Headlines

பதிலை நான் மக்களிடமே விடுகின்றேன் – றிஷாத் பதியுதீன் (நேர்காணல்)

– கிருஷ்ணி இஃபாம் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட ஐ.தே.கட்சியின் முதன்மை வேட்பாளருமான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தினக்குரல் வாரவெளீட்டுக்கு வழங்கிய செவ்வி: கேள்வி: எதிர்வரும் செப் 16ந் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உங்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது இது குறித்து உங்களது நிலைப்பாடு என்ன? பதில்: வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை தடுத்து, முஸ்லிம்களின் பூர்வீக பூமியிலிருந்து அவர்களை விரட்டியடிக்க இனவாதிகள் இடைவிடாத தொடர் முயற்சியில் ஈடுபட்டுவருவதை உறுதிப்படுத்தும் வகையில்…

Read More

அஸ்வர் ஹாஜியாரிடம் அன்பான வேண்டுகோள்!

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களால் எழுதப்பட்ட அல்-ஜிஹாத் அல்-காஇதா என்ற புத்தகத்தை முன்னாள் அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் கிழித்து எறிந்ததையிட்டு ஆச்சரியப்படுகின்றேன். முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களால் எழுதப்பட்ட அல்-ஜிஹாத் அல்-காஇதா என்ற புத்தகம் சுமார் 15 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டதாகும். அப்பொழுது முஸ்லிம் அறிஞர்கள், முஸ்லிம் புத்தி ஜீவிகள் கண்டனம் தெரிவித்து மறுப்பு எழுதினார்கள். அக்காலத்தில் பாராளுமன்றத்தில் உறுப்பினராகவும் பின்னர் அமைச்சராகவும் இருந்த அஸ்வர் கிறுக்காஜியார் எந்தவொரு நடவடிக்கையை எடுக்கவோ, வாய்பேசவோ இல்லை….

Read More

முஸ்லிம் பாடசாலைகளுக்கு, 3 நாள் விடுமுறை

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் காரணமாக அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஓகஸ்ட் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கை பிரிவு, எதிர் வரும் ஓகஸ்ட் 17-19 வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு தெரிவித்துள்ளதோடு, ஓகஸ்ட் 20ஆம் திகதி மீண்டும் பாடசாலைகளை திறக்குமாறும் தெரிவித்துள்ளது

Read More

யானை மீது ஏறிக்கொண்டு மரத்தைக் காப்பாத்துமாறு கூறுகின்றனர் – சிராஸ்

– அகமட் எஸ். முகைடீன் – கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளருமான சிராஸ் மீராசாஹிப் சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்போது சாய்ந்தமருது பிரதேச மக்கள் பெரும் ஆதரவுடன் அன்பாக வரவேற்று ஆசீர்வதித்தனர். இச்சந்தர்ப்பத்தில் மக்கள் கருத்துத்தெரிவிக்கையில் பதினைந்து வருடங்கள் அரசியல் அதிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் வைத்திருந்தபோதிலும் முஸ்லிம் சமூகத்திற்கு எந்தவிதமான பிரயோசனமும் இருக்கவில்லை. எதனையும் செய்யாத இவர்கள்…

Read More

மஹிந்த புலிகளுக்கு 169 மில்.ரூபா வழங்கியது ஊர்ஜிதம்

மஹிந்த – பசில் மறுக்கவில்லை தேசத்துரோகத்துக்கு கடும் தண்டனை ;சொத்துக்களை முடக்கி பிரஜாவுரிமையை இரத்துச் செய்யவும் சட்டத்தில் இடம் அரசியலமைப்பின் 6 ஆவது திருத்தத்தின் பிரகாரம் இலங்கைக்குள் தனியான இராஜ்ஜியம் உருவாக்க நிதி உதவி வழங்கும் நபரின் பிரஜா உரிமை 7 வருடங்களுக்கு ரத்துச் செய்யப்படுவதோடு சொத்துக்கள் யாவும் அரசுடமை யாக்கப்படும். இந்த நிலை மஹிந்த ராஜபக்ஷவுக்கும் டிரான் அலஸ¤க்கும் ஏற்படும் என ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். தான் பிரதமராக…

Read More

பொத்துவில் மன்னுக்கு கிடைக்கின்ற வெற்றியில்தான் எதிர்காலமே இருக்கின்றது – SSP மஜீத்

மஜீத் அவர்களை ஆதரித்து ஏற்பாடு செய்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பொத்துவில் பாக்கியவத்தையில் நேற்று (10) இடம் பெற்றது. இக்கூட்டத்தில் பெருந்தொகையான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தின் போது முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் எஸ்.எஸ்.பீயுமான எம். அப்துல் மஜீத் உரையாற்றுகையில்…. பொத்துவில் மக்களாகிய எங்களுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை இலகுவாக பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது இச்சந்தர்பத்தை தவர விடாமல் நீங்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்து இந்த ஊர் மன்னை காப்பாற்றுங்கள்….

