெற நபி ஸல்லல்லாஹு…

Read More

மத்திய கிழக்கு உட்பட நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடும் நாடுகள்

ஷவ்வால் பிறை தென்பட்டதை அடுத்து நாளை கத்தார், ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி, நியூசிலாந்து , சிங்கப்பூர், ஜப்பான், மலேசியா, மற்றும் இந்தோனேசியா, U.K  உட்பட அனேக நாடுகளில்  நோன்புப் பெருநாள் கொண்ட்டடப்படுகிறது. வெளிநாட்டுவாழ், வாசகர்களுக்கு எமது இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

Read More

தேசிய சூரா சபை விடுத்துள்ள விஷேட வேண்டுகோள்…!

எதிர்வரும் நோன்புப் பெருநாள் தினத்தை நிர்ணயம் செய்யும் விடயமாக மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என தேசிய சூறா சபை சமூகத்தின் சகல தரப்பினையும் பணிவாக வேண்டிக் கொள்கிறது. கடந்த வருடத்துக்கு முன்னைய வருடம் ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் விடயத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் ஏற்படுத்திய வடுக்களை நாம் இச்சந்தர்ப்பத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும். பரஸ்பர விமர்சனங்கள், கண்டனங்கள் மறுப்பறிக்கைகள், ஏளனங்கள் என்று அப்பட்டியல்  நீண்டு கொண்டே சென்றது. அதுமாத்திரமன்றி பிற சமூதாயத்தவர்களிற் சிலர்…

Read More