UPFA யில் இருந்து நான் ஏன் விலகினேன்?
மாத்தறை வாழ் மக்களுக்கு எந்தவித சேவையும் செய்ய முடியவில்லை என நான் மன விரக்தி யுடன் இருந்தேன். இதனாலேயே ஐ.ம.சு. முன்னணியில் இருந்தும் அமைச்சர் பதவியிலிருந்தும் உறுப்பினர் பதவியிலிருந்தும் நான் விலகினேன். இவ்வாறு ஐ.ம.சு.முன்னணியின் முன்னாள் அமைச்சரும், விளையாட்டு வீரருமான சனத் ஜயசூரிய கூறினார். நேற்று முன்தினம் (11) மாத்தறை – பம்புரணையிலுள்ள ஐ.தே.முன்னணியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் சாகல ரத்நாயக்கவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊழல் மோசடிகளற்றவர்களையே இம்முறை பாராளுமன்றத்திற்கு…