Read More

இலங்கையை கைப்பற்ற ISIS திட்டம் -BBC

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் எதிர்வரும் 05 வருடத்தினுள் உலக நாடுகளில் பெரிய அளவிலான பகுதியை கைப்பற்றிக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ள வரைபடம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பி.பி.சி செய்தி சேவையினால் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டளவில் உலகின் பல நாடுகளை கைப்பற்றிக்கொள்வதற்கு இந்த  அமைப்பு திட்டமிட்டுள்ளதாக பி.பி.சி ஊடகவியலாளர் அன்ட்றூ ஹோக்ஸ்சன் என்பவரினால் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவ் வரைபடத்திற்கமைய ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பு கைப்பற்றிக்கொள்ள எதிர்பார்த்திருக்கும் பகுதிகளில் ஐரோப்பாவின் சில பகுதிகள், ஆபிரிக்காவின் சில பகுதிகள் மற்றும் ஆசியாவின் சில…

Read More

இன்று மாலை மகிந்தவின் விடயங்களை அம்பலப்படுத்துவேன் – சம்பிக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பணம் கொடுத்தமை தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை மாலைவேளையில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி அம்பலப்படுத்த உள்ளதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Read More

அமீர் அலியின் பிரசாரக்கூட்டத்திலும், காரியாலயத்தில் ஆதரவாளா்கள் மீது கடும் தாக்குதகள்

மட்டக்களப்பு கல்குடா தொகுதியில் வன்முறை அரசியல் கலாசார நடவடிக்கைகளை தவிர்த்து தேர்தல் சட்ட விதிகளுக்கமைவாக பாராளுமன்ற தேர்தலினை நடாந்த வேண்டும் என்ற முனைப்புடன் உறுதியாக மக்கள் மணதினை வென்று கல்விமாண்கள்’,உலமாக்கள், பெரியோர்களின் ஆலோசனைகளை பெற்று வன்முறையற்ற சிறந்த அரசியல் நடவடிக்கையில் பிரதியமைச்சர் ஐக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளா் அமீா் அலி ஈடுபட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. வாழைச்சேனையில் இடம் பெற்ற பிரதியமைச்சா் அமீா் அலியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சரின் வாகணத்தை இலக்கு வைத்து ஏறியப்பட்ட…

Read More

இன ஐக்­கி­யத்தை ரணிலால் மட்டுமே ஏற்­ப­டுத்த முடியும்

இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச சவால்­க­ளுக்கு முகம் கொடுக்­கவும், ஒன்­றி­ணைந்த நாட்­டுக்குள் இன ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­தவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் மட்­டுமே முடியும். ஜன­நா­ய­கத்தை ஏற்­ப­டுத்தி­யதன் விளை­வா­கவே நாட்டுக்கு எதி­ரான சவால்­களை வெற்­றி­கொள்ள முடிந்­தது என ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் வேட்­பா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது தவ­றி­யேனும் மஹிந்த ராஜ­பக்ஷ வென்­றி­ருந்தால் நாட்டில் மிகப்­பெ­ரிய குழப்பம் ஏற்­பட்­டி­ருக்கும். வடக்கில் தொடர்ந்தும் அடக்­கு­முறை கையா­ளப்­பட்­டி­ருந்தால் மற்றும் இரா­ணுவ சப்­பாத்­து­களில் தமிழ் மக்­களை அடக்கி வைத்­தி­ருந்தால் இன்று நாட்டில் மீண்டும்…

Read More

70 ஆயிரம் பொலிஸார் கடமையில்

எதிர்வரும் பொதுத்தேர்தல் காலப்பகுதியில் 70 ஆயிரத்து 549 பொலிஸ் அதிகாரிகள் கடமையில்  ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். மேலும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் : பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், தொந்தரவுகள் மற்றும் துஷ்பிரயோகங்களை விசாரிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மொரவக்க பிரதேசத்தில் நேற்று காலை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். கஹவத்தை தொடர் கொலை சம்பவம் தனக்கு நினைவில் உள்ளதாகவும் பெண்களுக்கான சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வரும் செயல்முறை துரிதப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். மேலும்,…

Read More